பாமாலை 133 – ஆ இயேசுவே
புவியிலே
(Zeuch uns nach dir so laufen wir)
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக,
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.
2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.
3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்,
நீர் மோசத்தை அகற்றும்.
4. இவ்வுலகம்
ஆகா தலம்,
இழும், அடியார் தேடும்
தலம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.
5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்,
நீரே இம்மானுவேலும்;
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.
No comments:
Post a Comment