Wednesday, May 30, 2018

Old Rugged Cross (கொல்கொதா மலைமேல்)

ஈனச்சிலுவை
(Old Rugged Cross)

பெரிய வெள்ளிக்கிழமை மும்மணி ஆராதனை.  ஆலயம் நிரம்பி வழிகின்றது.  சிலுவைக் காட்சியின் அடிப்படையில் செய்திகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.

‘என்ன? கிறிஸ்தவர்கள் விக்கிரகத்திற்குப் பதிலாக சிலுவையை வணங்குகிறார்களோ?”

தப்புக்கணக்குப் போடவேண்டாம்.  சிலுவைக் காட்சியின் மையக் கதாநாயகனான தியாகச் செம்மல் இறைஇமகன் இயேசுவையே தியானம் செய்கின்றோம்.  ஆம்.  இறைவனின் தியாக அன்பை அறிய சிலுவைத் தியானம் அவசியமே.  இதன் அருமையை அறிந்த பவுல் ‘ரோமர்களும் மற்றவர்களும் கீழ்த்தரமாக மதித்த இந்த ஈனச் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன்” என்று வெற்றிப் பெருமிதம் கொள்கிறான்.

எனவே 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடலாகிய இப்பாடலும், சிலுவையின் பின்னணியில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  பாடுகள் நிறைந்த தன் வாழ்க்கையின் பிரச்சனைகளின் மத்தியில், ஆறுதலைத் தேடி, சிலுவைத் தியானத்தை மேற்கொண்ட ஒரு தேவ மனிதனின் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடலாகும்.

George Bennard
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் பென்னார்டு (George Bennard) 1873ம் ஆண்டு ஓகியோவிலுள்ள யங்க்ஸ்டவுனில் (Youngstown, Ohio) பிறந்தார்.  பின்னர் அயோவாவிலுள்ள லூக்காஸ் என்ற ஊரில் சிறுவனாக இருக்கும்போதே, இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார்.  பதினாறு வயதாகுமுன்பே தந்தையை இழந்தார்.  உடனே இரட்சணிய சேனையில் (Salvation Army) சேர்ந்தார்.

பென்னார்டு மெதடிஸ்ட் சபை போதகராக சிறப்பாக ஊழியம் செய்தார்.  பின்னர் மிச்சிகன் நியூயார்க் மாநிலங்களில் உயிர் மீட்சிப் பணியில் ஈடுபட்டார்.  மீண்டும் மிச்சிகனுக்கு வந்த அவர், கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தார்.  அந்நாட்களில் கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பற்றிப் பவுல் எழுதிய வேதவசனங்களை தியானித்தார்.  சிலுவையைப் பற்றிய உபதேசம், நற்செய்தியின் மையக் கருத்தாக இருப்பதை பென்னார்டு உணர்ந்தார்.

இச்சிலுவைத் தியானங்களின்போது, 1913ம் ஆண்டு ஒருநாள் இப்பாடலை எழுத ஆரம்பித்தார்.  அதை எழுதியவுடன் தன் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்திக்கவே, தேவன் இப்பாடலைக் கொடுத்ததாக எண்ணினார்.  பின்னர் 7.6.1913 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்பின் சிக்காகோ நற்செய்திக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டங்களில் பாடப்பட்டு பிரபலமானது.

இப்பாடலின் ராகத்தையும் பென்னார்டே அமைத்தார்.  உலகப் பிரசித்திபெற்ற இப்பாடலை எழுதிய பென்னார்டு 85ம் வயதில், 9.10.1958 அன்று, தனது இவ்வுலக வாழ்வின் சிலுவையை, பரலோகத்தின் பொற்கிரீடமாக மாற்றிக்கொண்டார். 

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




























1.    கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
     அல்லல் பழிப்பின் சின்னமதாம்
     நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
     நேசிப்பேன் அத்தொல் சிலுவையை



அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

2.    தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது
                - அந்தச் சிலுவையை

3.    என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் !
                - அந்தச் சிலுவையை

4.    குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில்
                - அந்தச் சிலுவையை
******************************************************************************
































1.       On a hill far away stood an old rugged cross,
the emblem of suffering and shame;
and I love that old cross where the dearest and best
for a world of lost sinners was slain.

          Refrain:

So I'll cherish the old rugged cross,
till my trophies at last I lay down;
I will cling to the old rugged cross,
and exchange it some day for a crown.

2.       O that old rugged cross, so despised by the world,
has a wondrous attraction for me;
for the dear Lamb of God left his glory above
to bear it to dark Calvary. [Refrain]

3.       In that old rugged cross, stained with blood so divine,
a wondrous beauty I see,
for 'twas on that old cross Jesus suffered and died,
to pardon and sanctify me. [Refrain]

4.       To that old rugged cross I will ever be true,
its shame and reproach gladly bear;
then he'll call me some day to my home far away,
where his glory forever I'll share. [Refrain]

Post Comment

Monday, May 28, 2018

SS 657 - Sweet Peace (இனிய சமாதானம்)

இனிய சமாதானம்
(SS 657 - Sweet Peace)

இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பீட்டர் பில்ஹார்ன் (Peter P. Bilhorn).  இப்பாடல் பிறந்த கதையை அவரே பின்வருமாறு விவரிக்கிறார்.

‘நியூ ஜெர்ஸியிலுள்ள ஓஷன் குரோவ் (Ocean Grove) என்ற இடத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் பாடுவதற்கு நான் அழைக்கப்பட்டேன்.  எனவே ஆரம்ப நாட்களில் நான் அடிக்கடி பாடும் “அதிசயக் கதையை நான் பாடுவேன்” (I Will Sing the Wondrous Story) என்ற பாடலைப் பாடினேன்.

கூட்டமுடிவில் என் நண்பரான திருமதி ஐடா ஸ்டாட்டர்ட் டெமெரஸ்ட் (Ida Stoddard Demerast) என்ற சகோதரி என்னிடம் வந்து, ‘பில்ஹார்ன்.. நீங்கள் பாடிய பாடல் உங்கள் குரலுக்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறது.  அதுபோல என் குரலுக்குப் பொருத்தமான பாடலொன்றை நீங்கள் எழுதமுடியுமா?” என்று கேட்டார்.

‘என்ன தலைப்பில் அப்பாடல் இருக்கவேண்டும்?” என்று நான் கேட்டேன்.  அதற்கு அவர், ‘ஏதேனும் ஓர் இனிய பாடல்! அவ்வளவுதான்’ என்றார்.  ‘இனிய பாடல்’ என்ற அவரின் பதிலை நான் குறித்துக்கொண்டேன்.

இரவில் சகோ S.T. கார்டனின் (S.T. Gordon) இல்லத்தில் நான் பியானோவின் முன் அமர்ந்திருந்த வேளையில், புதிய ராகம் ஒன்று எனக்குள் உருவானது.  எனினும் பாடலோ ‘இனிய பாடல்’ என்ற தலைப்போடு, வேறு வார்த்தைகளின்றி நின்றுகொண்டிருந்தது.

அதன்பின்னர், பனிக்காலத்தில் D.L. மூடி (D. L. Moody) என்னிடம் தொடர்பு கொண்டு, அயோவாவில் (Iowa) நடைபெறும் மேஜர் விட்டிலின் (Major Whittle) நற்செய்திக் கூட்டங்களில் பங்கேற்குமாறு அழைத்தார்.  அதை ஏற்று நானும், மேஜர் விட்டிலும் சிக்காகோவிலிருந்து புறப்பட்டோம்.

Peter P. Bilhorn
இல்லினாஸிலுள்ள வீட்டன் (Wheaton, Illinois) என்ற நகரை நெருங்கும் நேரத்தில், திடீரென நாங்கள் சென்ற புகைவண்டியின் எஞ்சின் உச்ச தொனியில் எச்சரிக்கைக் குரலெழுப்பி நின்றது.  நாங்கள் இருவரும் இறங்கிச் சென்று பார்த்தோம்.  எங்கள் ரயிலில் ஒரு வயதான பெண்மணி அடிபட்டு இறந்து போயிருந்தார்.  அவரது சிதைந்து போன உடல் ஒரு குழியில் கிடந்தது.  அச்சடலத்தை அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அச்சரீரம் இருந்த குழியில் ரத்தம் மட்டும் சிறு குளம் போலத் தேங்கியிருந்தது.

மேஜர் விட்டில் என் தோளில் தட்டி “இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இதை மட்டுமே விட்டுச் சென்றார் என்று உனக்குத் தெரியுமா? நம்மை நீதிமான்களாக்க அவருடைய சரீரம் உயிர்த்தெழுந்தது.  ஆனால் அவரது ரத்தமோ நமது பாவங்களை நிவிர்த்தி செய்ய சிந்தப்பட்டது என்றார்.

‘ஆம் மேஜர்.  இயேசுவின் ரத்தம் எனது பாவங்களை நிவிர்த்தி செய்கிறதென்பதே எனக்கு இனியதோர் சமாதானத்தைத் தருகிறது’ என்றேன்.

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.


பாடல் பிறந்த கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே செல்லவும்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  என் உள்ளத்தில் தொனிக்குதே
மகிழ்ச்சியின் கீதமதே
தேவன்பின் ஈவாக வந்ததே
இனிய சமாதானம்.

     சமாதானம்
     உன்னத சமாதானம்
     தேவன்பின் அற்புத ஈவே
     இனிய சமாதானம்

2. கிறிஸ்து சிலுவையிலே
என் கடன் செலுத்தித் தீர்த்தார்
தேவன்பு தான் என் அஸ்திபாரம்
இனிய சமாதானம்.

3. இயேசுவே என் கர்த்தரானார்
என் உள்ளத்தில் சமாதானம்
அளவில்லா ஆசீர்வாதமே
இனிய சமாதானம்.

4. இயேசுவை நான் பற்றிக்கொண்டே
சமாதானத்தில் நிலைப்பேன்
கலக்கமின்றி வாழுவேன்
இனிய சமாதானம்.





























1.      There comes to my heart one sweet strain,
A glad and a joyous refrain;
I sing it again and again--
Sweet peace, the gift of God’s love.

Chorus:

Peace, peace, sweet peace!
Wonderful gift from above!
O wonderful, wonderful peace!
Sweet peace, the gift of God’s love!

2.      Thro' Christ on the cross peace was made,
My debt by His death was all paid;
No other foundation is laid
For peace, the gift of God’s love. (Chorus)

3.      When Jesus as Lord I had crowned,
My heart with this peace did abound;
In Him the rich blessing I found--
Sweet peace, the gift of God’s love. (Chorus)

4.      In Jesus for peace I abide,
And as I keep close to His side,
There’s nothing but peace doth betide--
Sweet peace, the gift of God’s love. (Chorus)



Post Comment

Thursday, May 17, 2018

Met Again in Jesus Name (கூடி மீட்பர் நாமத்தில்)

Met Again in Jesus Name (கூடி மீட்பர் நாமத்தில்)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2.    இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் --- ஆ! இன்ப

3.    சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் --- ஆ! இன்ப

4.    வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் --- ஆ! இன்ப
*************************************
1.       Met again in Jesus’ name
At his throne we humbly bow
He is evermore the same
Lo! He waits to meet us now.

          Oh! Happy, happy, happy place
          Where oh we seek the Saviours face
          And He reveals His wondrous grace
          Happy, happy, happy place

2.       In his name, if two or three,
Meet, and for his mercy call,
There, the savior saith, I’ll be
In the midst, to bless you all

3.       You shall never ask in vain,
Though your number be put few;
Firm the promise doth remain;
Lo! I always am with you.

4.       Saviour, we believe the word;
Calmly wait the promised grace.
Spirit of our risen Lord,

Holy spirit, fill the place!
*************************************

Post Comment