Monday, April 22, 2013

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.         ஆராய்ந்து பாரும், கர்த்தரே;
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்.
 
2.         ஆராயும் எந்தன் உள்ளத்தை,
நீர் சோதித்தறிவீர்;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
 
3.         ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்.
 
4.         ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
 
5.         ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்.
 
6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்.

Post Comment

No comments:

Post a Comment