Showing posts with label கிறிஸ்து பரமேறுதல். Show all posts
Showing posts with label கிறிஸ்து பரமேறுதல். Show all posts

Tuesday, May 27, 2025

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் (Truro)

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின்
Tune : Truro

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*************

1.            மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2.    விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3.    கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4.    ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5.    விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.

Post Comment

Tuesday, October 1, 2019

பாமாலை 133 - ஆ இயேசுவே புவியிலே

பாமாலை 133 – ஆ இயேசுவே புவியிலே
(Zeuch uns nach dir so laufen wir)


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக,
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.

2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.

3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்,
நீர் மோசத்தை அகற்றும்.

4. இவ்வுலகம்
ஆகா தலம்,
இழும், அடியார் தேடும்
தலம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.

5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்,
நீரே இம்மானுவேலும்;
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.

Post Comment

Friday, September 20, 2019

பாமாலை 136 - வாஞ்சைப்பட்ட இயேசுவே (Ascension)

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே
(Hail the Day that sees Him Rise)

Charles Wesley
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Charles Wesley எழுதிய இந்தப் “Hail the Day that sees Him Rise” எனும் இப்பாடல் பல்வேறு காலகட்டங்களில் பல பாடலாசிரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் முதன்முதலில் 1739ம் ஆண்டு “Hymns and Sacred Poems” எனும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. ’கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் இப்பாடலை வெஸ்லி எழுதினார். வெஸ்லி எழுதிய மூலப்பாடலில் மொத்தம் பத்து பல்லவிகள் இடம்பெற்றன.  1852ம் ஆண்டு பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னரும் ‘அல்லேலூயா’ இணைக்கப்பட்டது.  பின்னர் ‘Ancient and Modern” பாமாலைப் புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் பாடலில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.

பல்வேறு ராகங்களில் இப்பாடல் பாடப்பட்டாலும், ‘Ascension” எனும் இந்த ராகமே மிகப் பிரபலமான ராகமாக விளங்குகிறது. இந்த ராகத்தை W.H. Monk (1823-89) 1861ம் ஆண்டு இயற்றினார்.

சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison 
Unison with Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant









































1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Post Comment

Thursday, May 22, 2014

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் (Church Triumphant)

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் 
Tune : Church Triumphant

SATB

 Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2.    விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3.    கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4.    ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5.    விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.


Post Comment

Tuesday, May 28, 2013

பாமாலை 134 - தெய்வாட்டுக்குட்டிக்கு (Diademata)

பாமாலை 134 – தெய்வாட்டுக்குட்டிக்கு
(Crown Him with many Crowns )
Tune : Diademata

Godfrey Thring
‘தெய்வாட்டுக்குட்டிக்கு’ எனும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘கிறிஸ்து பரமேறுதல்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் இப்பாடல் இதுவரை வெளியாகி பாடப்பட்டு வருகிறது என்றபோதிலும், இதன் மூல வடிவத்தை Matthew Bridges (1800-1893) என்பவர் எழுதி, Godfrey Thring (1823-1903) என்பவர் செய்த சில மாற்றங்களுடன், ஏராளமான பாடல் புத்தகங்களில் வெளியாகியுள்ளது. Matthew Bridges இங்கிலாந்தின் Maldon எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். Anglican பாரம்பரியக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டபோதும், பிற்பாடு அவர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் தன்னை இணைத்துக்கொண்டு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கனடா தேசத்தில் செலவிட்டார்.


“Crown Him with Many Crowns” எனும் இப்பாடல் முதன்முதலில் 1851ம் ஆண்டு வெளியானது.. இப்பாடல் வெளியான ஆறு வருடங்கள் கழித்து, Godfrey Thring என்பவர், Matthew எழுதிய முதலாவது பல்லவியை மட்டும் வைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்த பல்லவிகளைத் தாம் எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, Matthew மற்றும் Godfrey எழுதிய பல்லவிகளை இணைத்து பல்வேறு வடிவங்களில் இப்பாடல் வெளியானது. 1931ம் ஆண்டு Percy Dearmer என்பவரால் இப்பாடல் மேலும் மாற்றியமைக்கப்பட்டு சுவிசேஷ நற்செய்தியைத் தாங்கிய இரண்டு பல்லவிகள் இணைத்து வெளியிடப்பட்டது.




Sir George Job Elvey

இப்படியாக இப்பாடல் பலவாறு மாற்றியமைக்கப்பட்டு, பல்வேறு வடிவங்கள் எடுக்கக் காரணம், Matthew முதலில் எழுதிய பல்லவியில் கன்னிமரியாளைப் பற்றிய சிக்கலான குறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்றும், Matthew Bridges இப்பாடலின் முதல் பல்லவிக்குப் பின்னர், கிறிஸ்துவின் பாடு மரணம் குறித்தும் நித்தியவாழ்வினைக் குறித்தும் பல்லவிகள் இருந்தால், பாடல் நிறைவாய் இருக்கும் என்று எண்ணி மற்ற பல்லவிகளைத் அவர் இணைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பாடலுக்கான “Diademeta” என்ற ராகத்தை Sir George Job Elvey (1816-1893) என்பவர் எழுதினார். 1868ம் ஆண்டு இப்பாடல் முதன்முறையாக “Ancient and Modern” பாடல் புத்தகத்தில் இடம்பெற்றது.
 
Smule Recording of 'தெய்வாட்டுக்குட்டிக்கு'

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

Karaoke








































1.            தெய்வாட்டுக்குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்
இன்னிசையாப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.

2.    அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள்
விண்ணிலும் விளங்கும்
பார்ப்பரோ தூதரும்
ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்.

3.    சமாதானக் கர்த்தர்
பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப
ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்
ஆள்வர் என்றென்றைக்கும்
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு
விளங்கி வளரும்.

4.    ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர்
உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே.

பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Post Comment