Thursday, October 29, 2020

பாமாலை 280 - குடிக்க யாவரும் (Bavarian 138)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறே ஆராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ?
 
2. சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர் நிமித்தமே
பிதா இறங்கினார்.
 
3. உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசுவண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழியைக் காட்டுவர்
தெய்வாவி அல்லவோ.
 
4. அன்புள்ள கர்த்தரே,
அநேக பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக்காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந் தீருமேன்.
 
5. மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
 
6. என் தவனத்துக்கு
அஜ்ஜீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்

என்மேல் வரட்டுமேன். 


Post Comment

No comments:

Post a Comment