Wednesday, March 15, 2017

பாமாலை 70 - மா மகிழ்வாம் இந்நாளில்

பாமாலை 70 – மா மகிழ்வாம் இந்நாளில்
(When Christmas morn is dawning)

கிறிஸ்மஸ் காலங்களில் மிக அரிதாகப் பாடப்படும் இப்பாடலானது முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜெர்மன் மொழியில் “Wir hatten gebauet ein” என்ற மாணவர்கள் பாடும் பாடலுக்கான ராகத்தில், ஏபல் பர்க்ஹார்ட் (Abel Burckhardt) என்பவர் கிறிஸ்துமஸ் காலத்துக்கேற்ற வரிகளை ஜெர்மானிய மொழியில் எழுதினார்.  இப்பாடலை ஆங்கிலத்தில் க்ளவுட் வில்லியம் ஃபாஸ் (Claude William Foss) என்பவர் மொழிபெயர்த்தார்.  க்ளவுட் 1855ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஜெனிவா நகரத்தில் (Geneva, Illinois) பிறந்தார். ரெட்விங் மற்றும் அகஸ்டானா கல்லூரிகளில் (Red Wing College institute at Red Wing, Minnesota, then entered Augustana College at Rock Island) தமது கல்லூரிப்படிப்பை முடித்த இவர், 1884ம் ஆண்டு அகஸ்டானா கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

Claude William Foss(
கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே அவர், அகஸ்டானா பேராயத்தால் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கழகத்தின் (Augustana Book Concern) இயக்குநர்களில் ஒருவராக பதவி வகித்தார்.  இக்கழகத்தின் சார்பாக 1908ம் ஆண்டு ஃபாஸ் இந்தியாவுக்கு ஊழிய காரியங்களை மேற்பார்வையிடும்படி அனுப்பப்பட்டார்.  இங்கே தனது பணியை நிறைவு செய்து, எகிப்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் பயணித்தார்.  அகஸ்டானா லுத்ரன் திருச்சபைக்கென அநேக ஜெர்மன் பாடல்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  அப்படி மொழிபெயர்க்கப்பட்டப் பாடல்களில் ஒன்றுதான் ‘மா மகிழ்வாம் இந்நாளில்’ எனும் இப்பாடலாகும்.  ஃபாஸ் 1935ம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.

2.    வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.

3.    மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.  
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.

Post Comment

No comments:

Post a Comment