Sunday, May 17, 2015

வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே
யுகா யுகம் துதி உமக்கே
மேன்மை கனம் உந்தன் நாமமே
இப்போதெப்போதுமே

     வாழ்க வாழ்க நீரே வாழ்க
                மாட்சிமிகு மோட்ச வேந்தர் நீர்
வாழ்க வாழ்க நீரே வாழ்க
பெரும் துதி ஏற்பீர்

2.    வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே
பாடலோடு அவர் பாதமே
மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே
ராஜாதி ராஜரே

3.    பாவம் பேயை வென்ற வீரரே
தூய ஆவி எம்மை ஆளவே
உந்தன் நாமத்தில் ஜெயிப்போமே
என்றென்றும் வாழ்கவே.

Post Comment

Saturday, May 16, 2015

பாமாலை 261 - எல்லாருக்கும் மா (Miles Lane)

பாமாலை 261 – எல்லாருக்கும் மா உன்னதர்
(All hail the power of Jesus name)

‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ என்னும் நாமம் ….. எழுதப்பட்டிருந்தது. வெளி 19:19

இயேசுவின் ‘மகுடாபிஷேகக் கீதம்’ (Coronation Hymn) என்றழைக்கப்படும் இப்பாடல் எழுதப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்தது, லண்டன் மாநகருக்கு இருபது மைல்களுக்குத் தெற்கில் சுண்ணாம்புப் பாறைகளின் உச்சியில் எழுப்பப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான சிலுவையாகும்.  இப்பாறைகள் ஷோர்ஹம் என்னும் ஒரு குக்கிராமத்தில் இருந்தன.  சிலுவைக்கடியில் ஒரு சிறிய ஆலயமுமிருந்தது.  இவ்வாலயத்தில் போதகராக வின்சென்ட் பெரோனே (Vincent Perronet) என்பவர் பல ஆண்டுகளாக உழைத்தார். 
அவரது புதல்வரான எட்வர்ட் பெரோனே (Edward Perronet) சிறுவனாக இருக்கும்போது ஆலயத்தின் முன்நின்று சிலுவையைக் கண்ணுற்று, இயேசுவின் தியாகத்தை உணர்ந்தார்.  இவ்வுணர்ச்சி அவர் ஆயுள் முழுவதும் அவரைத் தன் ஊழியத்தில் ஊக்குவித்ததென அவரே கூறியுள்ளார்.  பல ஆண்டுகளுக்குப் பின் அவர் போதகராயிருக்கும்போது ஆங்கிலக் கவிகள் எழுதலானார்.  அப்போது அவர் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி எழுதிய ஒரு கவியே, ’எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் பெரோனே 1726ம் ஆண்டு இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை, ‘மெதடிஸ்டு சபையின் பிரதம அத்தியட்சர்’ என வேடிக்கையாக அழைக்கப்பட்டார். ஏனெனில் மெதடிஸ்டு சபையை ஏற்படுத்திய வெஸ்லி சகோதரருக்கு அவர் மிகுந்த ஆதரவளித்துவந்தார். பெரோனே 1749ம்ல் ஜான் வெஸ்லியுடன் சுற்றுப்பயணம் ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் சுற்றுப் பிரசங்கியாக உழைத்தார்.  பின்னர், ஆங்கிலத் திருச்சபையைத் தாக்கி உபந்நியாசங்கள் செய்ததாலும், அதைத் தாக்கி ஒரு புத்தகம் எழுதியதாலும், வெஸ்லி சகோதரர்களுடன் அவருக்கிருந்த நட்பு 1771ல் அற்றுப்போயிற்று. அதன்பின், ஹண்டிங்டன் சீமாட்டி (The Countess of Huntingdon) அவரைத் தன் வீட்டுக் குருவாக (Chaplain) வைத்துக்கொண்டார்.  ஆனால் அவர் திரும்பவும் ஆங்கிலச் சபையைத் தாக்கிக்கொண்டேயிருந்ததால், சீமாட்டியின் ஆதரவும் அவருக்கு இல்லாமல் போயிற்று  ஆதலால் அவர் பல சபைகளில் மாறி மாறி ஊழியம் செய்து, இறுதியில் கந்தர்புரியிலுள்ள (Canterbury) ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) போதகராக அமர்ந்தார்.

எட்வர்ட் பெரோனே ஒரு சிறந்த கவிஞர்.  அவர் ஆங்கிலக் கவிகளடங்கிய மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு கவியே ‘எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகும். இது முதல் முதலாக 1779ல் ‘Gospel Magazine’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில், ‘Miles Lane’ என்னும் ராகத்துடன் வெளியிடப்பட்டது.  இந்த ராகத்தையே நாம் தற்போது இப்பாடலுக்கு உபயோகிக்கிறோம்.  இந்த ராகத்திற்கு இரட்சணியசேனையார் ஓர் அழகிய பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர்.  இப்பாடலுக்கு, ‘Diadem’, ‘Coronation’ என்னும் வேறு இரு ராகங்களும் உண்டு.

எட்வர்ட் பெரோனே 1792ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ம் தேதி, தமது 66வது வயதில் காலமானார்.  அவர் ஆங்கிலத் திருச்சபையைப் பலமாகத் தாக்கியிருந்தபோதிலும், கந்தர்புரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  எல்லாருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க, இயேசுவே.

2.  விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3.  பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4.  நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5.  விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Post Comment

Wednesday, May 6, 2015

பாமாலை 241 - சின்னப் பரதேசி (Eudoxia)

பாமாலை 241 - சின்னப் பரதேசி 
Tune : Eudoxia

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. சின்னப் பரதேசி 
மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்

2. முத்தி அடைந்தோரை 
பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே 
என்றும் கேளாதே

3. சின்னப் பரதேசி 
இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி 
தரித்துக்கொள்வேன்

4. என்னை சுத்தமாக 
காரும், இயேசுவே
தினம் வழி காட்டும் 
தெய்வ ஆவியே

5. சாந்த இயேசு ஸ்வாமீ 
உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன் 
ஆகப் பார்க்கிறேன்

Post Comment

Tuesday, May 5, 2015

பாமாலை 165 - தூயர் வீரர் திருநாளை (Langdale)

பாமாலை 165 - தூயர் வீரர் திருநாளை 
Blessed feasts of blessed Martyrs
Tune : Langdale

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    தூய வீரர் திருநாளை
பக்தி பரவசமாய்
ஆண்டுதோறும் வந்திப்போமே
எதிர்நோக்கி ஆவலாய்.

2.    தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும்
வல்ல வீர செயல்கள்
செய்தார் என்றும் வாழ்த்துவோமே
பாடுவோம் தீங்கீதங்கள்.

3.    விசுவாசம் மா நம்பிக்கை
ஓங்கி உம்மை நேசித்தார்
மாட்சியோடும் வெற்றியோடும்
தூயர் வீரர் ஆயினார்.

4.    பாரின் இன்பம் துறந்திட்டே
வீரர் செய்கை புரிந்தார்
இப்போ வானில் தூயர் கூட்டம்
தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார்.

5.    கிறிஸ்துவோடு பாத்தியராகி
விண்ணின் மாட்சி அடைந்தார்;
நாம் முன்னேறப் பாதம் வீழ்ந்து
பணிவாக ஜெபிப்பார்.

6.    பாரின் கஷ்ட வாழ்க்கை ஈற்றில்
மாய்க்கும் துன்பம் நீங்கிப் போம்
தந்தை வீட்டில் நாமும் சேர்ந்து
நித்திய மாட்சி கெலிப்போம்.


Post Comment