Sunday, October 20, 2019

பாமாலை 145 - விண்போகும் பாதை தூரமாம்

பாமாலை 145 – விண்போகும் பாதை தூரமாம்
(We have not seen we cannot see)

பரி. தோமா திருநாளுக்கான இப்பாடலை எழுதியவர் போதகர் ஜான் மேஸன் நீல் (John Mason Neale) என்பவர் ஆவார். ஜான் மேஸன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதகரும் பாடலாசிரியருமான அருள்திரு. ஜான் மேஸன் அவர்களின் நினைவாக இவரது பெற்றோர் அவரது பெயரையே தம் மகனுக்கும் வைத்தனர்.

John Mason Neale
ஜான் மேஸன் நீல் பண்டிதரின் தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்திருச்சபை மறையில்ஆக்ஸ்வர்டு குழுவை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லைஉடல்நிலை குன்றியதால், அவர் இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது

போதகர் ஜான் மேஸன் நீல் ஒரு சிறந்த கல்விமான்ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

”விண்போகும் பாதை தூரமாம்” எனும் இப்பாடலை ஆங்கிலத்தில் போதகர் ஜான் மேஸன் இவ்வாறு எழுதினார்.

1. We have not seen, we cannot see,
The happy land above,
From sin and death and suffering free,
Where all is peace and love.

2. We only see the path is long
By which we have to go;
We only feel the foes are strong
Who seek to work us woe.

3. We have not seen, we cannot see
The cross our Master bore,
With all its pains, that we might be
The slaves of sin no more.

4. We only think it hard to part
With every pleasant sin,
And give to God a perfect heart,
And make Him Lord within.

5. We walk by faith, and not by sight;
And, blessèd saint, like thee,
We sometimes doubt if faith tells right,
Because we cannot see.

6. Upon the promise we would lean
Thy doubting heart received;
Blessèd are they that have not seen,
And that have yet believed.

George Mursell Garrett
இப்பாடலுக்கான ‘Beulah’ எனும் ராகத்தை ஜார்ஜ் கேரட் என்பவர் (George Mursell Garrett) என்பவர் எழுதினார். ஜார்ஜ் இயற்றிய இந்த ராகம் Ancient & Modern புத்தகத்தின் 1889ம் ஆண்டு பதிப்பில் வெளியானது.

நம் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில், கீழ்க்கண்ட பாடல்கள் போதகர் ஜான் மேஸன் நீல் அவர்களால் எழுதப்பட்டவை / மொழிபெயர்க்கப்பட்டவை ஆகும்:

பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே
பாமாலை 95 – மாட்சி போரை போரின் ஓய்வை
பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல
பாமாலை 92 – ஓசன்னா பாலர் பாடும்
பாமாலை 46 – இம்மானுவேலே வாரும் வாருமே


போதகர் ஜான் மேஸன் நீல் 1866ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் நகரின் அருகே East Grinstead எனும் இடத்தில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. விண் போகும் பாதை தூரமாம்
என்றே நாம் எண்ணுவோம்;
பகைஞரின் கொடூரமாம்
வன்மையை உணர்வோம்.

2. ஆனால் எப்பாடும் பாவமும்
இல்லா அவ்விண்ணையே
நாம் கண்டிலோம், நாம் காணவும்
இம்மையில் கூடாதே.

3. சிற்றின்பத்தை வெறுத்தலும்,
உள்ளத்தை முற்றும் நாம்
கர்த்தாவுக் கொப்புவித்தலும்
அரிதென் றெண்ணலாம்.

4. ஆனாலோ, பாவம் நீக்கிட
அகோர வேதனை
மீட்பர் அடைந்து மாண்டதும்
நாம் காணக்கூடாதே.

5. பக்தன் தோமாவே, உன் போலும்
கண்ணால் காணாமலே
விஸ்வாசம் தக்கதாயினும்
சந்தேகம் கொள்வோமே.

6. என்றாலும், 'காணாதிருந்தும்
விஸ்வாசித்தோர் பாக்கியர்'
என்றே நீ பெற்ற வாக்கையும்
நாங்களும் சார்ந்தவர்.

Post Comment

Sunday, October 13, 2019

பாமாலை 141 - தெய்வன்புக்காக உன்னத

பாமாலை 141 – தெய்வன்புக்காக உன்னத
(Allein Gott in der Höh sei Ehr)

"Allein Gott in der Höh sei Ehr" (Alone to God in the Highest be glory) எனும் இப்பாடல் ஆரம்பகால லுத்தரன் பாடலாகும், நிக்கோலஸ் டெசியஸ் (Nikolaus Decius) எனும் ஜெர்மானியத் துறவி இப்பாடலை எழுதி அமைத்தார்.  ஜெர்மனியின் Leipzig நகரில் தன் பட்டப்படிப்பை முடித்த இவரது காலம் 16ம் நூற்றாண்டாகும்.  ஜெர்மனியின் Brunswick நகரின் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், 1535ம் ஆண்டு அங்குள்ள St. Nicholas தேவாலயத்தின் ஆயராகப் பொறுப்பேற்று தம் ஊழியத்தைத் தொடர்ந்தார்.  தம் வாழ்நாளீல் நிக்கோலஸ் அநேக பாடல்களை எழுதியிருப்பினும் “Allein Gott in der Höh sei Ehr” எனும் இப்பாடல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் நம் திருச்சபைகளில் பாடப்பட்டு வருகிறது.

Catherine Winkworth
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (All glory be to God on high).  இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.

இப்பாடலுக்கான கேத்தரின் அம்மையாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நான்கு பல்லவிகளுடன் இவ்வாறாக அமைந்திருக்கிறது.

1. All glory be to God on high,
Who hath our race befriended!
To us no harm shall now come nigh,
The strife at last is ended;
God showeth His goodwill to men,
And peace shall reign on earth again;
O thank Him for His goodness!

2. We praise, we worship Thee, we trust
And give Thee thanks forever,
O father, that Thy rule is just
And wise, and changes never;
Thy boundless grace o’er all things reigns,
Thou dost whate’er Thy will ordains;
’Tis well Thou art our Ruler!

3. O Jesus Christ, our God and Lord,
Begotten of the Father,
O Thou who hast our peace restored,
And the lost sheep dost gather,
Thou Lamb of God, enthroned on high
Behold our need and hear our cry;
Have mercy on us, Jesus!

4. O Holy Spirit, precious Gift,
Thou Comforter unfailing,
Do Thou our troubled souls uplift,
Against the foe prevailing;
Avert our woes and calm our dread:
For us the Savior’s blood was shed;

Do Thou in faith sustain us!
*********************************
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.    தெய்வன்புக்காக உன்னத
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
என் பாவக்கேட்டை நீக்கின
அருள் மகா திரட்சி;
மெய்ச் சமாதானம், என்றைக்கும்
மானிடர்மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.

2.    மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே,
துதியோடும்மைக் கும்பிட
பணிகிறோம், கர்த்தாவே,
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவும் செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.

3.    ஆ, இயேசு, தெய்வ மைந்தனே;
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே,
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் சத்தம் கேட்டெல்லா
சபைக்கும் நீர் இரங்கும்.

4.    மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவீ நீர் அன்பாக
இறங்கி, கிறிஸ்து தம்முட
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாதே காத்து, துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.

 

Post Comment

Tuesday, October 1, 2019

பாமாலை 133 - ஆ இயேசுவே புவியிலே

பாமாலை 133 – ஆ இயேசுவே புவியிலே

(Zeuch uns nach dir so laufen wir)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக,
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.

2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.

3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்,
நீர் மோசத்தை அகற்றும்.

4. இவ்வுலகம்
ஆகா தலம்,
இழும், அடியார் தேடும்
தலம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.

5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்,
நீரே இம்மானுவேலும்;
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.

Post Comment

Friday, September 20, 2019

பாமாலை 136 - வாஞ்சைப்பட்ட இயேசுவே (Ascension)

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே
(Hail the Day that sees Him Rise)

Charles Wesley
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Charles Wesley எழுதிய இந்தப் “Hail the Day that sees Him Rise” எனும் இப்பாடல் பல்வேறு காலகட்டங்களில் பல பாடலாசிரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் முதன்முதலில் 1739ம் ஆண்டு “Hymns and Sacred Poems” எனும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. ’கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் இப்பாடலை வெஸ்லி எழுதினார். வெஸ்லி எழுதிய மூலப்பாடலில் மொத்தம் பத்து பல்லவிகள் இடம்பெற்றன.  1852ம் ஆண்டு பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னரும் ‘அல்லேலூயா’ இணைக்கப்பட்டது.  பின்னர் ‘Ancient and Modern” பாமாலைப் புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் பாடலில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.

பல்வேறு ராகங்களில் இப்பாடல் பாடப்பட்டாலும், ‘Ascension” எனும் இந்த ராகமே மிகப் பிரபலமான ராகமாக விளங்குகிறது. இந்த ராகத்தை W.H. Monk (1823-89) 1861ம் ஆண்டு இயற்றினார்.

சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison 
Unison with Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant









































1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Post Comment

Wednesday, September 18, 2019

பாமாலை 132 - வைகறை இருக்கையில் (St. George (Elvey))

பாமாலை 132 – வைகறை இருக்கையில்

Sir George Job Elvey
இப்பாடலுக்கான St. George (Elvey) எனும் ராகத்தை இயற்றியவர் Sir George Job Elvey எனும் ஆங்கிலேய இசையறிஞர் ஆவார். ஜார்ஜ் 1816 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கேன்டர்பரியில் பிறந்தார், பல தலைமுறைகளாக, அவரது குடும்பம் கதீட்ரல் நகரத்தின் இசை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. சிறு வயதிலேயே, கேன்டர்பரி கதீட்ரலின் பாடகர் குழுவில் அவர் அனுமதிக்கப்பட்டார், 1830 ஆம் ஆண்டில், ஜார்ஜின் சகோதரர் ஸ்டீபன், New College, Oxford ன் ஆர்கனிஸ்ட் ஆக நியமிக்கப்பட்ட பின்னர், ஜார்ஜ் அவருடன் வசிக்கச் சென்றார், மேலும் அவரது சகோதரரின் வழிகாட்டுதலின் கீழ் தனது இசைக் கல்வியை முடித்தார். பதினேழு வயதிற்குள்ளாகவே ஜார்ஜ் ஆர்கன் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்று Christ Churchன் தற்காலிக ஆர்கனிஸ்ட்டாகப் பணிபுரியத் துவங்கினார்.  1834 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த “Bow Down Thine ear, Lord’ என்ற பாடலுக்காக இவருக்கு Gresham Gold Medal வழங்கப்பட்டது.

1856-1860க்கு இடைப்பட்ட காலத்தில் St. George’s Chapel’ல் நடந்த பல்வேறு சிறப்பு ஆராதனைகளுக்கென George’ன் மிகச்சிறந்த படைப்புகள் உருவாகி பாடல் வடிவம் பெற்றன. 'The Souls of the Righteous' மற்றும் 'Blessed are the Dead' ஆகிய கீதங்கள் Prince Consortன் Funeral ஆராதனைகளுக்கென இயற்றப்பட்டவை. மேலும் ஜார்ஜ், Prince of Walesன் திருமணத்திற்கென 1863ம் ஆண்டு ‘Sing Unto God’ என்ற பாடலுக்கு இசையமைத்தார்.

ஜார்ஜ் ஆலய ஆராதனைக்கென்று ஏராளமான பாடல்களுக்கான இசையை இயற்றினார். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கீதங்களைத் தவிர, 'Cantate Domino,'  'Deus misereatur', போன்ற புகழ்பெற்ற கீதங்களுக்கான இசையையும் எழுதியது மட்டுமல்லாமல், பியானோ மற்றும் வயலினுக்கான இசைக்குறிப்புகள், 15 Part பாடல்களையும் இயற்றியுள்ளார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
’எந்தன் நாதர் எங்கேயோ?
அவர் தேகம் இல்லையே!
கொண்டுபோனவர் யாரோ?’
என்று ஏங்கி நின்றாளே.

2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு ’மரியாள்’ என்றார்
துக்கம் கொண்ட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழ்வாரே.

Post Comment