Saturday, July 19, 2025

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர் (Rest)

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர்
Dear Lord and Father of Mankind
Tune : Rest

‘அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று’. 1 இராஜாக்கள் 19 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் பல வித்தியாசமான முறைகளை அனுசரித்து வருகிறோம்.  சில கிறிஸ்தவ வழிபாடுகளில் பாடப்படும் பாடல்களும், ஏறெடுக்கப்படும் ஜெபங்களும் மிகவும் அமைதியான முறையில் செய்யப்படுகின்றன.  சிலரது வழிபாடுகளில் கொட்டு முழக்கங்களும், கைதட்டுகளும் ஒலிக்கின்றன.  இன்னும் சில பகுதியினர் ஜெபம் செய்யும்போது இடையிடையே ‘ஆமென்’, ‘அல்லேலூயா’ என உரத்த சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர்.  வேறு சில பிரிவினர் தங்கள் ஆராதனைகளில், பரிசுத்த ஆவியைப் பெற்று வேறு மொழிகளில் பேசுவதாக நம்பி, பலவிதமான சத்தங்களை உண்டுபண்ணுகின்றனர்.  ஆனால் 1 இராஜாக்கள் 19:11,12 வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல, பர்வதங்களைப் பிளக்கிறதும், கன்மலைகளை உடைக்கிறதுமான பெருங்காற்றிலும், காற்றுக்குப்பின் உண்டான பூமியதிர்ச்சியிலும், அதற்குப்பின் உண்டான அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை.  அக்கினிக்குப் பின் உண்டான அமர்ந்த மெல்லிய சத்தத்திலேயே கர்த்தர் காணப்பட்டார்.  ஆகவே நமது ஆராதனைகள் அமைதியானதாகவும், ஆரவாரங்களில்லாமலும் இருப்பதே சிறந்தது.

John Greenleaf Whittier
இப்பாடலை எழுதிய விட்டியர் (John G. Whittier) என்பவர் அமெரிக்காவில் நியூஹாம்ப்ஷயர் என்னுமிடத்தில் வசித்துவந்தார்.  அவரது ஊருக்கருகில் அடிக்கடிப் பல எழுப்புதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  இக்கூட்டங்களில் அதிகமான சத்தமும், சந்தடியும், ஆரவாரமும் உண்டாயின.  இக்கூட்டங்களை நடத்தியவர்கள், ஆரவாரத்துடன் நடக்கும் கூட்டங்களில்தான் உண்மையான இறையுணர்வு உண்டாகும் என நம்பினர்.  விட்டியர், Quakers என்னும் நண்பர் குழுவைச் (Society of Friends) சேர்ந்தவர்.  இக்குழுவினர், வாழ்க்கையில் ஆடம்பரமும் சொகுசும் இல்லாமல் ஜீவிப்பதே கடவுளுக்குப் பிரியமானது என நம்பினர்.  மேற்கூறிய எழுப்புதல் கூட்டங்களைப் பார்த்த விட்டியர், இதை ஆப்பிரிக்கர் இறையுணர்வு உண்டாவதற்காக ‘சோமா’ என்னும் மதுபானத்தைத் தயாரித்து அருந்துவதற்கு ஒப்பிட்டார்.  இதை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடியான நிலைமைகளை மேற்கொள்ளத் தினம் சிறிதுநேரம் அமைதியாகக் கடவுளுடன் தரித்திருப்பது மிக அவசியம் என்பதை உணர்த்துவதற்காக, ‘The Brewing of Soma’ (சோமா மதுபானம் வடித்தல்) என்னும் தலைப்பைக் கொண்ட ஓர் ஆங்கிலச் செய்யுளை விட்டியர் 1872’ல் எழுதினார்.  இச்செய்யுளிலுள்ள சில கவிகளை 1884ல் காரட் ஹாடர் என்னும் ஆங்கிலப் பாடகர் ஒரு பாடலாகத் தொகுத்தார்.  இதுவே, ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலாகும்.

இப்பாடலை எழுதிய ஜான் கிரீன்லீப் விட்டியர் (John Greenleaf Whittier), 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஹேவர்ஹில் (Haverhill, Massachusetts) என்னுமிடத்தில் பிறந்தார்.  இவரது தந்தை, ‘உவேக்கர்’ பிரிவைச் சேர்ந்த ஒரு விவசாயி.  விட்டியர் இளவயதில் கடுமையான வேலை செய்யவேண்டியிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் குன்றியது.  ஓய்வு நேரங்களில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொண்டு, பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார்.  பத்தொன்பதாவது வயதில் அவ்வூரிலுள்ள ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகள் கல்வி கற்றார்.  இங்கிருக்கையில் ஆங்கிலக்கவிஞரான, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ என்பவரின் செய்யுள்களால் கவரப்பட்டுத், தாமும் பல செய்யுள்கள் எழுதினார். மேலும், அடிமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து அதைக்குறித்துப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதினார்.  சில ஆண்டுகள் தமது சொந்த மாகாணத்தில் சட்டசபை அங்கத்தினராகவும் பணியாற்றினார்.

விட்டியர் சங்கீதத் திறமையில்லாதவராதலால், தமது செய்யுள்களை அவர் பாடல்களாகக் கருதவில்லை.  ஆனால் 1893ல் சிக்காகோ நகரில் நடந்த மதசம்பந்தமான மாநாட்டில் (Parliament of Religions) எல்லா மதத்தினரும் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட பாட்டுப் புத்தகத்தில், விட்டியர் எழுதிய அநேக செய்யுள்கள் பாடல்களாகச் சேர்க்கப்பட்டன.  இவற்றில், ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலும் ஒன்று.

விட்டியர் 1802ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹாம்ப்டன் பால்ஸ் என்னுமிடத்தில் தமது 85வது வயதில் மறுமைக்குட்பட்டார்.


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட

2.    நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே.

3.    மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.

4.    உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.

5.    அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.

Post Comment

Tuesday, May 27, 2025

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் (Truro)

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின்
Tune : Truro

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*************

1.            மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2.    விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3.    கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4.    ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5.    விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.

Post Comment

Friday, April 18, 2025

பாமாலை 379 - என் ஆண்டவா இப்போரில் (Rockingham)

பாமாலை 379 - என் ஆண்டவா இப்போரில் 
Tune : Rockingham


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. என் ஆண்டவா இப்போரில் நான்
விழாது உம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்

2. என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னை சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்

3. ஐயோ நான் பலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்

4.  நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்


















Post Comment

Wednesday, March 19, 2025

பாமாலை 376 - பாவ சஞ்சலத்தை (Conqueror)

பாமாலை 376 - பாவ சஞ்சலத்தை 
Tune : Conqueror
What a Friend we Have in Jesus


இப் பாடலை இயற்றியவர் ஜோசப் ஸ்கிரீவன். 1819 ம் ஆண்டு அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். திருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவருக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணநாளுக்கு முன்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்துக்கொண்டு உதவிச் செய்யக் கூடாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அதனால் அவர் மனநிலையும் பாதிக்கப்பட்டது. இத்துயரத்தை மறக்க 1845ல் தமது 25 ஆம் வயதில் கனடா சென்றார்.

ஆண்டுகள் உருண்டோடின. ஸ்கிரீவன் "பிளைமவுத் சகோதரர்" என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மணநாளும் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன் அந்த சபையில் சேர விரும்பிய அவளுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது. அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல் வந்தது அவள் மரித்துப் போனாள்.

இத்திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பியிருந்த ஸ்கிரீவனின் தாயார் தாங்கமுடியாத துயரத்துக்குள்ளானார். தனது வேதனையின் மத்தியிலும் தன்னை நினைத்து வருந்தும் தாயை ஆறுதல் படுத்த ஸ்கிரீவன் 1855ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை எழுதினார்.

இப்பாடலுக்கு ஸ்கிரீவன்  கொடுத்த தலைப்பு "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்பதே. அவரை பராமரிக்க வந்த நண்பர் இப்பாடலின் கைப்பிரதியைப் பார்த்தார். அதைப்பார்த்து மனம் நெகிழ்ந்தவராக ஆச்சரியத்துடன் இப்பாடலை இயற்றியது யார்? என்று  கேட்டார்.  அதற்கு ஸ்கிரீவன் "நானும் ஆண்டவரும் சேர்ந்து இயற்றினோம்" என்று தாழ்மையாய் பதிலளித்தார்.

இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் இயற்றப்பட்ட இப்பாடல் சாங்கியின் முதல் தர நற்செய்தி பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. உலகமெங்கும் பல உயிர்மீட்சி கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும்  இன்றும் பாடப்பட்டு வருகின்றது. பாமர மக்களும் எளிதில் புரிந்துக்கொள்ளும் இப்பாடல் உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழப்பட்டது.

இப்பாடலுக்கு ‘Conqueror' எனும் இந்த ராகம் John S Wiseman என்பவரால் அமைக்கப்பட்டது.

ஸ்கிரீவன் தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம்,  வறுமை, மற்றும் மனவியாகுலத்துடன் கழித்தார். இறுதியில் 1886ம் ஆண்டு  தமது 66 வது வயதில் "நைஸ்லேக்" என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து மரித்தார்.

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1.            பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2.    கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3.    பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே;
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்.
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

 

Post Comment

Thursday, February 20, 2025

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே

நன்மைக்கே எல்லாமே
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே

2. சாத்தான் என்னைச் சோதிக்க வந்த போதும்
உம் வார்த்தையால் வென்றிடுவேன்.
யேசு எனக்காய் சிந்திய ரத்தத்தால்
எனக்கு வெற்றியே வெற்றியே

3. என் பாவங்கள் சிவேரென்றி ருந்தாலும்
யேசுவின் திரு ரத்தத்தால்
பஞ்சைப் போல் மிக வெண்மை யாகிடுமே
தோத்திரம், தோத்திரம் யேசுவே.

4. மேகங்கள் சால்வை போல் உருண்டோடிடும்
எக்காளம் தொனித்திடவே
மீட்பர் என்னை அழைக்க வந்திடுவார்
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே.




Post Comment

Wednesday, February 5, 2025

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Community Carol)

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Community Carol)
While Shepherds watch their flocks by night


SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

********


1.    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.    அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன், ‘திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்’.

3.    ”தாவீதின் வம்சம் ஊரிலும்,
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்”.

4.    ”இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்”.

5.    என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதரோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.    ”மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்”.

















Post Comment

Tuesday, February 4, 2025

பாமாலை 224 - நாதா ஜீவன் சுகம் (Requiem)

பாமாலை 224 - நாதா ஜீவன் சுகம் (Requiem)
Thou to Whom the sick and dying


SATB 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

**********

1.    நாதா, ஜீவன் சுகம் தந்தீர்
நாடி வந்த மாந்தர்க்கு
இன்றும் ஜீவன் சுகம் ஈவீர்
நோயால் வாடுவோருக்கு,
நாதா, உம்மைப் பணிவோம்
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

2.    ஆவலாய் சிகிச்சை நாடி
சாவோர் பிணியாளிகள்
வைத்தியர் சகாயர் தேடி
வருவாரே ஏழைகள்
நாதா, சுகம் அருள்வீர்,
பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர்.

3.    ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும்,
கையால் உள்ளத்தாலுமே
பாசம் அநுதாபத்தோடும்
பாரம் நீக்கச் செய்யுமே;
நாதா, ஜெபம் படைப்போம்,
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

4.    பாவம் நோயும் சாவும் நீங்கும்
யாவும் செய் உம் தயவால்
பாடுற்றோராம் மாந்தர் யாரும்
பக்த கோடி ஆவதால்
நாதர் ஆசனம் முன்னாய்
பாதம் வீழ்வார் பக்தியாய்.




Post Comment