Sunday, July 28, 2013

பாமாலை 185 - ஆ எத்தனை நன்றாக

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.  , எத்தனை நன்றாக
நீர் தேற்றினீர், என் இயேசுவே
நீர் உம்மைத்தான் ஊணாக
இப்போதெனக்குத் தந்தீரே
இத்தால் அடியேனுக்கு
நீர் செய்த கிருபை
நீர் என்னை மீட்டதற்கு
எனக்கு முத்திரை
மகா அருமையான
இவ்வன்பு யாவுக்கும்
உமக்கனந்தமான
துதி உண்டாகவும்.
 
2.  இத்தயவை நினைத்து
நான் என்றும் உமக்கென்னுட
இதயத்தைப் படைத்து,
சன்மார்க்கமாயிருக்கிற
நடக்கையாய் நடந்து
நீர் காட்டும் பாதையில்
உம்மைப் பின்சென்றுவந்து,
மெய் விசுவாசத்தில்
எப்போரிலும் நிலைக்க,
அடுத்தவரையும்
அன்பால் அரவணைக்க
இதென்னை ஏவவும்.
 
3. நீர் இந்த மா உயர்ந்த
அதிசய சிநேகமாய்
உம்மை எனக்குத் தந்த
படியினாலே, உண்மையாய்
அடியேன் என்னிலுள்ள
இருதயத்தையும்
யாவற்றையும், அன்புள்ள
கர்த்தாவே, உமக்கும்
தந்தேன்; , உம்மில் நானும்
இனி என்றென்றைக்கும்
இருக்கவும், நீர் தாமும்
என்னில் இருக்கவும்.

Post Comment

Thursday, July 25, 2013

பாமாலை 199 - அபிஷேகம் பெற்ற (Clarion)

பாமாலை 199 - அபிஷேகம் பெற்ற 
Tune : Clarion


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  அபிஷேகம் பெற்ற சீஷர்
தெய்வ வாக்கைக் கூறினார்
கட்டளை கொடுத்த மீட்பர்
கூட இருப்பேன்என்றார்.
 
2.  இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்
ஏழை அடியாருக்கே
ஊக்கம் தந்து நல்ல எண்ணம்
சித்தியாகச் செய்வீரே.
 
3.  முத்திரிக்கப்பட்ட யாரும்
ஆவியால் நிறைந்தோராய்
வாக்கைக் கூற வரம் தாரும்,
அனல்மூட்டும் தயவாய்.
 
4.  வாக்குத்தத்தம் நிறைவேற
சர்வ தேசத்தார்களும்
உந்தன் பாதம் வந்து சேர
அநுக்கிரகம் செய்திடும்.
 
5.  பிதா, சுதன், தூய ஆவி
என்னும் தேவரீருக்கே
தோத்திரம், புகழ்ச்சி, கீர்த்தி
விண் மண்ணில் உண்டாகுமே.

Post Comment

Saturday, July 20, 2013

பாமாலை 302 - எந்தன் ஜீவன்

பாமாலை 302 – எந்தன் ஜீவன் இயேசுவே
(Take my life and let it be)

‘சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”. ரோமர் 12:1

நாம் பிரியமாக வைத்திருக்கும் ஒரு பொருளை எப்போதாவது இன்னொருவருக்கு மனதார விட்டுக்கொடுத்திருக்கிறோமா? ஒருவேளை இளவயதாயிருக்கையில் பெற்றோருடைய வற்புறுத்தலினால் ஒரு விளையாட்டுக்கருவியைத் தம்பி, தங்கைக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்.  ஆனால் மேற்காட்டிய வசனத்தின் மூலம், ஆண்டவர் நமது ஆஸ்தியையோ, நமது தாலந்துகளையோ விரும்புவதைவிட, நம்மையே அவருக்கு அர்ப்பணம் செய்வதையே விரும்புகிறார் என்று அறிகிறோம்.

இந்தப் பாடலை எழுதிய பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் (Frances Ridley Havergal) அம்மையார், ஆத்துமாக்களின் பேரில் மிகுந்த வாஞ்சையுள்ளவர்கள்.  ஒருமுறை ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்று ஐந்து நாட்கள் அங்கு தங்கியிருக்க நேர்ந்தது.  அவ்வீட்டில் பத்து பேர் உண்டு.  அவர்களில் சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.  இதையறிந்த ஹாவர்கல் அம்மையார், இரவு முழுவதும் முழங்காலில் நின்று, ‘ஆண்டவரே இங்குள்ள எல்லோரையும் எனக்குத் தந்தருளும்’ என மிகவும் ஊக்கமாக ஜெபித்தார்.  அந்த உருக்கமான விண்ணப்பத்தை நமதாண்டவர் கேட்டருளினதால், அம்மையார் அங்கிருந்து செல்லுமுன், அங்குள்ள பத்து பேரும் கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.  அவர் அங்கிருந்த கடைசி இரவில் தூங்காமல், கிறிஸ்துவுக்கு நம்மைத் தத்தம் செய்தலைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், ‘என்தன் ஜீவன் இயேசுவே’ என்ற பாடல் அவர் மனதில் உருவாயிற்று.  அன்றிரவே அதை எழுதி, ‘என்னையே சமூலமாய், தத்தம் செய்தேன் நித்தமாய்’ என்னும் வரிகளோடு முடித்தார்.  இந்தப் பாடலை தமது தந்தையார் எழுதிய ‘Patmos’ என்னும் இராகத்தில் பாடவேண்டும் என அவர் விரும்பினார்.  ஆனால் இப்போது நாம் அதை வேறு பல ராகங்களில் பாடி வருகிறோம்.

இதை நாம் பாடும்போது, ‘என்தன் ஜீவன் (வாழ்க்கை) இயேசுவே, சொந்தமாக ஆளுமேன்’ என்னும் வரிகளை வேகமாக, யோசனையின்றிப் பாடிவிடுகிறோம்.  இந்த வரிகள் நமது சொந்த அனுபவமான பின்னரே, பின் கவிகளில் குறிப்பிடும் நமது காலம், நேரம், கை, கால், நாவு, ஆஸ்தி, புத்தி, கல்வி, முதலியவற்றை ஆண்டவருக்குத் தத்தம் செய்யக்கூடும்.

பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் நகரில் பிறந்தார்கள்.  ஒரு பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  அம்மையார் நான்கு வயதாயிருக்கும்போதே வேத புத்தகத்தை நன்றாக வாசிப்பார்.  பின்னர் புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.  இங்கிலாந்திலும், ஜெர்மனி நாட்டிலும் கல்வி பயின்று, ஆங்கிலத்தைத் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.  சங்கீதத்தில் அதிக திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், இராகங்கள் எழுதவும், பியானோ முதலிய சங்கீதக் கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.  மேலும், ஓய்வுநாட் பள்ளியில் போதிப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிக சிரத்தை காட்டினார்.  ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய ஆயுள் காலத்தில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில, ’அருள்நாதா நம்பி வந்தேன் (பாமாலை 239), ‘தெய்வ சமாதான இன்ப நதியே’ (பாமாலை 357), ‘நாதா உம் வார்த்தை கூறவே’ (பாமாலை 201) என்பவை.


அவர் 1879ம் ஆண்டு ஜூன் மாதம், 3ம் தேதி, உவேல்ஸ் நாட்டில், சுவான்ஸீ என்னுமிடத்தில், தமது 42ம் வயதில் காலமானார்.

Unison
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2.    எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.

3.    எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

4.    எந்தன் ஆஸ்தி, தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.

5.    எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.

6.    திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Take my Hand and Let it be

Post Comment

பாமாலை 19 - எவ்வண்ணமாக (Wiltshire)

பாமாலை 19 - எவ்வண்ணமாக 
Wherewith O God shall I draw near
Tune : Wiltshire


Unison

Soprano
 
Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?
 
2.  அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?
 
3.  பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
 
4.  நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.
 
5.  ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
 
6.  இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்.
 
7.  இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்.

Post Comment

Sunday, July 14, 2013

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

 


1.  கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட
 
2. நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே.
 
3. மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.
 
4. உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.
 
5. அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.

Post Comment

பாமாலை 214 - மேலோக வெற்றி (Warrington)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.  மேலோக வெற்றி சபையும்
பூலோக யுத்த சபையும்
ஒன்றாகக் கூடி சுதனை
துதித்துப் பாடும் கீர்த்தனை.
 
2.  ராஜாக்களுக்கு ராஜாவே,
கிருபாதார பலியே,
மரித்தெழுந்த தேவரீர்
செங்கோல் செலுத்தி ஆளுவீர்.
 
3.  பூமியில் உள்ள தேசத்தோர்,
பற்பல பாஷை பேசுவோர்
எல்லாரையும் ஒன்றாகவே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.
 
4.  கிரேக்கர், யூதர், தீவார்கள்;
ராஜாக்கள், குடி ஜனங்கள்,
கற்றோர், கல்லாதோர், யாவரும்
வந்தும்மைப் போற்றச் செய்திடும்.
 
5.  பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்
எல்லாப் பூலோக மேன்மையும்
காணிக்கையாக உமக்கே
செலுத்தப்படும் இயேசுவே.

Post Comment