1. கண்டீர்களோ
சிலுவையில்
மரிக்கும்
இயேசுவை?
கண்டீர்களோ
காயங்களில்
சொரியும்
ரத்தத்தை?
2. “மன்னியும்”என்ற வேண்டலை
கேட்டீர்களே, ஐயோ!
“ஏன் கைவிட்டீர்”என்றார், அதை
மறக்கக்கூடுமோ?
3. கண்மூடி, தலை சாயவே,
“முடிந்தது”என்றார்:
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்.
4. அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே;
ஆ! பாவி, இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே.
5. சீர் கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை;
கண்டேன், கண்டேன் சிலுவையில்
மரிக்கும் யேசுவை!
No comments:
Post a Comment