Sunday, June 23, 2013

பாமாலை 391 - விண் மண்ணை ஆளும் (Almsgiving)

பாமாலை 391 – விண் மண்ணை ஆளும்

(O Lord of heaven and earth)

Tune: Almsgiving


Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1.    விண் மண்ணை ஆளும் கர்த்தரே,
எவ்வாறு உம்மை நேசித்தே
துதிப்போம்? நன்மை யாவுமே
நீர் ஈகிறீர்.

2.    உம் அன்பைக் கூறும் மாரியும்,
வெய்யோனின் செம்பொன் காந்தியும்,
பூ, கனி, விளை பயிரும்,
எல்லாம் ஈந்தீர்.

3.    எம் ஜீவன், சுகம், பெலனும்,
இல்வாழ்க்கை, சமாதானமும்,
பூலோக ஆசீர்வாதமும்
எல்லாம் ஈந்தீர்.

4.    சீர்கெட்ட மாந்தர் மீள நீர்
உம் ஏசு மைந்தனைத் தந்தீர்
மேலும் தயாள தேவரீர்
எல்லாம் ஈந்தீர்.

5.    தம் ஜீவன், அன்பு, பெலனை
ஏழாம் மா நல் வரங்களை
பொழியும் தூய ஆவியை
அருள்கிறீர்.

6.    மன்னிப்பும் மீட்பும் அடைந்தோம்
மேலான நம்பிக்கை பெற்றோம்
பிதாவே பதில் என் செய்வோம்
எல்லாம் ஈந்தீர்.

7.    தன்னயம் நஷ்டமாகுமே
உமக்களிக்கும் யாவுமே
குன்றாத செல்வம் கர்த்தரே
எல்லாம் ஈந்தீர்.

8.    தர்மத்தைக் கடன் என்பதாய்
பதில் ஈவீர் பன்மடங்காய்
இக்காணிக்கையைத் தயவாய்
ஏற்றுக்கொள்வீர்.

9.    உம்மாலே பெற்றோம் யாவையும்
தர்மத்தைச் செய்ய ஆசையும்
உம்மோடு நாங்கள் வாழவும்
அருள் செய்வீர்.

Post Comment

Friday, June 21, 2013

பாமாலை 10 - போற்றிடு ஆன்மமே

பாமாலை 10 – போற்றிடு ஆன்மமே சிருஷ்டி
(Praise to the Lord, the Almighty)

’என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி’. சங்கீதம் 103:1

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும், கடவுளைத் துதித்தல் ஒரு முக்கியமான பகுதியாகும்.  நமது பாடல் புத்தகங்களிலும் தெய்வ ஸ்துதிப் பாடல்களே முதல் பகுதியாக இடம்பெறுகின்றன.  நாம் கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெறும்போது அவரைத் துதித்தல் இயல்பான ஒரு வழக்கம்.  ஆனால் நாம் விரும்பிய காரியங்கள் நடைபெறாதிருக்கும்போது, அவரைத் துதிக்கத் தயங்குகிறோம்.  நாம் சிறிது நேரம் தனித்திருந்து, இதுவரை கடவுளிடமிருந்து பெற்றதும் இப்போது பெற்று வருகிறதுமான நன்மைகளைக் கணக்கிடுவோமானால், அவை எண்ணிக்கைக்கடங்காதாவை எனக் காண்போம்.  தாவீதரசன் தன் வாழ்க்கையில் பலவித நிலைமைகளை அனுபவிக்க நேர்ந்தது.  இவற்றிற்கு உதாரணம், சங்கீதங்கள் 95-104, 145-150.  ‘போற்றிடு ஆன்மமே’ என்னும் பாடல் 103-ஆம், 150-ஆம் சங்கீதங்களை தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

Joachim Neander
     இப்பாடலை இயற்றியவர் யோயாக்கீம் நேயாண்டர் (Joachim Neander) என்பவர்.  இவர் ஜெர்மனி நாட்டில் ப்ரெமன்  (Bremen) நகரில் 1650-ஆம் ஆண்டில் பிறந்தார்.  அந்நகரிலுள்ள ஆசிரியர் பள்ளியிலும், உடற்பயிற்சிப் பள்ளியிலும் பயின்றார்.  மாணவராயிருக்கும்போது மற்ற மாணவருடன் சேர்ந்து முரட்டுத்தனமான வாழ்க்கை நடத்திவந்தார்.  கல்வி முடிந்தபின் சில ஆண்டுகள் பிராங்பர்ட் நகரிலும் ஹுடல்பர்க் நகரிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1674-ல் டூசல்டார்ப் நகரிலுள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உழைத்தார்.  இவர் மார்ட்டின் லூதர் ஆரம்பித்திருந்த சீர்திருத்தச் சபையைச் சேர்ந்து, அதன் உதவிப் போதகராகவும் பணியாற்றினார்.  சிலகாலத்துக்குப் பின் அவருக்கும், பள்ளி நிர்வாகிகளுக்குமிடையே கிறிஸ்தவ சமயக்கொள்கைகளைக் குறித்துக் கடுமையான அபிப்பிராய பேதம் உண்டாயிற்று.  திருச்சபைக்குக் கட்டுப்படாமல், தாமாகவே ஜெபக்கூட்டங்கள் நடத்தியும், ஆலயத்தில் நற்கருணையில் பங்கெடுக்காமலும் இருந்ததால், பள்ளியை நிர்வகித்த சபைத்தலைவர்கள் அவரை ஒரு விசாரணை மன்றத்திற்கு அழைத்துச் சிறிதுகாலம் வேலையிலிருந்து நீக்கினர்.  ஆதலால் அவர் மிகவும் தளர்ச்சியுற்று, டூசல் நதிக்கரையில் தனிமையாக உலாவிக் கொண்டிருக்கையில், அருகில் ஒரு குகையைக் கண்டு, அதனுள் சென்று, ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டார்.  தனது கிறிஸ்தவ அனுபவங்கள், மற்றெல்லாருடைய அனுபவங்களைவிடச் சிறந்தவை என அவர் நம்பினார்.  தனக்கு நேர்ந்த துன்பங்களை நினைத்து வருந்தினார்.  கடவுள் தனக்குச் செய்த ஏராளமான நன்மைகள் ஞாபகத்துக்கு வரவே, அவர் ‘போற்றிடு ஆன்மமே’ என்னும் பாடலை இயற்றினார்.  இப்பாடல் முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டுச் சுமார் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் கேத்ரீன் விங்க்வர்த் (Catherine Winkworth) அம்மையாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

     யோயாக்கீம் நேயாண்டர் ஒரு சிறந்த கல்விமான். திருமறையைக் குறித்த அறிவிலும், சங்கீத ஞானத்திலும், கவித்திறனிலும் அவர் கீர்த்தி வாய்ந்தவர்.  அவர் எழுதிய பல பாடல்கள் அவர் மரணத்துக்குப் பின்புதான் புகழ் பெற்றன.  இவற்றைப் பல ஆண்டுகளுக்குப்பின் கேத்ரீன் விங்க்வர்த் அம்மையார் சேகரித்து, ‘ஜெர்மன் கீதங்கள்’ என்னும் பெயருடன் வெளியிட்டார்.  இவரது இதர பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை.


     யோயாக்கீம் நேயாண்டர் 1680-ஆம் ஆண்டு, காசநோயினால் தமது முப்பதாவது வயதில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    போற்றிடு ஆன்மமே, சிஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2.    போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்

3.    போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4.    போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே
சேர்த்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.
Praise to the Lord, the Almighty

Post Comment

Thursday, June 20, 2013

பாமாலை 322 - கர்த்தாவை நல்ல

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.

2.    அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது.

3.    உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக
விசாரிப்பார், அமர்ந்திரு
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.

4.    சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.

5.    நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.

6.    கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்.

7.    மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய்; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.



***************************************************************************
"Wer nur den lieben Gott läßt walten" 
பாமாலை 322 - கர்த்தாவை நல்ல பக்தியாலே
***************************************************************************

Post Comment

Monday, June 17, 2013

கர்த்தர் தந்த ஈவுக்காக

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே

Post Comment

பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின்

பாமாலை 1 – ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my soul, the King of heaven

’என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்’ சங்கீதம் 30 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கடவுளைத் துதிக்க ஏவப்படுகிறோம். பொதுவாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதிருக்கும்போது அவரைத் துதிக்கிறோமா? நம்மில் அநேகருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் அடிக்கடி நேர்ந்ததில்லை.  ஆயினும் இதை முன்னிட்டு நாம் கடவுளைத் துதிக்கிறோமா? ஆகவே எந்நிலையிலும் நாம் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.  நமது ஆலய ஆராதனைகளில் முதல் பகுதி எப்போதும் தெய்வ ஸ்துதியாகவே இருக்கும்.  இப்பகுதியில் பாடப்படும் பாடல்கள், வாசிக்கப்படும் திருமறைப்பக்குதிகள், ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எல்லாம் தெய்வ ஸ்துதியே.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதியில் தெய்வஸ்துதி பாடல்களே வைக்கப்பட்டிருக்கின்றன.  பாமாலையின் முதல் பாடலாகிய இப்பாடல், 103ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

Henry Francis Lyte
1834ம் ஆண்டு ஹென்ரி லைட் போதகர் (Henry Francis Lyte), இங்கிலாந்தில் ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றிவந்தார்.  ப்ரிக்ஸ்ஹம் ஒரு கடற்கரைப் பட்டிணம்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிப்பவர்கள்.  இம்மக்கள் அலைமிகுந்த கடலில் அதிக தைரியத்துடனும், துணிவுடனும் தங்கள் படகுகளை ஓட்டிச்சென்று வருவர்.  போதகர் அடிக்கடி கடற்கரையில் நின்று, மீன்படகுகள் கடுமையான அலைகள் மத்தியிலும் பத்திரமாகக் கரை சேருவதைக் கவனிப்பது வழக்கம்.  எந்த ஆபத்திலும் கடவுள் ஒரு தந்தைபோல் அவர்களைப் பராமரித்து வருகிறார் என்னும் உண்மையைப் போதகர் உணர்ந்து, அவர்கள் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுத எண்ணங்கொண்டார்.  இதற்கு ஆதாரமாக அவர் 103ம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு செய்யுளாக எழுதி இப்பாடலை உருவாக்கினார்.  எந்நிலையிலும் கடவுளின் கரம் நம்மைத் தாங்கிக்காப்பதால் நாம் அவரைத் துதித்தல் ஏற்றது என்பதை இப்பாடலின்மூலம் உணர்த்துகிறார்.  மேலும், சர்வ சிருஷ்டிகளும் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை இப்பாடலின் கடைசிக்கவியில் எடுத்துரைக்கிறார்.

ஹென்ரி பிரான்ஸிஸ் லைட் போதகர் 1793ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஸ்காட்லாண்ட் நாட்டில் எட்னம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளமையில் மிகவும் எளிமையான நிலைமைகளை அவர் அனுபவிக்கவேண்டியிருந்தது.  ஆரம்பக்கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, குருத்துவ ஊழியப் பயிற்சியை டப்ளின் நகரில் பெற்றார்.  அவரது கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலச் செய்யுள்கள் எழுதுவதில் மூன்றுமுறை முதல் பரிசு பெற்றார்.  பயிற்சியை முடித்தவுடன் 1815ல் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபோர்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்றார்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின் லிமிங்டன் சபையிலும், கடைசியாக 1823 முதல் ப்ரிக்ஸ்ஹம் என்னும் மீன்பிடிக்கும் கடற்கரைப் பட்டிணத்திலும் போதகராகப் பணியாற்றினார்.

அவர் பணியாற்ற ஆரம்பித்தபோது அவரது பணி, கடமைப் பணியாக மட்டுமே இருந்தது.  மேலும் அவரது கவித்திறன், பொதுவான விஷயங்களைக்குறித்த கவிகள் எழுதுவதிலேயே செலவிடப்பட்டது.  ஆனால் அவர் இருபத்தைந்து வயதாயிருக்கையில், அவரது நண்பரான ஒரு போதகர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவரது மரணப்படுக்கையினருகில் நிற்கும்போது அவர் கூறிய இறுதிவார்த்தைகளையும், தம் பாவங்களுக்கு நிவாரணமான ஒருவர் உண்டு என்னும் அவரது நம்பிக்கையையும் கவனித்த லைட் போதகரின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு புதுதிருப்பம் உண்டானது.  இதன்பின்பு அவர் எழுதிய கவிகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை அளிப்பதற்காக எழுதப்பட்டது.

ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றும்போதுதான் அவர் ஏராளமான பாடல்கள் எழுதினார்.  1847ம் ஆண்டு அவர் 54 வயதாயிருக்கையில் காசநோயினால் பீடிக்கப்பட்டு, குளிர் காலத்தை உஷ்ணமான இத்தாலிநாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணத்திற்கு முன் அவர் அநேக ஆண்டுகளாக முடிக்காமல் வைத்திருந்த, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  பின்பு இத்தாலி நாட்டுக்கு பயணமானார்.  வியாதி கடுமையாயிருந்தபடியால், 1847ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் தேதி, இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரத்தில் அவர் காலமானார்.

‘ஆத்மமே உன் ஆண்டவரின்’ என்னும் பாடல் முன் கூறியபடி ப்ரிக்ஸ்ஹம் நகரிலுள்ள மீனவர்களுக்காக எழுதப்பட்டது.  லைட் போதகர் இறந்த நூற்றாண்டு தினமான 1947 நவம்பர் மாதம் 20ம் தேதி, எலிசபெத் மகாராணியாருக்கும், எடின்பரோ பிரபுவுக்கும் நடந்த திருமண ஆராதனையில் மகாராணியின் விருப்பப்படி இப்பாடல் பாடப்பட்டது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  ’என்னோடிரும் மா நேச கர்த்தரே (பாமாலை 36)
v  சிலுவை சுமந்தோனாக (பாமாலை 311)
ஆண்டவா! மேலோகில் உம்’ (பாமாலை 220)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.

2.    நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3.    தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4.    என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

Post Comment

Monday, June 10, 2013

பாமாலை 139 - தெய்வாவி மனவாசராய்

பாமாலை 139 – தெய்வாவி மனவாசராய்
(Spirit Divine attend our Prayers)
Author : Andrew Reed
SS 187 C.M.


‘தெய்வாவி மனவாசராய்’ எனும் இப்பாடல் ‘பரிசுத்தாவி பண்டிகை” எனும் தலைப்பில் நம் கிறிஸ்து சபை பாமாலை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதியவர் Andrew Reed.  இவர் 1787ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவின் Yule கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துப் பின்னர் லண்டன் Hackney கல்லூரியில் தம் ஆயர் படிப்பை முடித்தார்.  தம் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை எழுதிய இவர், அப்பாடல்களை பல்வேறு தொகுப்புகளாகவும் வெளியிட்டார்.  Andrew Reed எழுதிய பல்வேறு பாடல்கள் இன்றளவும் திருச்சபைகளில் பாடப்பட்டு வருகின்றன. 

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    தெய்வாவி, மனவாசராய்,
வந்தனல் மூட்டுவீர்;
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.

2.    நீர் சோதிபோல் பிரகாசித்து,
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி, ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்.

3.    நீர் வான அக்னிபோலவே,
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்,
பொல்லாத செய்கையும்.

4.    நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்;
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்.

5.    புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்;
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்.

6.    நீர் பெரும் காற்றைப் போலவும்
வந்தசைத்தருளும்
கல் நெஞ்சை மாற்றிப் பேரன்பை
நன்குணரச் செய்யும்.

Post Comment

Friday, June 7, 2013

பாமாலை 243 - நேர்த்தியானதனைத்தும்

பாமாலை 243 – நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம்
(All things bright and beautiful)

’நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்’. வெளி 4 : 11

’வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது’ என்னும் வார்த்தைகளில் தாவீதரசன் சிருஷ்டி கர்த்தாவின் மகிமையை விவரித்திருக்கிறார்.  உலகம் உண்டானது முதல் இயற்கையின் அழகையும், சிருஷ்டிப்பின் பற்பல வகைகளையும் பார்த்து வியந்து, செய்யுள்களாகவும், பாடல்களாகவும் மனிதன் அவற்றை வர்ணித்திருக்கிறான்.  ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வர்த் (William Wordsworth), இங்கிலாந்தில் ‘ஏரிப் பிரதேசம்’ (Lake District) என்னும் இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்தில் தங்கி அங்குள்ள எழில்மிகு காட்சிகளைப் பல செய்யுள்களில் வர்ணித்திருக்கிறார்.  ஆண்டவரும் சிருஷ்டிப்பின் மகிமையைக் காட்டுவதற்காக, காட்டு புஷ்பங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  இப்பாடலை எழுதியவர் சிருஷ்டி கர்த்தாவின் படைப்புகளான பல அழகிய படைப்புகளைக் குறிப்பிட்டு, இவற்றை நாம் பார்க்கும்போது, சர்வ வல்ல கர்த்தாவைப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம் என ஞாபகப்படுத்துகிறார்.

    
Cecil Frances Alexander
இப்பாடலை எழுதிய செசில் பிரான்ஸஸ் அம்மையார் (Cecil Frances Alexander), அயர்லாந்து நாட்டில் மலைகள், ஆறுகள், ஏரிகள் முதலிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்ததால், சிருஷ்டி கர்த்தாவின் மகிமையைப் பூரணமாக உணர்ந்தவர்.  இவரது கணவரான அருள்திரு. வில்லியம் அலெக்ஸாண்டர், டெறி என்னுமிடத்தில் அத்தியட்சராக இருந்தார்.  ஆதலால் பிரான்ஸஸ் அம்மையார் அநேக குழந்தைகளின் ஞானஸ்நானத்தில் ஞானத்தாயாக இருக்க நேர்ந்தது.  பிள்ளைகள் வளர்ந்துவந்தபோது, ஆங்கிலத் திருச்சபை முறைப்படி அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து, அவர்களைத் திடப்படுத்தலுக்கு ஆயத்தம் செய்யவேண்டியிருந்தது.  ஆனால் ஞானோபதேசத்தின் பற்பல பகுதிகளை மனப்பாடம் பண்ணுவது பிள்ளைகளுக்கு உற்சாகமற்றதாகக் காணப்பட்டது.  இதைவிட சுலபமான பகுதிகளைக் கொடுத்தால் நன்றாக மனப்பாடம் பண்ணலாம் எனப் பிள்ளைகள் கூறவே, அம்மையார் ஞானோபதேசத்திலுள்ள சித்தாந்தங்களைக் குறித்த செய்யுள்கள் எழுத ஆரம்பித்தார்.  ஞானோபதேசத்தில் குறிப்பிட்டுள்ள முதல் விசுவாசம் ‘வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்’ என்பதாகும்.  இதை அடிப்படையாகக் கொண்டு, ‘நேர்த்தியானதனைத்தும்’ என்ற செய்யுளை அவர் எழுதி, சிருஷ்டி கர்த்தாவின் மகிமையைப் பிள்ளைகளுக்குப் போதித்தார்.  பிள்ளைகளும் இதனைப் பிரியமாக மனப்பாடம் செய்தனர்.  பின்னர், இதற்கு ‘மங்க்’ என்பவரால் எழுதப்பட்ட ஓர் அழகிய ராகம் அமைக்கப்பட்டு, இது ஒரு சிறுவர் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.
    
     இப்பாடலை எழுதிய செசில் பிரான்ஸஸ் அம்மையார் 1818ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் பிறந்து, இயற்கை வளம் நிரம்பிய டைரோன், லண்டன்டெரி மாகாணங்களில் இளம்பிராயத்தைக் கழித்தார்.  முப்பத்திரண்டு வயதாயிருக்கையில், அருள்திரு. வில்லியம் அலெக்ஸாண்டரை மணந்தார். போதகர் முதலில் அர்மாக் என்னுமிடத்தில் அத்தியட்சராகவும், பின்னர் அயர்லாந்து நாடு முழுமைக்கும் பிரதம அத்தியட்சராகவும் பணியாற்றினார்.  அவரது ஊழியத்தில் அவரது மனைவி அதிக உதவியாயிருந்து, அநேக நற்பணிகளில் பங்கெடுத்தார்.  சபையிலுள்ள சிறுவர்களைத் திடப்படுத்தலுக்கு ஆயத்தப்படுத்துவதிலும், ஓய்வுநாட்பள்ளியை நடத்துவதிலும் அதிகமாக உழைத்தார்.  மேலும், தவறிப்போன பெண்களுகென ஓர் இல்லம் ஏற்படுத்தி, அதையும் நிர்வகித்தார்.  கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள இவர், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.  இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களே.  அவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:

v  பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
v  பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
v  பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
v  பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய்
v  பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
v  பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
v  பாமாலை 155 – இளமை முதுமையிலும்
v  பாமாலை 202 – நான் மூவரான ஏகரை


செசில் பிரான்ஸஸ் அம்மையார் 1895ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் தேதி, தமது 77வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison
\
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம், விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்.

1.    பற்பல வர்ணத்தோடு
மலரும் புஷ்பமும்,
இனிமையாகப் பாடி
பறக்கும் பட்சியும்.

2.    மேலோர், கீழானோரையும்
தத்தம் ஸ்திதியிலே,
அரணில், குடிசையில்
வசிக்கச் செய்தாரே

3.    இலங்கும் அருவியும்,
மா நீல மலையும்
பொன் நிற உதயமும்
குளிர்ந்த மாலையும்

4.    வசந்த காலத் தென்றல்,
பூங்கனித் தோட்டமும்
காலத்துக்கேற்ற மழை,
வெய்யோனின் காந்தியும்.

5.    மரமடர்ந்த சோலை
பசும் புல் தரையும்,
தண்ணீர்மேல் தாமரைப்பூ,
மற்றெந்த வஸ்துவும்.

6.    ஆம், சர்வவல்ல கர்த்தா
எல்லாம் நன்றாய்ச் செய்தார்
இதை நாம் பார்த்துப் போற்ற
நாவையும் சிஷ்டித்தார்.
All things Bright and Beautiful

Post Comment