Saturday, January 21, 2017

பாமாலை 244 - பார் முன்னணை (Away in a Manger - Cradle Song)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7

William James Kirkpatrick
(Thanks : cyberhymnal) 
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை William James Kirkpatrick (1838-1921) என்பவர் மெட்டமைத்தார்.
 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger

Post Comment

No comments:

Post a Comment