Sunday, July 22, 2012

பாமாலை 281 - சிலுவை மரத்திலே Tune - Wells (Bortniansky)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்
காயம் காட்டிச் சொல்கின்றார்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
2. பாவ பலியானதால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்
ரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குன்னை ஒப்புவி
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
3. பான போஜனம் நானே
விருந்துண்டு வாழ்வாயே
பிதாவண்டை சேரலாம்
நேச பிள்ளை ஆகலாம்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
4. சீக்கிரத்தில் வருவேன்
உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு வா என்னண்டையில்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.

Post Comment

No comments:

Post a Comment