Monday, January 28, 2013

பாமாலை 46-இம்மானுவேலே வாரும்

பாமாலை 46 – இம்மானுவேலே வாரும் வாருமே
O come, O come Emmanuel

’மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலை விட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ ஏசாயா 59:20

திருச்சபையின் ஆண்டு வெவ்வேறு காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இவற்றில் முக்கியமானவை, ‘அட்வெந்து’ (கிறிஸ்துவின் வருகை) காலமும், ‘லெந்து’ (கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும்) காலமுமாகும்.  இவற்றைத் தவிர பல பண்டிகை நாட்களும், திருநாட்களும் உண்டு.  ஆதித் திருச்சபையிலும், இக்காலத்தில் ஆங்கிலத் திருச்சபை போன்ற சில சபைகளிலும் பண்டிகை நாட்களுக்கு முந்தின நாள் மாலை ஆராதனை, ‘விழிப்பு ஆராதனை’ என்னப்படும். கிறிஸ்து பிறப்புத் தினத்திற்கு முந்தின நான்கு வாரங்கள் அட்வெந்து நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன.  இந்த நாட்களில், மாலை ஆராதனைகளில், பரிசுத்த கன்னிமரியாளின் கீதத்துக்கு முன்னும் பின்னும், அந்தந்தப் பண்டிகை காலத்துக்குப் பொருத்தமான ஒரு சிறிய வாக்கியம் பாடப்படுவது வழக்கம்.  சபையார் இரு பகுதியாக, அல்லது குருவானவரும் சபையாருமாக இதை மாறி மாறிப் பாடுவார்கள். இப்பாடலுக்கு ஆங்கிலத்தில் ‘Antiphon’ என்று பெயர்.

ஆதி சபையில் அட்வெந்து நாட்களில் பாடப்படும் ‘அந்திபன்’ (Antiphon), ‘ஓ’ என்னும் ஒரே எழுத்தாகும். இதைச் சில விநாடிகள் இழுத்துப் பாடுவர்.  இந்த ‘ஓ’ என்பது வேதனையைக் குறிக்கும் ஒரு தொனியாகும்.  திருச்சபையானது ஆண்டவரின் வருகைக்காக வாஞ்சையுடன் காத்திருக்கும் தவிப்பை இந்த ‘ஓ’ என்னும் தொனி குறிப்பிடும்.  சில காலங்களுக்குப் பின், இந்த ‘ஓ’ என்னும் தொனியுடன் வேதபுத்தகத்தில் நமது ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர்களாகிய ‘இம்மானுவேலே’, ‘ஈசாயின் வேர்த்துளிரே’, ‘அருணோதயமே’, ‘தாவீதின் திறவுகோலே’, ‘வல்லமை பொருந்தியவரே’ என்பவைகளும் சேர்த்துப் பாடப்பட்டன.  இன்னும் சில காலங்களுக்குப் பின், இந்த அந்திபன்களுடன் ஒரு சிறிய ஜெபமும் சேர்த்துப் பாடப்பட்டது.  கிறிஸ்துபிறப்புக்கு முந்தின ஏழு நாட்களில் மாலை ஆராதனைகளில், ஒவ்வொரு நாளும் ஓர் அந்திபன் பாடல் மட்டும் பாடப்பட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒரு பக்தன் இந்த ஐந்து அந்திபன்களையும், ஐந்து கவிகளுள்ள ஓர் அட்வெந்துப் பாடலாக எழுதினார்.  இது லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்ததால் லத்தீன் சபைகளில் மட்டும் பாடப்பட்டு வந்தது, இப்பாடல் அட்வெந்து நாட்களுக்கேற்ற ஒரு பாடலாக இருந்ததால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜான் மேசன் நீல் பண்டிதர் (John Mason Neale) அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  இப்போது இது பல பிறமொழிகளில் ஓர் அட்வெந்துகாலப் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

John Mason Neale
இப்பாடலை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலகமெங்கும் பாடப்படுவதற்குக் காரணமாயிருந்த ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.  ஜான் மேசன் நீல் பண்டிதர் 1866ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 6ம் தேதி ஈஸ்ட்டு கிரின்ஸ்டெட் என்னுமிடத்தில் தமது 48ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இம்மானுவேலே வாரும், வாருமே,
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
இம்மானுவேலின் நாள் சமீபமே.

2.    ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.

3.    அருணோதயமே, ஆ, வாருமே,
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.

4.    தாவீதின் திறவுகோலே, வாருமே,
விண் வாசலைத் திறந்து தாருமே;
ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.

5.    மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

O come, O come Emmanuel

Post Comment

Friday, January 25, 2013

பாமாலை 85-பூமி மீது ஊர்கள் தம்மில் (Stuttgart)

பாமாலை 85-பூமி மீது ஊர்கள் தம்மில் 
Earth hath many a noble city
Tune : Stuttgart

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  பூமிமீது ஊர்கள் தம்மில்
பெத்லெகேமே, சீர் பெற்றாய்,
உன்னில் நின்று விண்ணின் நாதர்
ஆள வந்தார் ராஜனாய்.
 
2.  கர்த்தன் மனுடாவதாரம்
ஆன செய்தி பூமிக்கு
தெரிவித்த விண் நட்சத்திரம்
வெய்யோனிலும் அழகு.
 
3.  சாஸ்திரிமார் புல் முன்னணையில்
காணிக்கை படைக்கிறார்;
வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,
பொன்னும் சமர்ப்பிக்கப் பார்;
 
4.  தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,
பொன் நம் ராஜன் பகரும்;
வெள்ளைப்போளம் அவர் சாவை
தெரிவிக்கும் ரகசியம்.
 
5.  புறஜாதியாரும் உம்மை
பணிந்தார்; அவ்வண்ணமே
இன்று உம் பிரசன்னம் நாங்கள்
ஆசரிப்போம், இயேசுவே.

Post Comment

Thursday, January 24, 2013

பாமாலை 287-என் பாவத்தின் நிவர்த்தியை (Phillipine)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  என் பாவத்தின் நிவர்த்தியை
உண்டாக்க, அன்பாய் ஜீவனை
கொடுத்து, சிலுவையிலே
மரித்த தெய்வ மைந்தனே
 
2.  அநேக பாவம் செய்தோனாய்
மா ஏழையும் நசலுமாய்
ராப்போஜனத்துக்கு வரும்
அடியேனைத் தள்ளாதேயும்
 
3.  நீர் பாவியின் இரட்சகர்,
நீர் யாவையும் உடையவர்,
நீர் பரிகாரி, நீர் எல்லாம்,
குணம் வரும் உம்மாலேயாம்.
 
4.  ஆகையினால், என் இயேசுவே,
குணம் அளியும், என்னிலே
அசுத்தமான யாவையும்
நிவர்த்தியாக்கியருளும்
 
5.  இருண்ட நெஞ்சில் ஒளியும்
மெய்யான விசுவாசமும்
தந்து, என் மாம்ச இச்சையே
அடங்கப்பண்ணும், கர்த்தரே.
 
6.  நான் உம்மில் வானத்தப்பமே
மகா வணக்கத்துடனே
புசித்தும்மை எக்காலமும்
நினைத்துக்கொண்டிருக்கவும்
 
7.  நான் இவ்விருந்தின் நன்மையால்
சுத்தாங்கனாய்ப் பிதாவினால்
மன்னிப்பைக் கிருபையையும்
அடைய அருள் புரியும்.
 
8.  என் இயேசுவே, நான் பண்ணின
நல் நிர்ணயம் பலப்பட,
பிசாசை ஓட்டியருளும்,
தெய்வாவி என்னை ஆளவும்
 
9.  உமக்கே என்னை யாவிலும்
நீர் ஏற்றோனாக்கியருளும்;
தினமும் எனக்கும்மிலே
சுகம் அளியும், கர்த்தரே.
 
10. நான் சாகும்போதென் ஆவியை
மோட்சானந்தத்தில் உம்மண்டை
சேர்த்தென்னை உம்மால் என்றைக்கும்
திருப்தியாக்கியருளும்.

Post Comment

Tuesday, January 22, 2013

பாமாலை 49-களிகூரு சீயோனே

பாமாலை 49 – களிகூரு சீயோனே
(Tochter Zion freue dich)


17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்தில் பிரபல இசையமைப்பாளர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஹான்டல் (George Frideric Handel) என்பவர் வசித்துவந்தார். இவர் பிறப்பால் ஒரு ஜெர்மானியராக இருந்தாலும் தன் வாழ்வின் பெரும்பகுதியை இங்கிலாந்திலேயே கழித்தார். மேற்கத்திய செவ்வியல் இசை வடிவங்களான Operas, Oratorios, Anthems, and Organ Concertos போன்ற பல்வேறு நுட்பமான வடிவங்களுக்கு இசையமைப்பதில் புகழ்பெற்று விளங்கிய இவர், Oratariums Josua என்ற இசைவடிவத்திற்கென ஒரு இசையை எழுதினார். இந்த இசையில் இருந்த 'Chor der Jünglinge' என்ற மூன்றாவது Movementற்கு (Western Classical இசையில் Symphony, Operas, Oratorios போன்ற வடிவங்களில் எழுதப்படும் இசைவடிவங்களில் சுருதி/தாள/வாத்திய மாற்றங்கள் Movement என்று அழைக்கப்படுகிறது) Friedrich Heinrich Ranke மற்றும் Johann Joachim Eschenburg ஆகிய கவிஞர்கள் ஜெர்மன் மொழியில் கிறிஸ்துவின் வருகைக்கென வரிகளை எழுதி, அதை வருகையின் காலங்களில் பாடப்படும் ”Tochter Zion freue dich” என்ற பாடலாக (Advent Carol) மாற்றினர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்பாடல் வருகையின் காலங்களில் உலகெங்கும் பரவலாகப் பாடப்படும் பாடலாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் இப்பாடல் “See the Conquering Hero” என்ற வரிகளுடன் பாடப்படுகிறது. இந்த ராகத்தில் அமைந்த ஆங்கிலப்பாடலான “Thine Be the Glory” கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையைக் குறிக்கும்வண்ணமாக ஒரு ”Easter Hymn”ஆகப் பாடப்படுகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!

2.    ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!

3.    ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!


Post Comment

Sunday, January 20, 2013

பாமாலை 60-ஓ பெத்லகேமே சிற்றூரே

பாமாலை 60 – ஓ பெத்லகேமே சிற்றூரே
O Little town of Bethlehem
Tune : St. Louis

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்” மத் 2 : 6

நம் ஆண்டவராகிய கிறிஸ்துநாதர் பிறந்தபோது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் அவரைத் தேடி, பலஸ்தீனா நாட்டுக்கு வந்து, ஏரோது அரசனின் அரண்மனையில் விசாரித்தபோது, ஏரோது கலக்கமடைந்து, யூதத்தலைவர்களை அழைத்து, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று கேட்டான்.  அவர்கள் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருந்தபடி (மீகா 5:2), யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்றனர்.  பெத்லகேம் ஒரு சிற்றூர்.  ஆனால் தாவீது அரசனுடைய வம்சத்தினர் குடியிருந்த ஊர்.  ஆதலின், யூதருக்கு ராஜாவாகிய கிறிஸ்து அவ்வூரில் பிறந்தது மிகவும் பொருத்தமானது. 

Phillips Brooks
(Source : Wiki)
1865ம் ஆண்டு, பிலிப்ஸ் புரூக்ஸ் (Phillips Brooks)  என்னும் குருவானவர் கிறிஸ்து பிறப்பு தினத்திற்கு முந்தினநாள் இரவில், பலஸ்தீனா நாட்டில் பெத்லகேம் ஊரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றிருந்தார்.  இவ்வாலயம் கிறிஸ்து பிறந்த இடம் என நம்பப்படுகிற இடத்தில், கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியால் கி.பி. நான்காவது நூற்றாண்டில் கட்டப்பட்டது.  ஆராதனைக்குமுன் புரூக்ஸ் போதகர் பெத்லகேம் ஊரைச் சுற்றிப்பார்த்து ஊரின் அழகையும், வானத்தில் நட்சத்திரங்களின் தோற்றத்தையும் கண்டு பரவசமடைந்து, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கிறிஸ்து பிறந்த இரவில் அவ்வூர் எவ்விதம் இருந்திருக்கவேண்டும் என்று தனது மனக்கண்களில் கண்டார்.  இக்காட்சி அவர் ஆயுள் முழுவதும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.  நடு நிசியில் ஆராதனைக்கு ஆலயமணியடிக்கவே, அவர் ஆலயத்தினுள் சென்று ஆராதனையில் கலந்துகொண்டார்.  இவ்வாராதனை அவரை மேலும் பரவசப்படுத்தியது.  பின்னர் அவர் தனது சொந்த நாடான அமெரிக்காவிற்குத் திரும்பினார்.

Lewis Henry Redner
(Source: Hymntime)
மூன்று ஆண்டுகளுக்குப்பின், புரூக்ஸ் போதகர் பிலடெல்பியா நகரத்தில் தூய திரித்துவ ஆலயத்தின் குருவாக பணியாற்றிவரும்போது, கிறிஸ்து பிறப்புதினத்திற்கு சில நாட்களுக்கு முன் அவரது சபை ஓய்வுநாட்பள்ளிச் சிறுவர் ஒரு கிறிஸ்மஸ் பாடல் எழுதித்தரும்படி போதகரைக் கேட்டனர்.  உடனே போதகருக்கு, அவர் மூன்றாண்டுகளுக்குமுன் பெத்லகேமில் கழித்த நள்ளிரவு ஞாபகத்துக்கு வந்தது.  ஆகவே அவர் பெத்லகேமைக் குறித்த ஒரு பாடல் எழுதத் தீர்மானித்து சிறிதுநேரத்தில், ‘ஓ பெத்லகேமே சிற்றூரே’ என்னும் பாடலை எழுதி முடித்தார்.  மறுநாள் அவ்வூர் ஆலயப் பாடகர் தலைவரும், ஓய்வுநாட்பாடசாலை மேற்பார்வையாளருமான லூயி ரெட்னர் (Lewis Redner), போதகரின் அறைக்கு வந்தபோது, இக்கவிகளை அவரிடம் கொடுத்து அதற்கேற்ற ஓர் ராகம் அமைத்துத் தருமாறு கேட்டார்.  ரெட்னர் வெகுநேரம் முயற்சி செய்தும் நல்ல ராகம் ஒன்று ஒன்றும் அமையவில்லை.  கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின இரவு அவர் தூங்கிக்கொண்டிருக்கையில் அவர் காதில் ஓர் ராகம் ஒலிப்பதுபோலக் கேட்கவே அவர் எழுந்து, அருகிலிருந்த ஒரு காகிதத்தில் ராகத்தைக் குறித்துவிட்டு, மறுபடியும் படுத்துத் தூங்கினார்.  மறுநாட்காலையில் எழுந்து அந்த ராகத்திற்கு இசை (Harmony) அமைத்து, அன்றையத் தினமே பாடசாலைப் பிள்ளைகளைப் பயிற்றுவித்துப் பாடச்செய்தார்.  இவ்விதமாக ஓர் அழகிய கிறிஸ்மஸ் பாடல் உருவானது.

இப்பாடலை எழுதிய பிலிப்ஸ் புரூக்ஸ் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் 1835ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதி பிறந்தார்.  முதலில் அவ்வூர் ஆரம்பப்பள்ளியில் பயின்று பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.  சில காலம் லத்தீன் மொழி ஆசிரியராகப் பணியாற்றியபின், குருத்துவ ஊழியத்திற்காக வர்ஜினியா திருமறைக் கல்லூரியில் பயிற்சி பெற்றார்.  1859 முதல் 1869 வரையில் பிலடெல்பியா நகரில் போதகராகப் பணியாற்றியபின், பாஸ்டன் நகரில் வெகுகாலம் போதகராகத் திருப்பணியாற்றினார்.  இறுதியில் 1891ல் மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் அத்தியட்சராக இரு ஆண்டுகள் பணியாற்றினார்.


தமது நீண்டகால ஊழியத்தின்போது அவர் கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல் பண்டிகைக்கான பல பாடல்கள் எழுதியுள்ளார். அவர் 1893ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ம் தேதி தமது 58வது வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஓ பெத்லகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2.    கூறும், ஓ விடி வெள்ளிகாள்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே,
பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்

3.    அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்

4.    வேண்ட நற் சிறு பாலரும்
இத் தூய பாலனை
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.

5.    பெத்லெகேம் தூய பாலனே
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழாதன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.
O Little town of Bethlehem

Post Comment

Saturday, January 19, 2013

பாமாலை 207 - கர்த்தாவின் தாசரே (Burnham)

பாமாலை 207 - கர்த்தாவின் தாசரே
Blow Ye the Trumpet Blow
Tune : Burnham


Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.  கர்த்தாவின் தாசரே
எக்காளம் ஊதுங்கள்;
சந்தோஷ செய்தியை
எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
 
2.  எல்லார் முன்பாகவும்
இயேசுவை உயர்த்துங்கள்
அவரே யாவர்க்கும்
ரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
 
3.  மோட்சத்தைப் பாவத்தால்
இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் ரத்தத்தால்
மோட்சம் கிடைக்குமே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
 
4.  பாவம் பிசாசுக்கும்
சிறைப்பட்டோர்களே
உங்களை ரட்சிக்கும்
மீட்பர் நல் இயேசுவே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.
 
5.  சந்தோஷ செய்தியை
எல்லாரும் கேளுங்கள்
அன்போடு இயேசுவை
இப்போதே சேருங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

Post Comment