1. முன்னே
சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்
2. ஆன்மாவின்
ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
உம் வார்த்தையாம் மருந்தினால்
நற்சுகம் ஈயுமே
3. கர்த்தாவே,
பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
உம் கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்
4. ஆன்மாக்கள் திமிர்வாத்தால்
மரித்துப் போயினும்
நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்
5. துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போலக் காயினும்
உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணியச் செய்திடும்
6. எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்
No comments:
Post a Comment