Thursday, November 12, 2020

பாமாலை 272 - விண் வாழ்வில் ஆசை (Tune -St. Francis Xavier)

பாமாலை 272 - விண் வாழ்வில் ஆசை
My God I love Thee
(Tune -St. Francis Xavier)

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல,
நித்திய சாவையே
நான் அஞ்சியல்ல; ஆண்டவா,
நேசிப்பேன் உம்மையே.
 
2. மனுக்குலம் அனைத்தையும்
உம் குரூசில் அணைத்தீர்;
எனக்காய் ஆணி ஈட்டியும்
நிந்தையும் சகித்தீர்
 
3. சத்துரு நீசன் எனக்காய்
சகித்தீர், நாதரே,
இரத்த வேர்வை வேதனை
வல் துக்கம் சாவுமே
 
4. என் திவ்விய நாதர் இயேசுவை,
நரக அச்சமும்
நன் மோட்ச ஆசையும் அற்றே,
நேசிப்பேன் முற்றிலும்.
 
5. எவ்வீவும் எதிர்நோக்கிடேன்
பிரதி பலனும்;
என்னை மா, அன்பா! நேசித்தீர்
நேசிப்பேன் நீசனும்.
 
6. என் சுவாமி நித்திய வேந்தரும்
நீர் தாமே; ஆகையால்
என்றென்றும் உம்மை நேசித்துப்
புகழ்வேன் பாடலால்.   

Post Comment

Monday, November 9, 2020

பாமாலை 200 - கர்த்தாவே பரஞ்சோதியாய் (Tune - St. Lawrence)

பாமாலை 200 - கர்த்தாவே பரஞ்சோதியாய்
O Thou who makest souls to shine

Tune - St. Lawrence


 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. கர்த்தாவே, பரஞ்சோதியால்
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்;
சீர் அருள் என்னும் பனியால்
உம் அன்பாய்வோரை உய்விப்பீர்.
 
2. உம் மந்தை சுத்தமாகவும்,
விளக்கெல்லாம் இலங்கவும்
போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம் அருளும்.
 
3. விண் ஆள் தாம் முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்,
விஸ்வாசம், நம்பிக்கை, அன்பே
பிரசங்கிப்போர்க்கு ஈந்திடும்.
 
4. எவ்வேழையான பேர்களும்
மேலான ராஜியம் சேரவே,
கேட்போர்க்குக் கற்க விருப்பம்,
சற்குணம், சாந்தம் நல்குமே.
 
5. நிர்ப்பந்த ஆயுள் முழுவதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
உம் மேய்ப்பர், மந்தை இரண்டையும்
ஆசீர்வதித்துக் காருமே.
 
6. இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்;
இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்.

Post Comment

Saturday, November 7, 2020

பாமாலை 24 - மா மாட்சி கர்த்தர் (Tune - Old 104th)

பாமாலை 24 – மா மாட்சி கர்த்தர்
(O worship the King all glorious above)
Tune - Old 104th

’கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்’. சங் 145:10

நமது ஆலய ஆராதனைகளில் முதல்பகுதியைப் பொதுவாகத் தெய்வதுதியாக ஆசரிக்கிறோம்.  ஆராதனை ஆரம்பத்தில் பாடுகிற பாடல்கள், வாசிக்கிற வேதபகுதிகள், ஏறெடுக்கிற ஜெபங்கள் முதலியன ஆண்டவரின் துதியாகவே இருக்கின்றன.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதி தெய்வதுதிப் பாடல்களாகவே இருக்கின்றன. சங்கீதப் புத்தகத்தில் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற அநேக சங்கீதங்களுண்டு.  சங்கீதங்கள் 95-107, 145-150, இதற்கு உதாரணங்களாகும்.  ’மாமாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்’ என்னும் பாடல் 104ம் சங்கீதத்தைத் தழுவி, தெய்வதுதிப்பாடலாக எழுதப்பட்டது.  இச்சங்கீதத்தில் கடவுளின் மகிமை வானத்திலும் பூமியிலும் நிரம்பியிருத்தல் போற்றப்படுகிறது.

Sir Robert Grant

1834ம் ஆண்டு, பம்பாய் நகரத்தில் ஸர் ராபர்ட் கிரான்ட் (Sir Robert Grant) என்பவர் கவர்னராயிருந்தார்.  இவர் திருமறையை நுட்பமாகப் படிப்பதிலும், திருமறையின் பல மொழிபெயர்ப்புகளை ஒத்துப்பார்ப்பதிலும் தனது ஓய்வு நேரத்தை செலவு செய்தார்.  ஒருநாள் அவர், வில்லியம் கீத் என்பவரால் 1561ல் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சங்கீதக் கோர்வையை (Psalter) படித்துக்கொண்டிருக்கும்போது, 104ம் சங்கீதத்தின் மொழிபெயர்ப்பு அவரை அதிகமாகக் கவர்ந்தது.  அவர் மூலமொழியில் இச்சங்கீதத்தைப் படித்துக் கடவுளின் சர்வ வல்லமையையும், சர்வ மகிமையையும் விவரிக்கும் ஓர் ஆங்கிலக் கவி எழுத விரும்பி, உடனே எழுத ஆரம்பித்தார்.  இதன் விளைவாகக் கிறிஸ்தவ உலகம் பெற்றதுதான், ‘மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்’ என்னும் பாடலாகும்.  இப்பாடல் முதலாவதாக, ‘கிறிஸ்தவ சங்கீதப் பாடல்கள்’ என்னும் புத்தகத்தில் பிக்கர்ஸ்தெத் என்பவரால் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்டது.  முதலில் இப்பாடல் புகழ்பெற்ற சங்கீத நிபுணரான ஜோகான் ஹேய்டன் என்பவரால் அமைக்கப்பட்ட ‘Lyons’ என்னும் ராகத்தில் பாடப்பட்டது.  ஆனால் நாம் இப்போது வில்லியம் கிராய்ட் என்பவர் எழுதிய ‘Hanover’ என்னும் ராகத்தை இதற்கு உபயோகிக்கிறோம்.  (இப்பதிவில் இதே சந்தத்தில் அமைந்த பிறிதோர் ராகமான ‘Old 104th' எனும் ராகம் கொடுக்கப்பட்டுள்ளது.  

இப்பாடலை எழுதிய ராபர்ட் கிரான்ட், 1779ம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர்.  இவரது தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.  அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அங்கத்தினராக இந்தியாவுக்கு வந்து, கம்பெனியின் வர்த்தக வாரியத்தின் (Board of Trade) செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.  இந்தியாவில் ஏராளமான பணம் சம்பாதித்தபின், தனது சொந்த நாடாகிய ஸ்காட்லாண்டுக்குத் திரும்பினார்.  அங்கு சென்றபின் தனது புதல்வரான ராபர்ட் கிரான்ட் என்பவரைக் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள மாக்டலீன் கல்லூரியில் கல்வி பயிலச் செய்தார், 1806’ல் ராபர்ட் கிரான்ட் சட்டக் கல்விப்பட்டம் பெற்று, மறு ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  1826ல் அவர் இங்கிலாந்திலுள்ள பாராளுமன்றத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1834ல் அவர் ‘ஸர்’ என்னும் உயர்பட்டம் பெற்று, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கீழ், பம்பாய் மாகாணத்தின் கவர்னாரகப் பதவியேற்று, ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.  1835’ல் அவர் எழுதிய பல பாடல்கள் புத்தக ரூபமாக வெளியிடப்பட்டன.  அவர் எழுதிய எல்லாக் கவிகளும், மற்றும் பல இலக்கியங்களும், அவர் இறந்தபின், அவரது தமையனாரான கிரென்லக் பிரபுவால் வெளியிடப்பட்டன.

ஸர் ராபர்ட் கிரான்ட் மிகவும் உதாரகுணம் படைத்தவர்.  தர்ம காரியங்களுக்கு ஏராளமான பொருளுதவி செய்துவந்தார்.  பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டினார்.  அவர் கவர்னர் பதவியிலிருக்கும்போதே, 1838ம் ஆண்டு, ஜூலை மாதம், 9’ம் தேதி, தமது 59ம் வயதில் பம்பாய் நகரில் காலமானார்.  அவர் ஞாபகார்த்தமாக பம்பாயில் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டிருக்கிறது.

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர்.
 
2.    சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின் மேகம் கோப ரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே.
 
3.    மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே.
 
4.    ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்.

Post Comment

Saturday, October 31, 2020

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Tune - Nettleton)

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.    நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.    தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.


Post Comment

Thursday, October 29, 2020

பாமாலை 280 - குடிக்க யாவரும் (Bavarian 138)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறே ஆராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ?
 
2. சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர் நிமித்தமே
பிதா இறங்கினார்.
 
3. உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசுவண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழியைக் காட்டுவர்
தெய்வாவி அல்லவோ.
 
4. அன்புள்ள கர்த்தரே,
அநேக பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக்காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந் தீருமேன்.
 
5. மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
 
6. என் தவனத்துக்கு
அஜ்ஜீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்

என்மேல் வரட்டுமேன். 


Post Comment

Wednesday, October 14, 2020

பாமாலை 388 - எத்தனை நாவால் பாடுவேன் (Tune | Lord fill my craving heart)

பாமாலை 388 - எத்தனை நாவால் பாடுவேன் 
O for a Thousand tongues to sing
(Tune | Lord fill my craving heart)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1.    எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.
 
2.    பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.
 
3.    உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
 
4.    ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.
 
5.    என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.


Post Comment

Sunday, October 11, 2020

பாமாலை 259 - இயேசுவே நீர்தாமே

பாமாலை 259 - இயேசுவே, நீர்தாமே (Bavarian 96)
Jesu Meine Freude

Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. இயேசுவே, நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே,
நீர் என் பூரிப்பு;
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
உம்மை நோக்குது.
கர்த்தரே, உலகிலே
உம்மை யன்றி வாழ்விராது,
இன்பமும் காணாது.
 
2. நல் மறைவின் கீழே
நான் ஒதுங்க, நீரே
என் அரண்மனை;
சாத்தான் வர்மிக்கட்டும்,
எதிரி சீறட்டும்,
இயேசு என் துணை.
திகிலும் பயங்களும்
பாவ நரகக்கெடியும்
இயேசுவால் தணியும்.
 
3. வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்.
லோகமே, விரோதி;
நான் சங்கீதம் ஓதி
தோத்திரிக்கிறேன்.
தெய்வக்கை என் சலுகை;
இனிச், சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்.
 
4. பொக்கிஷங்கள் யாவும்
வீணும் விருதாவும்;
இயேசு என் கதி,
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வு குமிழிக்கும்
கானற்கும் சரி,
அதை ஏன் தொடருவேன்;
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு.
 
5. மனமே,  நீ ஆறு,
பூரிப்பாகப் பாடு,
இயேசு சேர்ந்தாரே;
அத்தால் எந்தப் பாடும்
தித்திப்பாக மாறும்.
நான் உலகிலே
நிந்தையும் நிஷ்டூரமும்
உத்தரித்தும், இயேசுதாமே
என் மகிழ்ச்சியாமே.

Post Comment

Wednesday, September 16, 2020

பாமாலை 266 - பிரியமான இயேசுவே

Unison

Soprano

Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. பிரியமான இயேசுவே,
என் நெஞ்சைத் தயவாக
நீர் பூரிப்பாக்கி, என்னிலே
மிகுந்த நிறைவாக
தெய்வீக அன்பை ஊற்றியே,
பேரருள் தந்த உம்மையே
நான் துதிசெய்வேனாக.

2. என் நெஞ்சில் உம்மால் பற்றின
அன்பென்னும் தீ எரியும்;
என் மனதும்மால் உத்தம
மகிழ்ச்சியை அறியும்;
நான் உம்மை நோக்கும்போதெல்லாம்,
என் துக்கம் உம்மிலே உண்டாம்
அருளினால் தெளியும்.

3. நீர் என் வெளிச்சம்; உம்மால்
நான் திறந்த முகமாக 
பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
என் ஆறுதலுக்காக
கண்ணோக்கும்போது, தயவாய்
நீர் என்னை நீங்கா ஜோதியாய்
பிரகாசிப்பிப்பீராக.

4. நீர் மோட்சத்துக்குப் போம் வழி;
உமக்குள்ளான யாரும்
தப்பிப் போகார்; ஆ, இந்நெறி
விலகினோர் எல்லாரும்
கெட்டழிந்து போவார்களே;
வழியாம் ஸ்வாமீ, உம்மிலே
நிலைக்க என்னைக் காரும்

5. நீர் சத்தியம்; நான் உம்மையே
தெரிந்துகொண்டிருப்பேன்;
மாறாத மெய்ப் பொருள் நீரே,
வீண் மாய்கையை வெறுப்பேன்;
உம்மாலே பாக்கியம் வரும்;
மெய்யே, என் நெஞ்சை என்றைக்கும்
நான் உமக்கே படைப்பேன்.

6. நீர் ஜீவன்; என்னை நீர் நீரே
பலத்தால் இடைகட்டும்;
திடன் இல்லா அந்நேரமே
என் நெஞ்சில் ஊக்கம் தாரும்,
தெய்வீக ஜீவன் என்னிலே
மென்மேலும் வளர்ந்தோங்கவே
நல்லாவியாலே காரும்.

(2-ஆம் பாகம்)

1. நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்
உம்மால் என் பசி ஆறும்;
நான் போம் வனாந்தரங்களில்
என் உள்ளம் உம்மை நாடும்;
பிதாவின் ஈவாம் மன்னாவே,
நீர் என்னைப் பாவ இச்சைக்கே
விலக்கிக் காத்துக்கொள்ளும்.

2. நீர் ஜீவ ஊற்று; உம்மாலே
என் ஆத்மத் தாகம் தீரும்;
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கும் தண்ணீராகும்;
நீரூற்றாய் என்னில் ஊறுமேன்,
நிறைவாய் நித்தம் தாருமேன்
ஆரோக்கியமும் சீரும்.

3. நீர் என்னை ஜோடிக்கும் உடை,
நீர் என் அலங்கரிப்பு;
நான் உம்முடைய நீதியை
அணிவதென் விருப்பு;
பூலோகத்தின் சிங்காரமாம்
விநோத சம்பிரமம் எல்லாம்
என் ஆவிக்கு வெறுப்பு.

4. நீர் நான் சுகித்து தங்கிடும்
அரண்மனையும் வீடும்;
புசல் அடித்தும் விருதா,
பேய் வீணாய் என்னைச் சீறும்;
நான் உம்மில் நிற்பேன், ஆகையால்
கெடேன்; பொல்லார் எழும்பினால்
நீர் என் வழக்கைத் தீரும்.

5. என் மேய்ப்பராய் இருக்கிறீர்,
என் மேய்ச்சலும் நீர்தாமே;
காணாமல்போன என்னை நீர்
அன்பாக மீட்போராமே;
இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
நீர் விலக விடாதேயும்
நான் உம்முடையோனாமே.

6. நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
மா நேசமுள்ள நாதர்;
நீரே என் ஆசாரியரும்
பலியுமான கர்த்தர்;
நீர் என்னை ஆளும் ராஜாவும்
உம்மோடே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன், மா சமர்த்தர்.

(3-ஆம் பாகம்)

1. நீர் உத்தம சிநேகிதர்,
என் நெஞ்சும்மேலே சாயும்;
நீர் உத்தம சகோதரர்,
நீர் என்னைப் பார்க்கும் தாயும்;
நீர் நோயில் பரிகாரியே,
உம்மாலே ஆறிப்போகுமே
என் காயமும் விடாயும்.

2. படையில் நீர் சேனாபதி,
வில் கேடகம் சீராவும்;
கரும் கடலில் நீர் வழி
காண்பிக்கும் சமுக்காவும்;
எழும்பும் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம், இயேசுவே,
நான் ஒதுங்கும் குடாவும்.

3. நீர் ராவில் என் நட்சத்திரம்,
இருளில் என் தீவர்த்தி;
குறைவில் நீர் என் பொக்கிஷம்,
தாழ்விலே என் உயர்ச்சி;
கசப்பிலே என் மதுரம்;
நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க, நீர் என் சக்தி.

4. நீர் ஜீவனின் விருட்சமும்,
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும், என்றைக்கும்
சுகம் தரும் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர், இயேசுவே,
குளிர்ந்த பூஞ்செடியும்.

5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்,
நீர் வாழ்வில் என் களிப்பு;
நீர் வேலையில் என் அலுவல்,
பகலில் என் சிந்திப்பு;
நீர் ராவில் என் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்,
விழிப்பில் என் குறிப்பு.

6. ஆ, ஒப்பில்லாதஅழகே!
நான் எத்தனை சொன்னாலும்
என் நாவினாலே கூடாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்
அதெல்லாம் நீரே, இயேசுவே;
ஆ, தயவுள்ள நேசரே
நீர் என்றும் என்னை ஆளும். 

Post Comment

Tuesday, August 4, 2020

பாமாலை 255 - நான் தேவரீரை கர்த்தரே

Unison 
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. நான் தேவரீரை, கர்த்தரே,

துதிப்பேன்; அடியேன்

எல்லாரின் முன்னும் உம்மையே

அறிக்கை பண்ணுவேன்.

 

2. ஆ, எந்தப் பாக்கியங்களும்

உம்மால்தான் வருமே,

உண்டான எந்த நன்மைக்கும்

ஊற்றானவர் நீரே.

 

3. உண்டான நன்மை யாவையும்

நீர் தாரீர்; நித்திய கர்த்தரே;

உம்மாலொழிய எதுவும்

உண்டாகக் கூடாதே.

 

4. நீர் வானத்தை உண்டாக்கின

கர்த்தா, புவிக்கு நீர்

கனிகளைக் கொடுக்கிற

பெலனையுந் தந்தீர்.

 

5. குளிர்ச்சிக்கு மறைவையும்

தாரீர்; எங்களுக்குப்

புசிப்பதற்கு அப்பமும்

உம்மால் உண்டாகுது.

 

6. ஆரால் பலமும் புஷ்டியும்,

ஆராலேதான் இப்போ

நற்காலம் சமாதானமும்

வரும்? உம்மால் அல்லோ.

 

7. ஆ, இதெல்லாம், தயாபரா,

நீர் செய்யும் செய்கையே;

நீர் எங்களைத் தற்காக்கிற

அன்புள்ள கர்த்தரே.

 

8. உம்மாலே வருஷாந்திரம்

பிழைத்து வாழ்கிறோம்;

உம்மாலே நாங்கள் விக்கினம்

வந்தாலும் தப்பினோம்.

 

9. ஆ, களிகூர்ந்து பூரித்து

மகிழ், என் மனதே;

பராபரன்தான் உனது

அநந்த பங்காமே.

 

10. அவர் உன் பங்கு, உன் பலன்;

உன் கேடகம், நன்றாய்த்

திடப்படுத்தும் உன் திடன்;

நீ கைவிடப்படாய்.

 

11. உன் நெஞ்சு ராவும் பகலும்

துக்கிப்பதென்ன? நீ

உன் கவலை அனைத்தையும்

கர்த்தாவுக் கொப்புவி.

 

12. உன் சிறு வயதுமுதல்

பராமரித்தாரே;

கர்த்தாவால் வெகு மோசங்கள்

விலக்கப்பட்டதே.

 

13. கர்த்தாவின் ஆளுகை எல்லாம்

தப்பற்றதல்லவோ;

ஆம் அவர் கை செய்கிறதெல்லாம்

நன்றாய் முடியாதோ?

 

14. ஆகையினால் கர்த்தாவுக்கு

நீ பிள்ளைப் பக்தியாய்

எப்போதும் கீழ்ப்படிந்திரு,

அப்போது வாழுவாய்.

Post Comment

Thursday, July 30, 2020

பாமாலை 189 - என் மீட்பர் இயேசுகிறிஸ்துவே (Holley)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano












































1.    என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.

2.    என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.

3.    உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.

4.    மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.

5.    என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Post Comment

Tuesday, July 28, 2020

பாமாலை 263 - ஜீவாதிபதி ஜோதியே (Hursley)

பாமாலை 263 – ஜீவாதிபதி ஜோதியே

(Jesu Thou Joy of loving hearts)
Tune: Hursley

Unison with Descant
Unison
Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1. ஜீவாதிபதி, ஜோதியே,
பக்தரின் இன்ப இயேசுவே,
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்.

2. பாதம் சேர்ந்தோரை மீட்பீரே
இவ்வுண்மை என்றும் மாறாதே;
தேடுவோர்க்கு நீர் நல்லவர்;
பற்றுவோர்க்கு சம்பூரணர்.

3. விண் அப்பம் உம்மில் ருசிப்போம்,
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்;
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே.

4. மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்;
உம் அருட் பார்வை இன்பமே,
விஸ்வாசிப்போர்க்கு பாக்கியமே.

5. தங்கும் எம்மோடு, இயேசுவே,
எக்காலும் ஆற்றித் தேற்றுமே;
காரிருள் பாவம் ஓட்டுமே,
உம் தூய ஜோதி வீசுமே.

Post Comment

Friday, June 26, 2020

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Southgate)

பாமாலை 250 – யாரினும் மேலான அன்பர்
(One there is, above all others)
Tune: Southgate


John Newton
இப்பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் (John Newton).  இவரது காலம் 1725-1807. ஜான் ஏழு வயதாய் இருக்கும்போது அவரின் தாயார் மரித்துப்போக, தன் தந்தையுடன் கப்பல் பணியாளனாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகள் விற்கும் கப்பல்களில் மாலுமியாகவும், கப்பற் தலைவனாகவும் பணியாற்றிய நியூட்டன், பின்னர் இறைப்பணிக்கென்று தம்மை ஒப்புவித்து, இங்கிலாந்தின் Anglican திருச்சபையின் போதகராக அபிஷேகம் பெற்றார்.  பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும்.  “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு;
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே!

Post Comment