Monday, May 18, 2020

பாமாலை 231 - ஆ நீதியுள்ள கர்த்தரே (Luther)

பாமாலை 231 – ஆ, நீதியுள்ள கர்த்தரே
(Ach Herre du gerechter Gott)
Tune: Luther

Meter: 8, 7, 8, 7, 8, 8, 7

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.         , நீதியுள்ள கர்த்தரே,
வயல் வறண்டதாலே
எஜ்ஜீவனும் வதங்கிற்றே;
இக்கேடு எங்களாலே
நடந்த பாவத்தின் பலன்,
என்றெங்களில் ஒவ்வொருத்தன்
துக்கித்துச் சொல்வானாக.

2.         , எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்;
நீரே அடியார் நம்பிக்கை,
சகாயத்தை அளியும்;
கர்த்தாவே, சுத்த தயவால்
மழையைத் தந்து, அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்.

3.         தயாபரா, நீர் உமது
நல் வாக்கு நிறைவேற,
காய்ந்து கிடக்கும் பூமிக்குத்
தண்ணீர் இறைப்பீராக;
வானுலகாளும் கர்த்தரே,
மழையை உம்மை அன்றியே
ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?

4.         மூச்சற்ற விக்ரகங்களால்
கூடாது; தேவரீரே
வானத்தைத் திருக்கரத்தால்
விரித்தீர்; அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்,
நீரே பிதா, நீர் ரட்சகர்,
உம்மாலே யாவும் ஆகும்.

Post Comment

No comments:

Post a Comment