Wednesday, October 22, 2014

Anthem - The Light hath shined

The Light hath shined
Christmas Anthem Composed by CALEB SIMPER.


Certain portions of the Audio (individual parts) may sound blank, for they are the places where either the 'Organ' or the 'Soprano Solo' will be played/sung.  So, for better understanding (if you can't read the notations), kindly listen to the Unison with the Organ first.

SATB With Organ
SATB without Organ
Organ only
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


Sheet Music for Choristers (9 Pages)













































Sheet Music for Organist(4 Pages)






The light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah
The Light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah

For unto us is born this day, A Saviour which is Christ the Lord
For unto us is born this day, A Saviour which is Christ the Lord
Is Christ the Lord, is Christ the Lord

The light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah
The Light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah

(Soprano OR Tenor Solo)
He shall be great He shall be great,
And shall be called the Son of the Highest
He shall be great, He shall be great,
And shall be called the Son of the Highest
The Son of the Highest.

Blessed is He, blessed is He ; That cometh, that cometh
In the name of the Lord;
Blessed is He, blessed is He ; That cometh, that cometh
In the name of the Lord,
That cometh, that cometh in the name of the Lord

(Tenor and Bass) - And all the ends, the ends of the earth

(Soprano) And all the ends, the ends of the earth
Shall see the salvation, shall see the salvation,
Shall see the salvation of our God,
Shall see the salvation of our God.

Break forth into joy, break forth into joy,
Sing together, sing together,
Break forth into joy,
(Soprano) - Break forth into joy,

(Alto, Tenor and Bass) - Break forth into joy

Sing together together, break forth in to joy. Amen.

Post Comment

Friday, October 17, 2014

மண்ணோர்கள் போற்றிடும் (Christmas Song by Julius Moses)

This song is composed by the legendary Julius Moses and the 4 part harmony has been arranged by John J Selwyn.  This arrangement won the 1st prize in the Tamil Choir category in "Aachi - Sing the Season 2014".

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano











































































மண்ணோர்கள் போற்றிடும்
விண் வேந்தன் நம் இயேசு
ஏழ்மை உருவில் வந்தார்
ஓ..ஓ.. பூமியில் நிலை சமாதானமாகவே
ஓ..ஓ.. மனிதர்மேல் அவர் அன்பு கொண்டு வந்தாரே

1.    மாடடைக் கொட்டிலிலே
முன்பனிக் காலத்திலே
என் நேசர் கந்தைக் கோலமதாய்ப் பிறந்தார்
மேய்ப்பர்கள் கலங்கவே விண் தூதர் உரைக்கவே
பாவங்கள் போக்கிடும் நற்பாலன் அவதரித்தார்.

2.    தீர்க்கர் மூவர் அறிந்தே
பொன் வெள்ளி தூபம் கொண்டே
பாராளும் வேந்தன் பொற்பாதம் போற்ற வந்தார்
ஏரோதும் கலங்கவே ஆயர் தேடவே
விண் வெள்ளி வழிகாட்ட மாமன்னன் அவதரித்தார்

Post Comment

Monday, October 13, 2014

பாமாலை 158 - இதோ உன் நாதர் (Gloucester)

பாமாலை 158 - இதோ உன் நாதர் 
Behold the Master passeth by
Tune : Gloucester

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. இதோ, உன் நாதர் செல்கின்றார்;
உன்னை அழைக்கும் அன்பைப் பார்!
வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்
என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய்

2. துன்பத்தில் உழல்வோனே நீ
மோட்சத்தின் வாழ்வைக் கவனி
பற்றாசை நீக்கி விண்ணைப் பார்            
இதோ, உன் நாதர் செல்கின்றார்!

3. அவ்வழைப்பை இப்பக்தன்தான்
கேட்டே, செல்வத்தை வெறுத்தான்
சீர் இயேசுவின் சிலுவைக்காய்
எல்லாம் எண்ணினான் நஷ்டமாய்.

4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்
அழைப்பு அவன் நெஞ்சிலும்,
உற்சாகத்தோடுழைக்கவே
திட சித்தம் உண்டாக்கிற்றே.

5. நாடோறும் நம்மை நாதர்தாம்
அழைத்தும் தாமதம் ஏனாம்?
ஏன் மோட்ச வாழ்வைத் தள்ளுவோம்?
ஏன் லோகமாயை நாடுவோம்?

6. மத்தேயு பக்தன் போலவும்
எல்லாம் வெறுத்து நாங்களும்
நல் மனதோடு உம்மையே
பின்பற்ற ஏவும், கர்த்தரே.

Post Comment

Wednesday, October 8, 2014

பாமாலை 353 - இயேசுவின் கைகள் காக்க

பாமாலை 353 – இயேசுவின் கைகள் காக்க
(Safe in the arms of Jesus)

’அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். உபா 33:27

முன்னொரு காலத்தில் ஒரு வாலிபனும் ஓர் இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துத் திருமணம் செய்யத் தீர்மானித்தனர்.  ஆனால் அவர்களது பெற்றோர் இதற்குச் சம்மதம் தர மறுத்தனர்.  அவ்வூருகருக்கில் ஒரு மலையடிவாரத்தில் சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அவ்விருவரும் அச்சிலையினடியில் முழங்காலிட்டு ஜெபித்து வாழ்க்கை ஒப்பந்தம் செய்து, அயல் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.  அநேக ஆண்டுகளுக்குப்பின், அவ்வாலிபன் அப்பெண்ணைக் கைவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டான்.  தனியாக விடப்பட்ட அவள், யாதொரு ஆதரவுமின்றித் தவித்து, மறுபடியும் மலையடிவாரத்திலிருந்த அச்சிலையினடியில் முழங்காலிட்டுத் தன் துயரத்தை ஆண்டவரிடம் கூறினாள்.  உடனே சிலையின் வலதுகரம் ஆணியிலிருந்து கழன்று, அவளை அணைத்து மார்போடு சேர்த்துக்கொண்டது.  அதுமுதல் சிலையின் வலதுகரம் அந்நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது ஒரு கதையாயிருந்தாலும், ஆதரவற்றுத் தவிப்பவர்களுக்கு ஆண்டவரின் கரங்களே ஆதரவு என்னும் உண்மையைப் புகட்டுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்துகொண்டிருந்த ஒரு விழாவில், நகரவாசிகளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.  திடீரென அங்கு ஒரு கலவரம் ஏற்பட, எல்லோரும் பயமடைந்து அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர்.  திகிலடைந்து ஓடிவந்த ஒரு குழந்தையை அதின் தாயார் கையிலெடுத்து, மார்போடு சேர்த்தணைத்து, ‘அம்மாவின் கையிலிருப்பதால் பயப்படாதே’ என தைரியமூட்டினாள். 
Fanny Crosby
இதைக்கண்ட ஓர் அம்மையார் இச்சம்பவத்தைப் ஃபானி கிராஸ்பி
(Fanny Crosby) என்னும் தனது நண்பருக்குச் சொன்னார்கள்.  இளம் பிராயத்திலிருந்தே கண் பார்வையை இழந்த கிராஸ்பி அம்மையார், கிறிஸ்தவப் பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.  இச்சம்பவத்தைக் கேட்டவுடன் அந்த அம்மையார் இயேசுவின் கரங்களில் நாம் இருக்கும்போது எவ்வித ஆபத்துகளிலும் பத்திரமாகக் காக்கப்படுவோம் என்பதை உணர்ந்து, இதை ஒரு பாடலாக வெளியிட ஆவல் கொண்டார்.  சில தினங்களுக்குப் பின் அவரது நண்பரான வில்லியம் டோன் போதகர் (William Howard Doane), சின்சினாட்டி நகரில் ஓய்வுநாட்பாடசாலை சம்பந்தமான ஒரு மாநாட்டுக்குச் செல்லும் பாதையில் ஃபானி கிராஸ்பி அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மாநாட்டில் பாடப்படுவதற்காகப் புதிதாக அவர் எழுதியிருந்த ராகத்துக்கேற்ற ஒரு பாடலை எழுதித்தருமாறு அம்மையாரைக் கேட்டார். 
William Howard Doane
போதகர் புகைவண்டி ஏறுவதற்கு 35 நிமிடங்களே இருந்தன. உடனே அம்மையார் அவரைப் பியானோவில் ராகத்தை வாசிக்கச் செய்து ‘இந்த ராகம் ‘இயேசுவின் கைகள் காக்க, மார்பினில் சாருவேன்’ என்னும் பாடலை என் மனதில் பிறப்பிக்கிறது’ எனக்கூறி, சுமார் 25 நிமிடங்களுக்குள் இப்பாடலை எழுதி முடித்துப் போதகரிடம் கொடுத்தார்.  அவரும் அதை ஒருமுறை பாடிப்பார்த்து வெகுவாகப் பாராட்டி, குறிப்பிட்ட நேரத்தில் சின்சினாட்டி நகரையடைந்தார்.  இம்மாநாட்டில்தான் இப்பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது.  இப்போது இப்பாடல் கிறிஸ்தவ உலகமெங்கும் தமக்கு அருமையானவர்களை இழந்து துக்கக்கடலில் மூழ்கியிருப்பவர்களுக்கு ஆறுதலும், மனசாந்தியும், நம்பிக்கையும் அளித்து வருகிறது.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1820ம் ஆண்டு மார்ச் மாதம், 24ம் தேதி, நியூயார்க் நகரில் பிறந்தார்.  ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போதே தவறான மருத்துவ சிகிச்சையால் கண் பார்வையை இழந்தார்.  பன்னிரெண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரில் பார்வை இழந்தோர் பள்ளியில் பயின்று 1847 முதல் 1858 வரை அப்பள்ளியிலேயே ஆசிரியையாயிருந்தார்.  1858ல் அவர் அலக்ஸாண்டர் ஆல்ஸ்டைன் என்னும் பார்வை இழந்த சங்கீத நிபுணரை மணந்தார்.  இளம் பிராயத்திலேயே கவித்திறமையுடையவராயிருந்து, பல செய்யுள்களும் பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எட்டு வயதாயிருக்கையில் தனது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்றவர் இவரே.  தமது வாழ்க்கையில் எட்டாயிரத்துக்கதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள், ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப்புத்தகத்தில் காணலாம்.  ‘போற்றும் போற்றும் புண்ணியநாதரைப் போற்றும்’ (பாமாலை 267), ‘இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்’ (பாமாலை 333) என்னும் பாடல்களும் இவர் எழுதியவையே.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12ம் தேதி தமது 95ஆம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும்

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்

2.    இயேசுவின் கைகள் காக்க
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக்கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் தோஷம்
விரைவில் தீருமே.

3.    இயேசு என் இன்பக் கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே
நித்திய கன்மலை,
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.

Safe in the Arms of Jesus

Post Comment

Monday, October 6, 2014

பாமாலை 351 - மேலோகத்தில் என் (SS 845)

பாமாலை 351 - மேலோகத்தில் என் (SS 845)
Whom have I Lord in heaven but Thee

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. மேலோகத்தில் என் பங்கு நீர்,
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
மேலான நன்மை தேவரீர்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்
பேரன்பைக் காட்டி மரித்தீர்
சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

2. பூலோக மேன்மை வாஞ்சியேன்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
மேலோக இன்பம் நாடுவேன்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
இப்பாரின் வாழ்வு நில்லாதே
தப்பாமல் வாடிப்போகுமே
ஒப்பற்ற செல்வம் நீர் நீரே
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

3. நீர் ஏழையேனைக் கைவிடீர்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 
சீராகக் காத்து ஆளுவீர்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்
துன்புற்றுப் பாடுபடினும்
என் விசுவாசம் நிலைக்கும்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

4. தீயோன் விரோதம் செய்யினும்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
ஓயாமலே போராடினும்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன்
உம்மாலே வெற்றி சிறப்பேன்
கெம்பீர கீதம் பாடுவேன்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

5. வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
உம் நேச மார்பில் சுகிப்பேன்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
பேரன்பரே! கை தாங்குவீர்
நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
ஓயாப் பேரின்பம் ஈகுவீர்
கிறிஸ்துவே! கிறிஸ்துவே!

Post Comment

Wednesday, October 1, 2014

பாமாலை 335 - இவ்வேழைக்காகப் பலியான

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.

2. ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக
தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.

3. அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ, இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.

4. ஆ, அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.

5. வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்
நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.

6. இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.

7. நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்
நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.

8. நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்
இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.














 

Post Comment