Tuesday, February 19, 2013

பாமாலை 305-தீயோர் சொல்வதை (Beach Spring)

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2. நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3. தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Post Comment

Monday, February 18, 2013

பாமாலை 293-நிர்ப்பந்தமான பாவியாய் (St. Catherine)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
 
2.  ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்
ஸ்வாமி, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
 
3.  என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
 
4.  என் நெஞ்சின் திகில் தணித்து,
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Post Comment

Sunday, February 17, 2013

பாமாலை 262 - என் மேய்ப்பர் இயேசு (St Columba)

பாமாலை 262 – என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்
(The King of Love my Shepherd is)
Tune : St Columba

‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்’. சங்கீதம் 23:1

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் திருமறையிலுள்ள சங்கீதங்களையே பாடல்களாகப் பாடிவந்தனர். இப்போதும் பல சபைகளில் சங்கீதங்கள் ராகத்துடன் பாடல்களாகவே பாடப்படுகின்றன.  அக்காலத்திலும் சில பக்தர்களால் சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை வெகுவாக ஆலய ஆராதனைகளில் பாடப்படவில்லை.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், பல சங்கீதங்கள் ஞானப்பாடல் ரூபத்தில் அமைக்கப்பட்டு (Metrical Psalms) அவற்றிற்கேற்ற ராகங்களுடன் பாடப்பட்டன.  இக்காலத்திலும், சங்கீதங்களை மாறி மாறி வாசிப்பதற்குப் பதிலாக, ஸ்காட்லாண்ட் சபை முதலிய பல சபைகளில் சங்கீதப் பாடல்களையே பாடிவருகின்றனர்.  பின்னர் 1542ம் ஆண்டு மார்ட்டின் லூதர் இப்பாடல்களைப் புத்தக வடிவில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்குப்பின், 1562ல் ஜெனீவன் சங்கீதப்பாடல்கள் (Genevan Psalter) என்னும் பெயரால் ஒரு பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதிலுள்ள பாடல்களே கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும் மற்றும் வழிபாடுகளிலும் பாடப்பட்டுவரும் பாடல்களின் ஆரம்பமாகும்.

தற்காலத்திலும் சங்கீதங்களையே அடிப்படையாகக் கொண்ட பல பாடல்கள் நமது பாட்டுப்புத்தகங்களிலுண்டு. இதற்கு உதாரணங்கள்:

v  பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும் (சங்கீதம் 100)
v  பாமாலை 253 – கர்த்தாவே யுகயுகமாய் (சங்கீதம் 90)
v  பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம் (சங்கீதம் 136)
v  பாமாலை 212 – பகலோன் கதிர் போலுமே (சங்கீதம் 72)
v  பாமாலை 327 – வாழ்நாளில் யாது நேரிட்டும் (சங்கீதம் 34)
v  பாமாலை 375 – நீரோடையை மான் வாஞ்சித்து (சங்கீதம் 42)

‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்னும் இப்பாடல் 23ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்டது.

Sir Henry Williams Baker
ஆங்கிலத் திருச்சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் தொகுக்கப்படும்போது, அதின் தொகுப்பாளராக, ஸர் ஹென்றி பேக்கர் (Sir Henry Williams Baker) நியமிக்கப்பட்டார்.  அவர் அப்புத்தகத்தில் பல சங்கீதப் பாடல்களைச் சேர்க்க விரும்பி, பல பாடல்களைச் சேகரித்தார்.  23ம் சங்கீதத்தைத் தழுவிய சில பாடல்களும் கிடைத்தன.  ஆனால் அவை ஒன்றும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.  ஆகவே இச்சங்கீதத்தைத் தழுவிய பாடல் ஒன்றைத் தாமே எழுதத் தீர்மானித்து, ‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்ற பாடலை 1859ல் ஆங்கிலத்தில் எழுதினார்.  அவரால் எழுதப்பட்ட ஏராளமான பாடல்களில், இப்பாடலே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஸர் வில்லியம் ஹென்றி பேக்கர் 1821ம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலக் கப்பற்படையில் தளபதியாக (Admiral) பணியாற்றியவர்.  ஹென்றி பேக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் பயின்று, 1844ல் பி.ஏ. பட்டமும், 1847ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  1846ல் அவர் குரு அபிஷேகமும் பெற்று, தமது திருப்பணியை ஆரம்பித்தார்.  1851ம் ஆண்டு ஹெரிபோர்ட்ஷயர் மாகாணத்தில் மங்க்லண்ட் நகரின் பிரதம குருவாக நியமனம் பெற்றார்.  இச்சபையில் அவர் இருபத்தாறு ஆண்டுகள் பணியாற்றி, தன் வாழ்க்கையின் மிகுதியான பாகத்தை பாடல்கள் எழுதுவதிலும், பாட்டுப் புத்தகங்கள் இயற்றுவதிலும் செலவிட்டார்.  கிறிஸ்தவ உலகத்திற்கு அவர் செய்த அரிய சேவை, அவர் இயற்றிய, ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகமாகும்.  இதில் அவரே எழுதிய 37 பாடல்கள் உண்டு.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  பாமாலை 177 – நாதன் வேதம் என்றும்
v  பாமாலை 221 – கர்த்தா நீர் வசிக்கும்
v  பாமாலை 407 – விண்வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே

ஸர் ஹென்றி பேக்கர், 1877ம் ஆண்டு, தமது 56ம் வயதில் காலமானார்.  தமது மரணப் படுக்கையில் அவர் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இப்பாடலின் மூன்றாவது கவியாகும்.  அது கீழ்க்கண்டவாறு ஆங்கிலத்தில் அழகாக அமைந்துள்ளது:

‘Perverse and foolish oft I strayed,
But yet in love He sought me,
And on His shoulder gently laid
And home, rejoicing, brought me’.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.    என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2.    ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3.    நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4.    சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5.    இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6.    என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7.    என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

Post Comment

Thursday, February 14, 2013

பாமாலை 197-பிதாவே எங்களை (Unde et Memores)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
 
2.  , எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
 
3.  இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
 
4.  இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.

Post Comment

Saturday, February 9, 2013

பாமாலை 269-மனு சுதா எம் வீரா (Spean)

பாமாலை 269-மனு சுதா எம் வீரா 
O Son of Man Our Hero
Tune : Spean

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
 
2.  மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,
சத்திய வார்த்தை நீர் அருளினீர்;
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
 
3.  பாலியர் போதகா, இளைஞர் நேசா!
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
 
4.  ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;
செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!
இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.

Post Comment