Sunday, March 26, 2017

பாமாலை 75 - உம் அவதாரம் பாரினில்

பாமாலை 75 – உம் அவதாரம் பாரினில்


William H. Monk
பரி. யோவான் சுவிசேஷகன் திருநாளுக்குப் பாடப்படும் இப்பாடலின் இசையை எழுதியவர் வில்லியம் மாங்க் என்பவர் (William H. Monk). இவர் 1823ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் பிறந்தார். லண்டன் கிங் கல்லூரியில் இசை ஆசிரியராக இருந்த இவர் பரி. மத்தியாஸ் ஆலயத்தில் (St. Matthias, Stoke Newington, London) சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு இசை நடத்துனராக தன் ஊழியத்தைச் செய்தார்.  உலகம் முழுதும் ஏறக்குறைய 60 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்த Hymns Ancient and Modern என்ற பாடல் புத்தகத்தின் முதல் பிரதியைத் தொகுத்தவர் இவரே.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.

2.    சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.

3.    கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.

4.    உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.

5.    சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.

Post Comment

No comments:

Post a Comment