Friday, January 27, 2017

பாமாலை 395 - புல்லைப்போல் எல்லாரும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    புல்லைப் போல் எல்லாரும் வாடி
போறோம் சாகார் இல்லையே;
சாவில்லாமல் சீரும் மாறி
புதிதாகக் கூடாதே;
நீதிமான்கள் பரலோக
வாழ்வின் மகிமைக்குப் போக
இச்சரீரப் பாடெல்லாம்
முன் அழியத் தேவையாம்.

2.    ஆகையால் சந்தோஷமாக
ஸ்வாமி கேட்கும் வேளையில்
நானும் போறேன், இதற்காக
துக்கமில்லை; ஏனெனில்
எனக்காய்க் குத்துண்டிறந்த
இயேசுவால் மன்னிப்பைக்கண்ட
எனக்கவர் காயங்கள்
சாவில் போந்த ஆறுதல்.

3.    இயேசு எனக்காய் மரித்தார்
அவர் சாவென் லாபமாம்,
எனக்கு ரட்சிப்பளித்தார்;
ஆகையால் சிங்காரிப்பாம்;
மேன்மை தெய்வ மண்டலத்தைச்
சேர்ந்து, ஏக திரித்துவத்தை
நித்தம் பார்க்க மண்ணை நான்
விட்டுப்போக ஆசைதான்.

4.    அங்கே மெய்ச் சந்தோஷம் உண்டு,
அங்கே கோடி நீதியர்
வான ஜோதியால் சூழுண்டு,
அப்போதே கொண்டாடுவர்,
தூதரோடொன்றாய்க் குலாவி,
ஆ, பிதா குமாரன் ஆவி,
தூய தூய தூயரே
என்று பாடுவார்களே

5.    அங்கே கோத்திரப் பிதாக்கள்
ஞான திஷ்டிப் புருஷர்,
இயேசு ஸ்வாமியின் சீஷர்கள்
என்றும் வாசம் பண்ணுவார்.
அவ்விடம் சன்மார்க்கத்தார்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.
அங்கே என்றும் ஓதிய
இன்பச் சொல் அல்லேலூயா.

6.    ஆ. எருசலேமே, வாழ,
உன் மினுக்கே அழகு,
உன்னில் தோத்திரக் கிண்ணார
வாத்தியம் தொனிக்குது
ஆ, சந்தோஷம், ஆ, களிப்பு;
இப்போ பகலோன் உதிப்பு;
இப்போ நித்த ஒளிவு
எனக்கு விடியுது.

7.    அந்த மோட்ச மகிமையை
அப்போதே கண்ணோக்கினேன்
வானவரின் வெண்ணுடையைப்
பெற்று, பூண்டு கொள்ளுவேன்
நான் பொற் கிரீடத்தைத் தரிக்க
மாளா வாழ்வுமாய்க் கெலிக்க,
ஸ்வாமி ஆசனத்துக்கு
சேரும் வேளை வந்தது.

Post Comment

Saturday, January 21, 2017

பாமாலை 244 - பார் முன்னணை (Away in a Manger - Cradle Song)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7

William James Kirkpatrick
(Thanks : cyberhymnal) 
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை William James Kirkpatrick (1838-1921) என்பவர் மெட்டமைத்தார்.
 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger

Post Comment

Saturday, January 14, 2017

பாமாலை 69 - மகிழ்ச்சி பண்டிகை (Tune 2)

பாமாலை 69 – மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்
The happy Christmas comes once more

நிக்கோலாய் க்ரண்ட்விக் (Nikolai Frederik Severin Grundtvig) என்பவரால் 1817’ல் Danish மொழியில் (Det kimer nu til julefest) எழுதப்பட்டது இப்பாடல்.  க்ரண்ட்விக் 1783ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, டென்மார்க் தேசத்தில் இருக்கும் உட்பி (Udby) என்ற இடத்தில் பிறந்தார். க்ரண்ட்விக் தன்னுடைய இறையியல் பட்டப்படிப்பை கோபன்ஹாகன் (Copenwagen) பல்கலைக்கழகத்தில் முடித்தார். இருப்பினும் இவரது குருத்துவ பணி அத்தனை சிறப்பாக அமையவில்லை.  1811ம் ஆண்டு ஆயர் பணிக்கென இவர் அபிஷேகம் செய்யப்பட்டபோதிலும், சர்ச்சைக்குரிய இவரது இருவேறு பிரசங்கங்களால் இவர் ஆயர் பணியைத் துறக்க நேரிட்டது.  இருந்தபோதிலும் இவரது பாடல்கள் எழுதும் வேட்கை சற்றும் தணியவில்லை.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். ‘மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்’ எனும் இப்பாடல் Danish மொழியில் “Nyeste Skilderie af Kjøbenhagen” எனும் பத்திரிக்கையில் 1817ம் ஆண்டு முதன்முதலில் வெளியானது. சார்ல்ஸ் க்ராவ்த் (Charles Porterfield Krauth) என்பவர் இப்பாடலை 1867ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டென்மார்க்கைச் சேர்ந்த Carl Christian Nikolaj Balle என்ற போதகர் இப்பாடல் வரிகளுக்கான இசையை அமைத்தார் (இந்தப்பதிவில் உள்ள ராகம் அல்ல). சற்றேறக்குறைய 150 ஆண்டு பழமையான இந்த இனிமையான பாமாலை, கிறிஸ்மஸ் காலங்களில் தமிழ்திருச்சபைகளில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. க்ரண்ட்விக் 1872ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.

2. மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.

3. பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
ஆ! மைந்தா இல்லை உம்மிலும்;
விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்
புல்லணை கந்தை போர்த்தினீர்.

4. ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
மா தேசு விண் மண் தேக்கவே,
நள்ளிருள் நடுப் பகலாம்,
வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.

5. ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.

6. பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,
ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.

Post Comment

Tuesday, January 10, 2017

பாமாலை 355 - கர்த்தாவின் அற்புத

பாமாலை 355 – கர்த்தாவின் அற்புத செய்கை
God moves in a mysterious way

’கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்… என்றைக்கும் காப்பார்’. சங்கீதம் 121:8

’உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆகையால் பயப்படாதிருங்கள்’ (லூக்கா 12:7) என்று ஆண்டவராகிய இயேசு திருவுளம் பற்றியிருக்கிறார்.  வாழ்க்கையில் வெறுப்புற்று, மன அமைதி குலைந்து, நாம் அடிக்கடி சொந்த சித்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.  ஆயினும் அது ஆண்டவருடைய சித்தமாயிராவிட்டால் நிறைவேறுவதில்லை என்பதை எப்போதும் காண்கிறோம்.  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அநேக ஏமாற்றங்களையும், மனவேதனையையும் தாங்க முடியாத ஒரு பக்தன், ஆபிரகாமைத் தன் மகனைப் பலியிடக் கடவுள் ஏவினது போல, தன்னையே பலியிடக் கடவுள் ஏவுகிறார் என நம்பி, தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் கடவுள் ஓர் அற்புத செய்கையினால் அவரது திட்டத்தை செயல்படாமல் தடுத்துவிட்டார்.

William Cowper
(Thanks: thegospelcoalition.org)
வில்லியம் கூப்பர் (William Cowper) என்னும் ஆங்கிலக் கவிஞர் சிறந்த கடவுள் பக்தியும் வேத அறிவும் உள்ளவர்.  ஆனால் அவர் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் உண்டானதால், தாங்கமுடியாத மனவேதனையடைந்தார்.  இதன் விளைவாக அவர் மனநிலை மாறி, பைத்தியம் பிடித்தவர் போலானார்.  இவ்வேதனைகளுக்கு முடிவுகாண, தற்கொலை செய்துகொள்வதே நல்லது எனத் தீர்மானித்தார்.  அதற்காக லண்டன்மாநகருக்கருகில் ஓடும் தேம்ஸ் நதியில் விழுந்துவிட எண்ணங்கொண்டு, ஒரு வண்டியில் ஏறி, வண்டியோட்டியை தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட்டச்சொன்னார்.  வண்டியில் ஏறிய சிறிது நேரத்தில் சுற்றுப்புறமெல்லாம் அடர்த்தியான மூடுபனி மூடிக்கொண்டது.  பாதை தெரியாமல் வண்டியோட்டி வண்டியைப் பல வழிகளில் ஓட்டிச் சென்றான்.  வெகுதூரம் சென்றபோதிலும் குறிப்பிட்ட இடம் சேரமுடியாதலால், வண்டியை நிறுத்தி, பிரயாணியைப் பலவந்தமாகக் கீழே இறக்கிவிட்டான்.  கூப்பர் இருள் சூழ்ந்த தெருவில் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் தன் வீட்டு நடையிலேயே வந்து நின்றார்.  வீட்டுக்குள் சென்று, நடந்த சம்பவத்தை சிறிது நேரம் சிந்தித்ததில், தன் உயிரைக் காப்பாற்றவே கடவுள் மூடுபனியை அனுப்பினார் என்பதை உணர்ந்தார்.  உடனே மேஜையில் உட்கார்ந்து, ‘கர்த்தாவின் அற்புத செய்கை புத்திக்கெட்டாததாம்’ என்னும் பாடலை எழுத ஆரம்பித்து, சிறிது நேரத்தில் எழுதி முடித்தார்.  வாழ்க்கையில் சிக்கலான நிலைமைகளை அனுபவிக்கும் மக்களுக்கு மிகுந்த தைரியத்தையும் மனசாந்தியையும் இப்பாடல் அளிக்கிறது.

வில்லியம் கூப்பர் 1731ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இங்கிலாந்தில் பெர்க்காம்ஸ்டெட் நகரில் பிறந்தார்.  அவரது தந்தை இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் அரண்மனை குருவாக இருந்தார்.  இளமைக் கல்வியை முடித்தபின் அவரது விருப்பத்துக்கு மாறாக சட்டப்படிப்புக்கு அனுப்பப்பட்டு, வழக்கறிஞர் ஆனார்.  பின்பு பாராளுமன்றப் பிரபுக்கள் சபையில் எழுத்தாளராக அமர்ந்தார்.  பாராளுமன்றத்தில் அங்கத்தினர் முன் நின்று பேசுவதும், வாசிப்பதும் அவருக்கு அச்சத்தை உண்டாக்கியதால், சிறிது காலம் சுய புத்தியை இழந்து மந்த புத்தியினருக்கான மருத்துவமனையில் வைக்கப்பட்டார்.  இங்கிருக்கும்போது, ஒரு நாள் அங்குள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வேத புத்தகத்தை வாசித்து, லாசருவை உயிரோடெழுப்பின ஆண்டவர், தன்னையும் குணமாக்க முடியும் என்னும் விசுவாசத்தைப் பெற்றார்.  அவரது ஆத்தும நோயைப் போக்கினது மட்டுமல்லாமல் ஆண்டவர் அவரது சரீர நோயையும் குணப்படுத்தினார்.  அவரது சித்தநோய் குணமானது கண்டு மருத்துவர்கள் வியப்புற்றனர்.

மருத்துவமனையிலிருந்து வெளிவந்தபின், முதலில் ஹன்டிங்டன் நகரிலும், பின்னர் ஆல்னே நகரிலும் சில நண்பர்களுடன் வசித்து வந்தார்.  இங்கு ஆன் நியூட்டன் போதகருடன் நட்புகொண்டு, இருவரும் சேர்ந்து, ‘ஆல்னே பாடல்கள்’ என்னும் பாட்டு புத்தகத்தை இயற்றினார்.  இதில் கூப்பர் 67 பாடல்கள் எழுதியுள்ளார்.  இவரது பாடல்கள் ‘கிறிஸ்து சபையின் விலையுயர்ந்த பொக்கிஷங்கள்’ எனப் போற்றப்படுகின்றன.  கிறிஸ்தவப் பாடல்களைத் தவிர, கூப்பர் ஏராளமான ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலையில் உள்ளவை:

பாவி கேள்! உன் ஆண்டவர் – பாமாலை 283
இம்மானுவேலின் ரத்தத்தால் – பாமாலை 331

வில்லியம் கூப்பர் 1800ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக் கெட்டாததாம்;
பொங்கு கடல் கடும் காற்றை
அடக்கி ஆள்வோராம்.

2.    தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்துவைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே

3.    திகில் அடைந்த தாசரே,
மெய் வீரம் கொண்டிடும்
மின் இடியாய்க் கார் மேகமே
விண் மாரி சொரியும்.

4.    உம் அற்ப புத்தி தள்ளிடும்
நம்பிக்கை கொள்வீரே;
கோபமுள்ளோராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே.

5.    மூடர் நம்பிக்கையின்றியே
விண் ஞானம் உணரார்
தெய்வத்தின் ஞானம் தெய்வமே

வெளிப்படுத்துவார்.
God Moves in a mysterious way

Post Comment

Sunday, January 8, 2017

பாமாலை 324 - பாதை காட்டும் (Tune 2)

பாமாலை 324 - பாதை காட்டும், மா யெகோவா
(Guide me, O Thou great Jehovah)

‘உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்’ – சங்கீதம் 73:24

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலையடைந்து, நாற்பது ஆண்டுகளாகப் பாலைவனத்தில் பிரயாணம் செய்து, இறுதியில் கானான் தேசத்தையடைந்தனர்.  பாதை தெரியாத பாலைவனத்தில் அவர்களுக்கு வழி காட்டியது, பகலில் மேக ஸ்தம்பமும், இரவில் தீப ஸ்தம்பமுமே. வழியில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளே ஆச்சரியமானவிதமாக அளித்தார்.  நாமும் நமது சொற்பக் காலப் பூலோக வாழ்க்கையில், பாலைவனத்தில் வழி தெரியாது அலைந்து தெரியும் பரதேசிகள் போலவே இருக்கிறோம்.  கடவுளின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றினால் இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தையடைந்ததுபோல, சாவின் அந்தகாரமாகிய யோர்தானைப் பத்திரமாகக் கடந்து, பரம கானானை அடையலாம்.

Fferm Pantycelyn – The Heritage Board at Pantycelyn, in English and WelshSource : crichbaptist.org
இப்பாடலை எழுதிய வில்லியம்ஸ் போதகர் (William Williams) மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர். அவர் 1717ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் (Welsh) கார்மார்தென்ஷயர் (Carmarthenshire) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் John Williams மற்றும் Dorothy Williams ஆவர். இவரது தந்தை விவசாயத் தொழில் செய்து வந்தவர். இளமைக் கல்வியை முடித்தபின், இவர் வைத்தியத் தொழிலுக்காகப் பயில ஆரம்பித்தார்.  ஆனால் சிறிது காலத்தில் அதைவிட்டு, குருத்துவ ஊழியத்தில் ஈடுபட்டு, 1740ல் டீக்கனாக அபிஷேகம் பெற்று, மூன்று ஆண்டுகள் குருத்துவ ஊழியம் செய்தார்.  சுவிசேஷப் பிரபல்லியத்தில் மிக்க ஆர்வமுடையவராதலால், சபை ஊழியத்தை விட்டு, தனியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.  தமது ஊழியத்தின் ஆரம்பத்தில் அவர் வெஸ்லியின் கொள்கைகளை ஆதரித்து, இறுதியில் கால்வினிஸ்டு மெதடிஸ்டு குழுவினரைப் பின்பற்றினார். தமது தனி ஊழியத்தில், நாற்பது ஆண்டுகளுக்குள் அவர் தொண்ணூற்று ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்தார்.

1785-ஆம் ஆண்டு, ஹண்டிங்டன் (Huntingdon) சீமாட்டியாகிய செலீனா அம்மையார் (Selina), பக்தியுள்ள வாலிபரைக் குருத்துவ ஊழியத்துக்காகப் பயிற்றுவிக்க, தென்வேல்ஸ் நாட்டில் ஒரு வேத சாஸ்திரப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பித்தார்.  கல்லூரியின் ஆரம்ப விழாவில் பாடப்படுவதற்காக ஒரு புதிய பாடலை எழுதித் தருமாறு, ‘வேல்ஸ் நாட்டு இனிய பாடகர்’ (Sweet Singer of Wales) என்றழைக்கப்பட்ட வில்லியம்ஸ் போதகரை ஹண்டிங்டன் சீமாட்டியார் கேட்டார்.  ஆகவே போதகர், ‘பாதை காட்டும் மா யெகோவா’ என்னும் பாடலை எழுதி, அதற்கேற்ற ஒரு ராகமும் அமைத்து, விழாவில் தமது வாத்தியக் குழுவினருடன் முதல்முறையாகப் பாடினார்.  முதலில் இப்பாடல் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும், இப்போது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பாடப்பட்டு வருகிறது.  இப்பாடல் பல்வேறு ராகங்களில் பாடப்பட்டு வந்தாலும், ‘CWM Rhondda’ என்னும் வேல்ஸ் நாட்டு ராகமே அதற்கு மிகப் பொருத்தமானதென்று கருதப்படுகிறது. (இப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகம் அதுவன்று. CWM Rhondda ராகத்தினை இங்கே காணலாம்).

வில்லியம்ஸ் போதகர் வெல்ஷ் மொழியில் எண்ணூற்றுக்கும் அதிகமான பாடல்களும், ஆங்கிலத்தில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய வேறு பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  அவர் 1791ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் பான்டிஸெலின் என்னுமிடத்தில் தமது 74ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            பாதை காட்டும், மாயெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலோகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2.    ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3.    சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன்.

Post Comment

Saturday, January 7, 2017

பாமாலை 69 - மகிழ்ச்சி பண்டிகை

பாமாலை 69 – மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்
The happy Christmas comes once more


Nikolai Grundtvig
நிக்கோலாய் க்ரண்ட்விக் (Nikolai Frederik Severin Grundtvig) என்பவரால் 1817’ல் Danish மொழியில் (Det kimer nu til julefest) எழுதப்பட்டது இப்பாடல்.  க்ரண்ட்விக் 1783ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, டென்மார்க் தேசத்தில் இருக்கும் உட்பி (Udby) என்ற இடத்தில் பிறந்தார். க்ரண்ட்விக் தன்னுடைய இறையியல் பட்டப்படிப்பை கோபன்ஹாகன் (Copenwagen) பல்கலைக்கழகத்தில் முடித்தார். இருப்பினும் இவரது குருத்துவ பணி அத்தனை சிறப்பாக அமையவில்லை.  1811ம் ஆண்டு ஆயர் பணிக்கென இவர் அபிஷேகம் செய்யப்பட்டபோதிலும், சர்ச்சைக்குரிய இவரது இருவேறு பிரசங்கங்களால் இவர் ஆயர் பணியைத் துறக்க நேரிட்டது.  இருந்தபோதிலும் இவரது பாடல்கள் எழுதும் வேட்கை சற்றும் தணியவில்லை.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். 

Charles Krauth
‘மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்’ எனும் இப்பாடல் Danish மொழியில் “Nyeste Skilderie af Kjøbenhagen” எனும் பத்திரிக்கையில் 1817ம் ஆண்டு முதன்முதலில் வெளியானது. சார்ல்ஸ் க்ராவ்த் (Charles Porterfield Krauth) என்பவர் இப்பாடலை 1867ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டென்மார்க்கைச் சேர்ந்த Carl Christian Nikolaj Balle என்ற போதகர் இப்பாடல் வரிகளுக்கான இசையை அமைத்தார். சற்றேறக்குறைய 150 ஆண்டு பழமையான இந்த இனிமையான பாமாலை, கிறிஸ்மஸ் காலங்களில் தமிழ்திருச்சபைகளில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. க்ரண்ட்விக் 1872ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி காலமானார்.

தகவல் & புகைப்படங்கள் : Wikipedia, Cyberhymnal, Hymntime

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.

2. மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.

3. பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
ஆ! மைந்தா இல்லை உம்மிலும்;
விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்
புல்லணை கந்தை போர்த்தினீர்.

4. ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
மா தேசு விண் மண் தேக்கவே,
நள்ளிருள் நடுப் பகலாம்,
வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.

5. ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.

6. பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,
ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.


Post Comment