Tuesday, August 1, 2023

கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்

 கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்



இறையடி தினம் வரும் அடியவராய்
மறை பயில்வது தரும் நிறை மகிழ்வே
இறையியல் அறிவதில் துணிபவராய்
குறையற செயல்படல் இறை பணியே

1. அன்புடன் அறிவும் அமைந்திருந்தால்
ஆண்டவர் பணியதில் வளர்ந்திடலாம்
துன்புறும் நேரமும் துதியிருந்தால்
தூயனின் சேவையில் துணிந்திடலாம்

2. உணர்வுடன் உண்மையும் இணைந்திருந்தால்
உண்மையில் உணர்வுகள் உயர்வடையும்
உணர்ந்துமே மனுவெலாம் ஒருங்கிணைந்தால்
உலகினில் ஓரிறை அரசமையும்

3. சொல்லுடன் செயலும் சேர்ந்திருந்தால்
சொல்லிடும் செய்தியில் மெருகமையும்
வல்லவர் இயேசுவின் வழிநடந்தால்
வல்லமை வாழ்வெல்லாம் வந்தமையும்
***********************************************************



Post Comment

No comments:

Post a Comment