Friday, January 30, 2015

பாமாலை 404 - பொன்னகர் இன்பத்தை

பாமாலை 404 - பொன்னகர் இன்பத்தை
When all my labours and trials are o'er

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும் மாறியே போம்
நன்மைச் சொரூபியை தரிசிப்போம்
நீடுழி காலம் பேரின்பமுண்டாம்.

     பேரின்பமாம், பூரிப்புண்டாம்
     பேரின்பமாம், பூரிப்புண்டாம்
     மேலுலகில் அவர் சந்நிதியில்
     மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

2.    மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.

3.    அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.

Post Comment

Sunday, January 25, 2015

பாமாலை 403 - பரமண்டலத்திலுள்ள

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பரமண்டலத்திலுள்ள
மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்.

2.    வேறே பேர் மண்ணாஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்
மண் அழியும், இயேசுவோ
என்றும் நிற்கிறார் அல்லோ

3.    எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி ஏதுக்கு?
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற்பொக்கிஷம்

4.    லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்,
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
மேன்மையே; அங்கவரை
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!

5.    எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக, இயேசுவே,
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே
ஆ, நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்.

Post Comment

Thursday, January 22, 2015

பாமாலை 402 - ஓய்வுநாள் விண்ணில் (O quanta qualia)

பாமாலை 402 - ஓய்வுநாள் விண்ணில் 
O what the Joy and the glory must be
(O quanta qualia)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2.    ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3.    மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4.    சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5.    ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே

6.    பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7.    தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.
 

Post Comment

Sunday, January 18, 2015

பாமாலை 401 - என்றும் கர்த்தாவுடன் (Nearer Home)

பாமாலை 401 - என்றும் கர்த்தாவுடன் 
Forever with the Lord
Tune : Nearer Home


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor




1.    என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

2.    அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே
மின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே

3.    கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்

4.    என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
”என்றும் கர்த்தாவுடன்”.






Post Comment

பாமாலை 400 - எருசலேம் என் ஆலயம்

பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்
(Jerusalem my happy home)

ஒரு புதிய வருடத்தைத் துவக்கும்போது நம் ஆலயங்களில் கண்டிப்பாக ‘இன்னோர் ஆண்டு முற்றுமாய்’ பாமாலை இடம்பெறும்.  அதன் மூன்றாவது சரணத்தில்,

“யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே”.

என்று பாடியே நாம் வருடத்தைத் துவக்குகிறோம்.  நித்திய வாழ்வின் நம்பிக்கை மனதில் வேரூன்றப்பட்டு இருந்ததன் காரணமாகவே நம் முற்பிதாக்களால் மரணத்தைப் பற்றிய எந்த அச்சமுமின்றி, ஒரு வருடத்துவக்கத்திற்கான பாடலிலும் கூட, இத்தனை அழகிய வரிகளை உறுதியுடனும் மகிழ்வுடனும் எழுதமுடிந்தது.

‘திருமணம்’ எனும் பந்தம் இவ்வுலகவாழ்வில் ஒரு மகிழ்விற்குரிய, ‘மங்கல’ நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கிறிஸ்துவைப் பற்றி அறிந்திராத நம் பிற சமய சகோதரரின் திருமணங்களில் யாரேனும் ‘தும்மல்’ போட்டுவிட்டால் கூட அது ஒரு ‘அமங்கல’க் குறியீடாகவே கருதப்பட்டு வருகிறது. இப்படியிருக்க, நம் கிறிஸ்தவ திருமண ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் வாக்குறுதிகளை ஆண்டவர் சந்நிதியில் பரிமாறிக்கொள்ளும்போது, ‘வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று கூறித் தம் இல்லற வாழ்வைத் துவக்குகின்றனர்.  திருமணம் போன்ற ஒரு ‘மங்கல’ நிகழ்வின் ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவக்கும் தருணத்தில் ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று வாக்குறுதி அமைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு ’மரணம்’ என்ற சொல் எவ்வித அச்சத்தையும் தருவதில்லை என்பதை எத்தனை அழகாய்க் காட்டுகிறது!

மரணத்தை ஜெயமாக விழுங்கிய ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்ளும் நாம், ‘மரணம்’ என்ற சொல்லைக்கண்டு அஞ்சுவதோ, ‘பரம வாழ்வின்’ மகத்துவத்தை தியானிக்கவோ, நித்திய வாழ்வின் உறுதியைப் பாடலாகப் பாடத் தயங்குவதோ எத்தனை பெரிய அறியாமை!

நம் திருச்சபையின் திடப்படுத்தல் ஆராதனை முறைமையிலும் பேராயர் திடப்படுத்தல் பெறுபவரின் தலையில் கைவைத்து ‘கர்த்தாவே, இந்த உம்முடைய பிள்ளை என்றைக்கும் உம்முடையவனா(ளா)ய் இருக்கவும், உமது நித்திய ராஜ்ஜியத்தில் சேருமளவும் நாள்தோறும் உம்முடைய பரிசுத்த ஆவியில் வளர்ந்தேறவும், உமது பரம கிருபைகளால் இவனை(ளை)க் காத்தருளும்” என்றே ஜெபித்து திடப்படுத்தல் செய்து வைக்கிறார்.

நம் ஞானஸ்நான ஆராதனை முறையிலும், ‘… .. பாவத்துக்கு மரித்து, நீதிக்குப் பிழைத்து, கிறிஸ்துவின் மரணத்துக்குள் அவருடனேகூட அடக்கப்பண்ணப்பட்டிருக்கிற இவன், தன்னிலுள்ள பழைய மனுஷனைச் சிலுவையில் அறைந்து, பாவசரீரத்தை முற்றிலும் அழிக்கவும், இவன் உம்முடைய குமாரனின் மரணத்திற்குப் பங்குள்ளவனாய் இருக்கிறதுபோல, அவர் உயிர்த்தெழுதலுக்கும் பங்குள்ளவனாய் இருக்கவும், கடைசியிலே மற்றுமுள்ள உம்முடைய பரிசுத்த சபையார்களோடுகூட உமது நித்திய ராஜ்ஜியத்துக்குச் சுதந்தரவாளியாகவும் தேவரீர் கிருபை செய்யவேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டுத் தாழ்மையாய் வேண்டிக்கொள்ளுகிறோம்” என்ற அர்த்தமுள்ள ஜெபம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘..மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன்’ என்ற வரிகளை உச்சரிக்க ஒவ்வொருமுறை நாம் விசுவாசப்பிரமாணம் சொல்லும்போதும் பயப்படுகிறோமா?

இப்படி ‘மரணம்’ என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் / நிகழ்விலும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ‘நித்திய வாழ்வின்’ நிச்சயத்தை உணர்த்தும் அநேக பாமாலைகள்/பாடல்கள், தமிழ் கிறிஸ்தவர்களால் தொடர்ந்து மறுதலிக்கப்படுவது / புறக்கணிக்கப்படுவது, மோட்சத்தைக் குறித்த அப்பாடல்கள் ‘மரணப் பாடல்கள்’ என்று வகைப்படுத்தப்படுவது எத்தனை வேதனைக்குரிய காரியம்?

‘Some Glad Morning’ என்ற Jim Reeves பாடிய Cassette / CD ஒலித்திராத நம் கிறிஸ்தவ இல்லங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். “Some glad morning when this life is o’er, I’ll fly away’ என்று எவ்வளவு மகிழ்வுடன் அவர் பாடுகிறார்! அவ்வளவு உற்சாகத்துடன் அவர் அப்படிப் பாட, பரம வாழ்வைக் குறித்த நிச்சயம் எத்தனை ஆழமாய் அவர் மனதில் பதிந்திருக்க வேண்டும்!

ஆண்டவரின் இரண்டாம் வருகையை சந்திக்க எந்நேரத்திலும், எந்நிலையிலும் ஆயத்தமாய் இருக்கும் நிலையை நம்மால் அடைய முடிந்தால்,  ‘மோட்சத்தை / நித்திய வாழ்வைக் குறித்த பாடல்களைப் பாட பயமோ தயக்கமோ எப்படி ஏற்படும்?

இப்படி புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு அழகான பாடலே ‘பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்’. அப்பாடலினால் தொடப்பட்ட ஒரு வாலிபனைக் குறித்து சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘131 பாடல் பிறந்த கதை’ புத்தகத்திலிருந்து அது அப்படியே கீழே.

”நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பாடலாக இதைப் பாடி வந்தாள். வேதனைகளும் பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும் இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது.  அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிகொண்டு வீடு திரும்பும்போது, வீட்டிலிருந்து அவன் தாய் பாடும் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும்.

நாளடைவில் அவன் தாய் வியாதிப்பட்டு பெலவீனமடைந்தபோதும் இப்பாடலை மெல்லிய குரலில் அவள் பாட, அவன் கேட்பதுண்டு.  சில நாட்களுக்குப் பின் அவன் தாய் மரித்தாள். தாயின் பாடல் ஒலியும் மறைந்துபோனது.  அன்பற்று கடுமையாய் நடத்திய தன் தகப்பனின் செயலைப் பொறுக்க முடியாமல், அவன் தன் உடைமைகளையும் தன் தாயின் பொக்கிஷமான வேத புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு பட்டணத்திற்கு ஓடிப்போனான்.  அங்கு தீய நண்பர்களோடு பழகி, தன் வாழ்க்கையையும் உடலையும் கெடுத்து வியாதிப்பட்டான்.

ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த அவனைச் சந்திக்க, மிஷினரி ஒருவர் வந்தார். ஆண்டவரின் அன்பைப்பற்றி அவர் பலமுறை எடுத்துக்கூறியும், அவன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். இம்முயற்சியில் தோல்வியுற்று மனமுடைந்த மிஷினரி, மரிக்கும் அந்த வாலிபனை விட்டு சற்றே விலகி, ஜன்னலருகே சென்று, இப்பாடலை சோர்வுடன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். “இது என் தாய் விரும்பிப் பாடும் பாட்டல்லவா?” என்று எண்ணிய அவன் மனக்கண்கள் முன், தாயின் அன்பும், அவளது ஜெபங்களும், பக்தி நிறைந்த வாழ்க்கையும் தோன்றின.  ’என் தந்தையின் கொடூர நடத்தையால் நான் வீட்டைவிட்டு வெளியேறினபோதெல்லாம் என்னை அன்போடு தடுத்தது, என் தாயின் இந்தப் பாடல்தானே? எத்தனை ஆண்டுகள் இதை மறந்துபோனேன்?” என்று கதறினான். 

அந்நிலையில் தாயின் அன்புக்கும் மேலான இயேசுவின் அன்பை மிஷினரி மீண்டும் அவனுக்கு எடுத்துரைத்தார்.  அவன் அந்நேரமே இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான். அமைதியாக விளங்கிய அவன் முகத்தை நோக்கியவண்ணம் மிஷினரி கூறினார்.. “அந்தத் தாயின் பாடல்! தூர இடங்களில் அலைந்து திரிந்த அவளது மகனைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, ஆண்டவர் இப்பாடலையல்லவா உபயோகித்தார்.”

இந்த அருமையான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.  “F.B.P” என்ற கையெழுத்தை மட்டும் விட்டுச்சென்றுள்ள இப்பாடலை எழுதியவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியாராக இருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.

பரலோகத்தைப் பற்றி, நானூறு வார்த்தைகளடங்கிய கட்டுரையாக இது முதலில் உருவெடுத்தது.  வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு, ஆசிரியரின் உணர்வு மிக்க படைப்பாக இப்பாடல் உருவானது. முதலில் அநேக எழுத்துப் பிழைகளுடன் 26 சரணங்களைக் கொண்டிருந்த இப்பாடலில் 7 சரணங்களே இப்போது உபயோகத்திலுள்ளன.  இப்பாடலின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றவர் பலர்.


இந்நாட்களில் மரித்தோர் வீடுகளிலும் மற்றும் அடக்க ஆராதனைகளிலும் மட்டுமே இப்பாடல் பாடப்படுகிறது. தன் மரணத்தையோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையையோ சந்திக்க ஆயத்தமில்லாத, பல கிறிஸ்தவ மக்களுக்கு மரண பயத்தையும், திகிலையும் ஊட்டும் சாவுப்பாடலாக இது மாறியிருப்பது வேதனைக்குரிய காரியம்.  ஆனால் பரலோகத்தை அழகாகச் சித்தரிக்கும் இப்பாடல் இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களுக்கு, நித்திய வாழ்வின் நம்பிக்கையூட்டுவதாக விளங்குகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.    பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.    எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.    நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.    எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

Post Comment

பாமாலை 399 - உன்னத சாலேமே (Christ Church)

பாமாலை 399 - உன்னத சாலேமே 
Jerusalem on High
Tune : Christ Church

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

     விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
உம் திருத் தாள்
     சேவிப்பேனே!

2.    பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3.    அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4.    தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5.    சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6.    கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்;
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Post Comment

Saturday, January 17, 2015

பாமாலை 189 - என் மீட்பர் இயேசுகிறிஸ்துவே (Rockingham)

பாமாலை 189 - என் மீட்பர் இயேசுகிறிஸ்துவே 
Tune : Rockingham

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.

2.    என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.

3.    உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.

4.    மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.

5.    என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Post Comment

Tuesday, January 13, 2015

கர்த்தர் என் மேய்ப்பரானவர்


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சியடையேன்
பசும்புல் அமர்ந்த தண்ணீர்
அண்டை நடத்துவார்

2.  என் ஆத்துமாவைத் தேற்றியே
தம் நாமத்தினிமித்தம்
நீதியின் பாதையிலென்னை
நடத்திக் காக்கிறார்

3.    மரண இருள் பள்ளத்தில்
நான் நடந்தாலுமே
நீர் என்னோடே இருக்கிறீர்
கோல் தடியும் தேற்றும்

4.    என் சத்துருக்களுக்கு முன்
பந்தி ஏற்படுத்தி
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்வார்

5.  என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மை க்ருபை செல்லும்
நான் கர்த்தர் வீட்டில் நீண்ட நாள்
நிலைத்து இருப்பேன்

Post Comment

Sunday, January 11, 2015

பாமாலை 350 - பிளவுண்ட மலையே

பாமாலை 350 – பிளவுண்ட மலையே (Rock of ages cleft for me)

‘நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்’. யாத் 33:22

‘நிழல்போன்ற வாழ்விலும், கண்ணைமூடும் சாவிலும்” புகலிடமாக விளங்கும் கற்பாறையே நமக்காகப் பிளவுண்ட கிறிஸ்து.  இந்தப் பாடலை எழுதியவர், அகஸ்டஸ் டாப்லேடி (Augustus Toplady) என்னும் போதகர்.  அவர் குருத்துவ ஊழியம் செய்த பிளாக்டன் கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு புல்வெளி இருந்தது.  அதில் புதர்களும், பாறைகளும் உண்டு.  போதகர் அடிக்கடி அங்கு கால்நடையாக உலாவச் செல்வது வழக்கம்.  ஒருநாள் அங்கு சென்றிருக்கையில், திடீரென்று புயலோடு கூடிய மழை உண்டாயிற்று. ஒதுங்குவதற்கு வழியில்லாமல் அங்குமிங்கும் பார்க்கையில் அவர் ஒரு பெரிய பாறையில் செங்குத்தான ஒரு பிளவைக்கண்டு, அதில் புயல் ஓயும்வரை ஒதுங்கி நின்று பத்திரமாகக் காப்பாற்றப்பட்டார்.  எப்போதும் ஆவிக்குரிய விஷயங்களையே சிந்தித்துக்கொண்டிருந்த நம் போதகருக்கு நேரிட்ட இந்நிகழ்ச்சி, பூலோகத்தில் நமக்கு நேரிடும் துன்பங்களுக்கு நாம் தப்பி ஒதுங்க நமது ஆண்டவர் புகலிடமாக விளங்குகிறார்’ என்னும் உணர்ச்சியை எழுப்பியது.  அப்போது, ‘பிளவுண்ட மலையே’ என்னும் பாடல் அவர் மனதில் உருவாயிற்று.  புயல் ஓய்ந்தவுடன் கீழே கிடந்த ஒரு சீட்டில் (Playing Card) இப்பாடலின் முதல் கவியை எழுதினார்.  இந்த சீட்டு இன்னமும் அமெரிக்காவில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.  வீட்டுக்குச் சென்றவுடன் இப்பாடலின் மீதிக் கவிகளையும் எழுதி முடித்தார்.

     விக்டோரியா மகாராணியாரின் கணவரான ஆல்பர்ட் கோமகன் இப்பாடலை பெரிதும் பாராட்டி, உள்ளத்தைக் கவரும் பாடல் எனக் கூறியுள்ளார்.  தமது மரணப் படுக்கையிலும் இதை அடிக்கடி பாடி, ‘இக்கடைசி நேரத்தில் எனது லௌகீக மகிமைகளையே நான் சார்ந்திருந்தேனாகில் மிகவும் எளியவனாவேன்’ என்றும், இப்பாடல் தனக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது என்றும் கூறினார்.

     இதை எழுதிய அகஸ்டஸ் டாப்லேடி என்பவர், 1740ம் ஆண்டு, நவம்பர் மாதம் 4ம் தேதி, இங்கிலாந்தில் பர்ன்ஹம் என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலப்படையில் உயர் பதவியில் இருந்து, சண்டையில் மாண்டார்.  தாயாரின் பராமரிப்பில் மகன் முதலில் லண்டன் மாநகரிலும், பின்னர் டப்ளின் நகரிலும் கல்வி பயின்று, ’எம்.ஏ.’ பட்டம் பெற்றார்.  1762ல் அவர் ஆங்கிலத் திருச்சபையில் குருவாக அபிஷேகம் பெற்று, புரோடன்பெரி என்ற நகரில் ஊழியம் செய்தார்.  ஆரம்பத்தில் அவர் மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியுடன் நட்புகொண்டிருந்து, பின்பு இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு உண்டானதால், பிரசங்க பீடத்திலிருந்து வெஸ்லியின் போக்கைக் கண்டித்தார்.  பிரசங்கம் செய்வதில் அதிக ஊக்கமும் திறமையுமுள்ளவர்.  எனினும் உடல் பலவீனமாயிருந்ததால் அதிக வேலை காரணமாக, 1778ம் ஆண்டு, தனது 38வது வயதிலேயே காலமானார்.


     ’பிளவுண்ட மலையே’ என்னும் பாடல் 1776’ல் எழுதப்பட்டது.  அநேக பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல இனிய ராகங்களில் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.  இதைத் தவிர அவர் வேறு பாடல்களும் எழுதியுள்ளார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.


2.    எந்தக் கிரியை செய்துமே
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே

3.    யாதுமற்ற ஏழை நான்
நாதியற்ற நீசன் தான்
உம் சிலுவை தஞ்சமே
உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன்
தூய்மையாக்கேல் மாளுவேன்

4.    நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே.

Post Comment

Wednesday, January 7, 2015

பாமாலை 208 - காரிருளால் மூடப்பட்ட (Helmskey)

பாமாலை 208 - காரிருளால் மூடப்பட்ட 
Tune : Helmskey

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

 

1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.


2. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.


3. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.

Post Comment

பாமாலை 53 - பாவிக்காய் மரித்த (Helmskey)

பாமாலை 53 - பாவிக்காய் மரித்த இயேசு
Lo! He comes with clouds
Tune : Helmskey

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பாவிக்காய் மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்;
கோடித் தூதர் அவரோடு
வந்து ஆரவாரிப்பார்
அல்லேலூயா
கர்த்தர் பூமி ஆளுவார்.

2.    தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று வெளிப்படுவார்
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர் இயேசுவைக் காண்பார்
திகிலோடு
மேசியா என்றறிவார்.

3.    அவர் தேகம் காயத்தோடு
அன்று காணப்படுமே
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள் அப்போதே
அவர் காயம்
தரும் நித்திய ரட்சிப்பை.

4.    உம்மை நித்திய ராஜனாக
மாந்தர் போற்றச் செய்திடும்
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா
வல்ல வேந்தே, வந்திடும்.

Post Comment

Friday, January 2, 2015

பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்.

2.    என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக் கெனதுண்மையாம்
துதியுண்டாவதாக
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்.

3.    இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக் காரும்
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க, ஆமேன்.

Post Comment