Thursday, June 21, 2018

Great is Thy Faithfulness (நீர் உண்மையுள்ளவர்)

நீர் உண்மையுள்ளவர்

(Great is thy faithfulness)

திடீர்த்திருப்ப அனுபவங்களின் அடிப்படையில் பல பாடல்கள் உருவானதுண்டு.  ஆனால் இப்பாடலோ, தேவன் உண்மையுள்ளவர் என்பதைத் தனது அனுதின வாழ்வின் சொந்த அனுபவமாக இப்பாடலாசிரியர் உணர்ந்ததின் அடிப்படையில் உருவானது.

Thomas Obadiah Chisholm
தாமஸ் ஒபதியா சிஷோம் (Thomas Obadiah Chisholm) அமெரிக்காவின் கென்ட்டக்கி (Kentucky) எனும் ஊரில் ஒரு எளிய மரவீட்டில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியோ பயிற்சியோ பெற அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. எனவே, தாம் ஆரம்ப நிலைப் பயிற்சி பெற்ற அதே கிராமப் பள்ளியின் ஆசிரியராக, தமது 16வது வயதிலேயே பணி செய்ய ஆரம்பித்தார்.  பின்னர் 21 வயதிலே, அவரது சொந்த ஊரின் செய்தித்தாளான ‘பிராங்க்ளின் ஃபேவரைட்’ என்ற நிறுவனத்தின் துணை ஆசிரியரானார். ஆறு ஆண்டுகளுக்குப்பின்னர் Frank Morrison நடத்திய ஒரு மறுமலர்ச்சிக் கூட்டத்தில் தமது 27வது வயதில் கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார்.  அதன் பின்னர், ‘பெந்தெகொஸ்தே தூதுவன்’ எனும் பத்திரிக்கையின் ஆசிரியரானார்.

பின்னர் சிஷோம், மெதடிஸ்ட் சபைப் போதகராக அபிஷேகம் பெற்று, சில ஆண்டுகள் பணியாற்றினார்.  ஆனால், சுகவீனத்தின் காரணமாக அவ்வேலையை ராஜினாமா செய்தார்.  1953ம் ஆண்டில் இவ்வாறு பணி ஓய்வு பெற்றார் சிஷோம். அவர் 1200க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

William M. Runyan
இவற்றில் பல பாடல்களை அவர் வில்லியம் ரன்யான்  (William M. Runyan) என்னும் இசையமைப்பாளருக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.  அவ்வாறே 1923ம் ஆண்டு, கடவுள் தன் எளிய வாழ்விலும் எவ்வளவு உண்மையுள்ளவராய் இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, “Great is Thy faithfulness” பாடலின் வரிகளை எழுதி ரன்யானுக்கு அனுப்பிவைத்தார். இதைப் பற்றி ரன்யன் பின்னர் கூறுகையில், ‘சிஷோம் அனுப்பிய பல பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  எனவே ‘நான் அமைக்கும் ராகம் இப்பாடலின் செய்தியை அர்த்தமுள்ளதாக, மிக அருமையாகக் கொண்டுசெல்லவேண்டும்’ என்று மிகுந்த பாரத்தோடு ஜெபித்தேன்.  அதன் பின்விளைவுகள்.. தேவன் என் விண்ணப்பத்தைக் கேட்டார்’ என்பதை நிரூபித்துக்காட்டுகின்றன’ என்று கூறினார்.

இப்பாடல் முதன்முறையாக இங்கிலாந்து தேசத்தில் 1954ம் ஆண்டு நடைபெற்ற பில்லி கிரஹாமின் நற்செய்திக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    
நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!
மாறாத கர்த்தரே நீர் என் பிதா!
நீரே கர்த்தர் நீர் ஐஸ்வர்யமுள்ளவர்
சதா காலமும் நீர் மாறாதவர்

நீர் உண்மையுள்ளவர்! உம் உண்மை பெரியது!
காலைதோறும் புது கிருபைகள்
தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன்
உம் உண்மை பெரியது என்னிடமாய்

2. உம் உண்மை இரக்கம் அன்பு கிருபை
எத்தனை மா திரள் என்பதற்கு
கோடை பனி காலமும் அறுப்பு யாவும்
சர்வ சிருஷ்டியும் சாட்சியாகும்

3. தேவசமாதானம் பாவ மன்னிப்பும்
பெலத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
உம் திவ்ய சமுகம் என்னை நடத்தி
ஆசீர்வதியும் என் அன்பின் தேவா






Great Is Thy faithfulness, O God my Father!
There is no shadow of turning with Thee;
Though changest not, Thy compassions, they fail not
As Thou hast been Thou forever wilt be.

Refrain:

Great Is Thy faithfulness,
Great Is Thy faithfulness,
Morning by morning new mercies I see;
All I have needed Thy hand hath provided
Great is Thy Faithfulness, Lord unto me!

Summer and winter, and springtime and harvest,
Sun, moon, and stars in their courses above,
Join with all nature in manifold witness
To Thy great faithfulness, mercy, and love.

Pardon for Sin and a peace that endureth,
Thine own dear presence to cheer and to guide,
Strength for today and bright hope for tomorrow
Blessings all mine, with ten thousand beside!



Post Comment