Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Sunday, May 9, 2021

பாமாலை 364 - பெந்தெகொஸ்தின் ஆவியே

பாமாலை 364 - பெந்தெகொஸ்தின் ஆவியே
Gracious Spirit Holy Ghost

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.  பெந்தெகொஸ்தின் ஆவியே,
உம்மால் போதிக்கப்பட்டே,
கேட்போம் உன்னத ஈவே
தூய மெய்யன்பே.
 
2.  அன்பு யாவும் சகிக்கும்,
தீதெண்ணாது சாந்தமும்,
அது வெல்லும் சாவையும்
அன்பை ஈயுமேன்.
 
3.  போதனையும் ஓய்ந்திடும்
பூரண அறிவிலும்
அன்பே என்றும் நிலைக்கும்
அன்பை ஈயுமேன்.
 
4.  காட்சியால் விஸ்வாசமும்,
பூரிப்பால் நம்பிக்கையும்
ஓயும்; என்றும் ஒளிரும்
அன்பே, ஈயுமேன்.
 
5.  அன்பு விசுவாசமும்
நம்பிக்கை இம்மூன்றிலும்
ஒப்பற்ற மேலானதும்
அன்பே, ஈயுமேன்.
 
6.  தூய நேச ஆவியே,
உம்மைப் போற்றும் தாசர்க்கே
எங்கள் பேரில் அமர்ந்தே,
அன்பை ஈயுமேன்.



Post Comment

Wednesday, July 6, 2016

பாமாலை 359 - அன்பே விடாமல் சேர்த்து

பாமாலை 359 – அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
(O Love that will not let me go)

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,  அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’. யோபு 13 : 15

பக்தன் யோபுவின் சரித்திரம் நமக்குப் புதிதானதல்ல. அவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ விதமான இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. சாத்தான் அவனைப் பலவிதமான சோதனைகளுக்குட்படுத்தி, அவனுடைய விசுவாசத்தைப் பரீட்சை பார்த்தான்.  யோபுவின் வாழ்க்கையில் அவனுக்கு சந்தோஷத்தை உண்டாக்கின எல்லாவற்றையும் அவன் இழக்க நேரிட்டது.  அவனுடைய மனைவியும் சிநேகிதரும் அவனை கடவுளுடைய பாதையிலிருந்து விலகத்தூண்டினர்.  ஆயினும் யோபு மறுமொழியாகச் சொன்னது, ‘அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’.  நமது வாழ்விலும், சந்தோஷம் காலங்களிலும் கடவுளிடம் அன்பும், நம்பிக்கையும் கொள்வது சிரமமல்ல.  ஆனால் இன்னல்களும் இடுக்கண்களும் நம்மை நெருக்கும்போது, ஆண்டவரின் அன்பை மறந்துவிடாமல், அவரும் நம்மோடு அனுதாபப்படுகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக.

George Matheson
Pic Thanks : Wiki
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் மாத்தீசன் (George Matheson) என்பவர் குருடனாயிருந்து, பல மன வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது இதை எழுதினார்.  அவர் ஒரு பெண்ணைக் காதலித்து, மணநாள் நெருங்கும்போது அவர் கண்பார்வையை இழந்ததால் அப்பெண் அவரை மணந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனையால் அவர் இப்பாடலை எழுதினாரென்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பாடலின் முதல் கவியும், மூன்றாவது கவியும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் சிலகாலத்திற்கு முன் அவரது தங்கையான குமாரி மாத்தீசனைக் கேட்டபோது, அவர் இளவயதிலேயே மங்கின பார்வையுடையவராயிருந்து, சுமார் பதினெட்டு வயதில் கண்பார்வை இழந்ததாகவும், அவர் நாற்பது வயதாயிருக்கையில்தான் இப்பாடல் எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  ஆதலால் மேற்கூறிய கதை வெறும் கட்டுக்கதை என்பது திண்ணம்.  எனினும் தனக்கு அருமையான ஒருவரது மரணத்தாலும், மற்றும் சில காரணங்களாலும், அதிகமான வேதனையடைந்து, அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென இப்பாடல் அவர் மனதில் உருவானதாகவும், சில நிமிடங்களில் இதை எழுதி முடித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.

ஜியார்ஜ் மாத்தீசன் 1842ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, ஸ்காட்லாண்டு நாட்டில், கிளாஸ்கோ (Glasgow, Scotland) நகரில் தனவந்தரான ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே மங்கின பார்வையுடையவராயிருப்பினும், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் (University of Glasgow) பயின்று, 1862ம் ஆண்டில், ‘எம்.ஏ’ பட்டம் பெற்றார். 1866ல் கிளாஸ்கோ நகரில் சாண்டிபோர்ட் ஆலயத்தில் உதவிகுருவாகத் தம் ஊழியத்தை ஆரம்பித்தார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், இன்னிலான் என்னும் ஊரில் ஒரு தனிச்சபைக் குருவாக நியமிக்கப்பட்டார். அவரது பிரசங்கத்திறமை பரவவே, 1886ல் எடின்பரோ நகரில் சுமார் இரண்டாயிரம் அங்கத்தினர் கொண்ட தூய பர்னார்டு ஆலயத்தின் (St. Bernard's Parish Church) குருவாக நியமனம் பெற்று, பதிமூன்று ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தார். கண்பார்வை இல்லாததால் அவர் செய்ய ஆசித்த வேத ஆராய்ச்சிகளைச் செய்ய முடியவில்லை.  ஆயினும், வேதசாஸ்திர சம்பந்தமாக அவர் பதினேழு சிறந்த புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது வேத சாஸ்திரத்திறமைக்காக பண்டிதர் (Doctor of Divinity) பட்டமும், வேறு பல பட்டங்களும் பெற்றார்.

Albert Lister Peace
‘அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்’ என்ற பாடல் 1882ல் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டது.  இப்போது இது பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சங்கீதப் பண்டிதர் டாக்டர். ஆல்பர்ட் பீஸ் (Albert Lister Peace) என்பவரால் எழுதப்பட்ட ‘St. Margaret’ என்னும் அழகிய இராகத்தில் பாடப்பட்டு வருகிறது.

அவர் 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 28ம் தேதி, தமது 64ம் வயதில், ஸ்காட்லாண்ட் நாட்டில் போர்த் நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2.            ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3.            பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
‘விடியுங்காலை களிப்பாம்!’
உம் வாக்கு மெய் மெய்யே.

4.            குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

O Love that wilt not let me go

Post Comment

Tuesday, November 4, 2014

பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால் (Stella)

பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால் 
Thee will I love, my strength
Tune : Stella

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நான் உம்மை முழுமனதால்
சிநேகிப்பேன் என் இயேசுவே
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன் என் ஜீவனே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.

2.    நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்
நீரே என் மீட்பரானவர்
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே.

3.    உம்மைப் பற்றாமல் வீணணாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்
பரத்தை விட்டுத் தூரமாய்
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.

4.    நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன் என் கர்த்தரே
நான் உம்மைத் துன்பநாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.

Post Comment

Saturday, April 20, 2013

பாமாலை 361 - ஒப்பில்லாத திவ்ய அன்பே

பாமாலை 361 - ஒப்பில்லாத திவ்ய அன்பே
Love Divine all Loves excelling


Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. ஒப்பில்லாத திவ்ய அன்பே,
மோட்சானந்தா, தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்,
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.
 
2. உமது நல் ஆவி தாரும்,
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
உம்மில் சார நீரே வாரும்,
சுத்த அன்பின் வடிவாய்;
பாவ ஆசை எல்லாம் நீக்கி
அடியாரை ரட்சியும்;
விசுவாசத்தைத் துவக்கி
முடிப்பவராய் இரும்.
 
3. வல்ல நாதா எங்கள்பேரில்
மீட்பின் அன்பை ஊற்றுமே;
விரைவாய் உம் ஆலயத்தில்
வந்து என்றும் தங்குமே
வானோர்போல நாங்கள் உம்மை
நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்;
ஓய்வில்லாமல் உமதன்பை
பூரிப்பாய்க்கொண்டாடுவோம்.
 
4. உந்தன் புது சிஷ்டிப்பையும்
சுத்த தூய்மையாக்குமேன்;
உந்தன் திவ்விய ரசிப்பையும்
பூரணப்படுத்துமேன்;
எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
அன்பில் மூழ்கிப் போற்றியும்,
மேன்மை மேலே மேன்மை பெற்று
விண்ணில் வாழச் செய்திடும்.


Post Comment

Sunday, July 1, 2012

பாமாலை 365 - லௌகீக இன்பம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    லௌகீக இன்பம் மேன்மையும்
இப்பரதேசிக்கு வேண்டாம்;
பரம நன்மை செல்வமும்
இங்கில்லை, யாவும் மாயையாம்!
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

2.    லௌகீக வாழ்வு ஒழியும்;
சரீரம் அழகற்றுப்போம்;
நரர் கைவேலை அழியும்;
இவ்வுலகமும் வெந்துபோம்;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

3.    ஆனாலும் இயேசு ராஜியம்
அழிந்து போகமாட்டாதே;
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

4.    நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே;
பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

Post Comment