Saturday, May 30, 2020

பாமாலை 246 - அன்புருவாம் எம் ஆண்டவர் (Llangollen)

பாமாலை 246 – அன்புருவாம் எம் ஆண்டவா
Father in heaven Who lovest all

Tune: Llangollen L.M.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2. வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3. அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4. சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5. திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

Post Comment

Friday, May 22, 2020

பாமாலை 240 - என்னிடத்தில் பாலர் யாரும் (Alleluya)

பாமாலை 240 – என்னிடத்தில் பாலர் யாரும்
Tune: Alleluya

Meter: 8, 7, 8, 7, D

Samuel Sebastian Wesley
இப்பாடலை எழுதியவர் யார் என்ற தகவல் இல்லை.  பாடலுக்கான Alleluya எனும் இந்த ராகத்தை இயற்றியவர் சாமுவேல் வெஸ்லி (Samuel Wesley). இவரது காலை 1810-1876.  இங்கிலாந்தில் பிறந்த இவர் Chapel Royal பாடகர் குழுவில் இருந்து பின்னர் ஆர்கன் இசைப்பதில் தேர்ச்சி பெற்று இசைக்கத் துவங்கினார்.  சாமுவேல் தனது தந்தை Charles Wesley அவர்களிடமிருந்து ஆர்கன் இசைக்கப் பயின்று அவரிடமிருந்தே பாடல்கள் இயற்றவும் கற்றுக்கொண்டார்.  இங்கிலாந்தின் பல்வேறு தேவாலயங்களில் ஆரகினிஸ்டாகப் பணிபுரிந்த சாமுவேல், ஆலயப் பாடகர் குழுவின் பாடும் திறனையும், பாடல்களின் தரத்தையும் மேம்படுத்தும் ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதைக் குறித்த தனது ஆய்வு முடிவுகளை ”A Few Words on Cathedral Music and the Music System of the Church” என்ற புத்தகமாக வெளியிட்டார். இது தவிர இன்னும் பல்வேறு பாடல் தொகுப்புகளில் ஈடுபட்ட சாமுவேல் தன் வாழ்நாளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. “என்னிடத்தில் பாலர் யாரும்
வரவேண்டும்” என்கிறார்;
“இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்”,
என்று சொல்லி, நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்;
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. “தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா! மா ஸ்தோத்திரம்!
என்று பாடி, சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்தவண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி, பக்தியாய்
இயேசுவை வணங்கி, என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்.

3. பாலனாய்ப் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்;
நல்லோர், தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்.

Post Comment

Monday, May 18, 2020

பாமாலை 231 - ஆ நீதியுள்ள கர்த்தரே (Luther)

பாமாலை 231 – ஆ, நீதியுள்ள கர்த்தரே
(Ach Herre du gerechter Gott)
Tune: Luther

Meter: 8, 7, 8, 7, 8, 8, 7

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.         , நீதியுள்ள கர்த்தரே,
வயல் வறண்டதாலே
எஜ்ஜீவனும் வதங்கிற்றே;
இக்கேடு எங்களாலே
நடந்த பாவத்தின் பலன்,
என்றெங்களில் ஒவ்வொருத்தன்
துக்கித்துச் சொல்வானாக.

2.         , எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்;
நீரே அடியார் நம்பிக்கை,
சகாயத்தை அளியும்;
கர்த்தாவே, சுத்த தயவால்
மழையைத் தந்து, அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்.

3.         தயாபரா, நீர் உமது
நல் வாக்கு நிறைவேற,
காய்ந்து கிடக்கும் பூமிக்குத்
தண்ணீர் இறைப்பீராக;
வானுலகாளும் கர்த்தரே,
மழையை உம்மை அன்றியே
ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?

4.         மூச்சற்ற விக்ரகங்களால்
கூடாது; தேவரீரே
வானத்தைத் திருக்கரத்தால்
விரித்தீர்; அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்,
நீரே பிதா, நீர் ரட்சகர்,
உம்மாலே யாவும் ஆகும்.

Post Comment

Friday, May 15, 2020

பாமாலை 228 - ஆ வானம் பூமி (Breslau)

பாமாலை 228 – ஆ வானம் பூமி யாவையும்
Breslau L.M.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1. , வானம் பூமி யாவையும்
அமைத்து ஆளும் கர்த்தரே,
உமது ஞானம் சத்தியம்
அளவில் அடங்காததே.

2. உமக்கு வானம் ஆசனம்,
பூதலம் பாதப்படியாம்;
எங்களுக்கு இருப்பிடம்
கிடைத்தது மா தயையாம்.

3. இவ்வீட்டில் நாங்கள் வசித்து,
பக்தியோடும்மைப் போற்றுவோம்
இடைவிடாமல் துதித்து,
கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம்.

4. இங்கே இருக்கும் நாள்மட்டும்
உற்சாகத்தோடு உமக்கே
அடங்கி நாங்கள் நடக்கும்
குணத்தைத் தாரும் கர்த்தரே.

5. ஜீவன் பிரியும் நேரத்தில்
உம்மண்டை வந்து சேரவும்,
முடிவில்லாத இன்பத்தில்
நற்பங்கடையவும் செய்யும்.

6. இகத்திலும் பரத்திலும்
செங்கோல் செலுத்தும் நாதரே,
உமக்கு நித்திய காலமும்
துதி உண்டாவதாகவே!

Post Comment

Wednesday, May 13, 2020

பாமாலை 225 - களித்துப் பாடு

பாமாலை 225 – களித்துப் பாடு
(Nun preiset alle)
Bavarian 132

5, 6, 5, 6, 9, 10

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1. களித்துப் பாடு
தெய்வ இரக்கத்தை
நன்றாய்க் கொண்டாடு,
மெய்ச்சபையே; உன்னை
வரவழைத்துத் தயவாக
தேடினோர் அன்பைத் துதிப்பாயாக

2. கர்த்தர் பலத்த
கையினால் ஆளுவர்,
புகழப்பட
அவரே தக்கவர்;
விண் சேனை பக்திப் பணிவாக
அவரைச் சூழ்ந்து துதிப்பதாக

3. நிர்பந்தமான
அஞ்ஞானக் கூட்டமே,
வெளிச்சம் காண
விழிக்க வேண்டுமே;
உம் மீட்பராலே எந்தத் தீங்கும்
பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்

4. ஆகாரம் தாறார்,
தகப்பன் வண்ணமாய்
காப்பாற்றி வாறார்;
தினமும் திரளாய்
அவர் கை எவ்விடத்திலேயும்
பூரணமான இரக்கம் செய்யும்.

5. மெய்க் கூட்டத்தாரே,
கர்த்தரைப் பாடுங்கள்;
பூலோகத்தாரே,
துதிக்க வாருங்கள்
இங்கினிப் பயமே இராது;
கிறிஸ்துவின் சபையே, போற்றிப் பாடு

Post Comment