Thursday, April 4, 2024

பாமாலை 122 - அல்லேலூயா ஆ மாந்தரே (Arrangement-2)

 பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே

(Alleluya! O Sons and Daugh­ters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE

‘அல்லேலூயா! ஆ மாந்தரே’ எனும் இப்பாடல், கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே இப்பாடல் பாடப்படுகிறது. இப்பாடலை எழுதியவர் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த Jean Tisserand எனும் ஃப்ரெஞ்சு நாட்டின் துறவி என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.


John Mason Neale

ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர். அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர். ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார். திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது. அவர் ஒரு சிறந்த கல்விமான். ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார். திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார். அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*********************

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!





Post Comment

Sunday, March 24, 2024

பாமாலை 377 - பிதாவே பலன் ஈந்திடும்

பாமாலை 377 - பிதாவே பலன் ஈந்திடும்
My God My Father while I Stray


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத்தோடு பாடவும்
உம் சித்தமே

2. என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே

3. பணிவாய் உம்மைப் பற்றுவேன்
சுதாவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே

4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை ஆற்றிட
உம் சித்தமே

5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்ஞை எனக்கே
உம் சித்தமே

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே

Post Comment

Monday, February 26, 2024

பாமாலை 188 - உம்மாலேதான் என் இயேசுவே (Caithness)

பாமாலை 188 - உம்மாலேதான் என் இயேசுவே 
Tune : Caithness


SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.         உம்மாலேதான் என் இயேசுவே
ரட்சிக்கப்படுவேன்
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்
 
2.         இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்
 
3.         இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்
 
4.         பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்






Post Comment

Thursday, February 1, 2024

பாமாலை 380 - கர்த்தரை என்றுமே (Monks Gate)

பாமாலை 380 - கர்த்தரை என்றுமே
He who would valiant be
Tune : Monks Gate 


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. கர்த்தரை என்றுமே
பின்செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்

2. திகில் உண்டாக்குவார்
கோர கதையால்
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்

3. கர்த்தா நீர் காத்திட
தூய ஆவியால்
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்
வீண் எண்ணம் ஓடிடும்
வீண் பயம் நீங்கிடும்
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்


















Post Comment

Tuesday, January 30, 2024

பாமாலை 382 - துக்கம் திகில் இருள் சூழ (Marching)

பாமாலை 382 - துக்கம் திகில் இருள் சூழ 
Through the night of doubt and sorrow
Tune : Marching


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. துக்கம் திகில் இருள் சூழ
மோட்ச யாத்ரை செய்கிறோம்
கீதம் பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்

2.  இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீப ஸ்தம்ப ஜோதியும்
வீரமாக ஐக்யமாக
முன்னே செல்வோம் ராவிலும்

3. பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே
இருள் நீங்க அச்சம் நீங்கும்
பாதை முற்றும் பகலே

4. எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே
குன்றா விசுவாசமும்
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே
ஒன்றே எம் நம்பிக்கையும்

5. மோட்சம் செல்லும் கோடிப்பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்
ஆபத்து போராட்டம், தெய்வ
பாதை செல்வதும் ஒன்றாம்

6. மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே

7. முன்னே செல்வீர், தோழரே நீர்
சிலுவை உம் பலமாம்
நிந்தை தாங்கிப் போர்புரிவீர்
ஆயுள் காலமும் எல்லாம்

8. நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்
துக்கம் திகில் யாவும் நீங்கும்
பாடும் ராவும் ஓய்ந்துபோம்






















Post Comment

Monday, January 29, 2024

பாமாலை 383 - தெய்வ கிருபையைத் தேட (St. Oswald)

பாமாலை 383 - தெய்வ கிருபையைத் தேட 
Tune : St. Oswald


SATB

SATB with Descant

Descant

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக் கொண்டிரு
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப்படு

2. வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
ஜீவ வழியோ நெருக்கம்
லோக நேசத்தை விடு

3. சேவகத்தில் பின் வங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு
பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு

4. வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக்கொண்டேயிரு

5. கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு

6. ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள் இருக்குமே
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே

7. நீ முடிவைப் பெற்றிருந்தால்
கெட்டியாய்ப் பிடித்திரு
பின்னடைந்து போய்விழுந்தால்
மோசம் மா பெரியது

9. மாய்கையை நோக்காதே விட்டு
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து
நிர்விசாரத்தைப் பகை

















Post Comment

Tuesday, January 23, 2024

பாமாலை 389 - தூதாக்கள் விண்ணில்

பாமாலை 389 - தூதாக்கள் விண்ணில் 
Nun danket all und bringet

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  தூதாக்கள் விண்ணில் பாடிய
தயாபரருக்கே
துதி செலுத்து சகல
நரரின் கூட்டமே

2.  ”மா செய்கைகளைச் செய்கிற
பராபரனைப் போல்
ஆர்” என்றவரை உத்தம
கருத்தாய்ப் போற்றுங்கள்

3.  இந்நாள்வரைக்கும் நமக்கு
சுகம் அருளினார்
நீங்கா இக்கட்டைத் தமது
கரத்தால் நீக்கினார்

4.  நாம் செய்திருக்கும் பாவத்தை
பாராதிருக்கிறார்
தெய்வீக ஆக்கினைகளை 
அன்பாய் அகற்றினார்

5.  இனியும் நாம் மகிழ்ச்சியாய்
இருக்க சகல
தீங்கையும் அவர் தயவாய்
விலக்கியருள

6.  புவியில் சமாதானத்தை
அவர் தந்தென்றைக்கும்
அன்பாய் நாம் செய்யும் வேலையை
ஆசீர்வதிக்கவும்

7.  நம்மோடே அவர் தயவாய்
இருந்து துக்கமும்
வியாகுலமும் தூரமாய்
விலகப் பண்ணவும்

8.  நாம் சாகுமட்டுக்கும் கர்த்தர்
நாம் தங்கும் கோட்டையும்
நாம் சாகும்போது நம்முட
கதியுமாகவும்

9.  பிரிந்து போகும் ஆவியை
மோட்சானந்தத்திலே
அவர் சேர்த்ததைத் தம்மண்டை
மகிழ்ச்சியாகவே

Post Comment