Saturday, October 31, 2020

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Tune - Nettleton)

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.    நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.    தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.


Post Comment

Thursday, October 29, 2020

பாமாலை 280 - குடிக்க யாவரும் (Bavarian 138)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறே ஆராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ?
 
2. சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர் நிமித்தமே
பிதா இறங்கினார்.
 
3. உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசுவண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழியைக் காட்டுவர்
தெய்வாவி அல்லவோ.
 
4. அன்புள்ள கர்த்தரே,
அநேக பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக்காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந் தீருமேன்.
 
5. மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
 
6. என் தவனத்துக்கு
அஜ்ஜீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்

என்மேல் வரட்டுமேன். 


Post Comment

Wednesday, October 14, 2020

பாமாலை 388 - எத்தனை நாவால் பாடுவேன் (Tune | Lord fill my craving heart)

பாமாலை 388 - எத்தனை நாவால் பாடுவேன் 
O for a Thousand tongues to sing
(Tune | Lord fill my craving heart)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1.    எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.
 
2.    பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.
 
3.    உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
 
4.    ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.
 
5.    என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.


Post Comment

Sunday, October 11, 2020

பாமாலை 259 - இயேசுவே நீர்தாமே

பாமாலை 259 - இயேசுவே, நீர்தாமே (Bavarian 96)
Jesu Meine Freude

Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. இயேசுவே, நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே,
நீர் என் பூரிப்பு;
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
உம்மை நோக்குது.
கர்த்தரே, உலகிலே
உம்மை யன்றி வாழ்விராது,
இன்பமும் காணாது.
 
2. நல் மறைவின் கீழே
நான் ஒதுங்க, நீரே
என் அரண்மனை;
சாத்தான் வர்மிக்கட்டும்,
எதிரி சீறட்டும்,
இயேசு என் துணை.
திகிலும் பயங்களும்
பாவ நரகக்கெடியும்
இயேசுவால் தணியும்.
 
3. வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்.
லோகமே, விரோதி;
நான் சங்கீதம் ஓதி
தோத்திரிக்கிறேன்.
தெய்வக்கை என் சலுகை;
இனிச், சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்.
 
4. பொக்கிஷங்கள் யாவும்
வீணும் விருதாவும்;
இயேசு என் கதி,
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வு குமிழிக்கும்
கானற்கும் சரி,
அதை ஏன் தொடருவேன்;
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு.
 
5. மனமே,  நீ ஆறு,
பூரிப்பாகப் பாடு,
இயேசு சேர்ந்தாரே;
அத்தால் எந்தப் பாடும்
தித்திப்பாக மாறும்.
நான் உலகிலே
நிந்தையும் நிஷ்டூரமும்
உத்தரித்தும், இயேசுதாமே
என் மகிழ்ச்சியாமே.

Post Comment