Thursday, June 22, 2017

கர்த்தரின் வேலை செய்வீர் (Work, for the night)

கர்த்தரின் வேலை செய்வீர்
(Work for the night is coming)

’ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ யோவான் 9 : 4

மானிடவர்க்கத்துக்கு உழைப்பு மிகவும் இன்றியமையாதது.  ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் வெளியேற்றப்பட்டபின், வியர்வை சிந்தி வேலை செய்யவேண்டியவனாயிருந்தான்.  உழைப்பின் மகிமையையும், சோம்பேறித்தனத்தின் தீமையையும் குறித்து, திருமறையின் அநேகப் பகுதிகளில் காணலாம்.  சோம்பேறித்தனத்தைக் கண்டித்து, எறும்புகளின் வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்ளும்படி சாலொமோன் ஞானி போதித்திருக்கிறார் (நீதி 5:6).  ஆண்டவரும் வேலை செய்பவர்களைக் குறித்துப் பல உண்மைகளைக் கூறி, வேலை செய்தவனே கூலிக்குப் பாத்திரனாவான் எனக்காட்டிருக்கிறார் (மத் 10:10; லூக் 10:7).  கடினமாக உழைத்தவன் தகுந்த ஊழியத்தைப் பெறுவதை நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம்.  புதிய உலகம் என்றழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தில் முதலில் குடியேறியவர்கள் அதிகக் கஷ்டப்பட்டு உழைத்ததின் பயனாக, அக்கண்டம் இன்று தலைசிறந்து விளங்குகிறது.

கடவுளுக்கடுத்த வேலைகளிலும் இவ்விதச் சிரத்தை காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ’கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என எரேமியா தீர்க்கதரிசி எச்சரித்திருக்கிறார்.  தமது மூன்றரையாண்டு ஊழியத்தில், நமது ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்தார்.  அப்போஸ்தலர் நடபடிகளிலும், நிருபங்களிலும், ராஜ்ஜியத்தின் பிரபல்லியத்திற்காக அப்போஸ்தலர் ஓயாது உழைத்ததைக் காணலாம்.  ஆகவே நாமும் ஆண்டவரின் ஊழியத்தைத் தளராது செய்ய ஏவப்படுகிறோம்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த அன்னா லூயிசா அம்மையார் (Annie Louisa), 1854ம் ஆண்டு, தன் பெற்றோரோடு கனடா நாட்டுக்குச் சென்று குடியேறினார்.  அக்காலத்தில் கனடா ஆங்கில அரசின் ஒரு குடியேற்ற நாடாக (Colony) இருந்தது.  அங்கு முதலில் குடியேறிய மக்கள் மிகவும் கடினமாக வேலை செய்து நாட்டை சீர்படுத்தவேண்டியிருந்தது.  ஏனெனில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கனடா நாடு ஆள் சஞ்சாரமற்றுக் காடு மேடாக இருந்தது.  அன்னா லூயிசாவின் குடும்பத்தினர் அங்கு சென்றபோதும், மக்களின் கடின உழைப்பு மிகவும் அவசியமாயிருந்தது.  இதைக் கவனித்த அம்மையார், உழைப்பின் தேவையை உணர்ந்தார்.  ஒருநாள் இரவு அவர்கள் திருமறையைப் படித்துக்கொண்டிருக்கும்போது, யோவான் 9:4-ல் ‘ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ என்னும் வசனத்தைக்கொண்டு, உழைப்பின் அவசியத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், ’கர்த்தரின் வேலை செய்வீர்’ என்னும் பாடல் அவர் மனதில் உருவானது.  உடனே அதை அவர் எழுதிவைத்தார்.  இப்பாடலை எழுதும்போது அவருக்கு வயது பதினெட்டு.  சங்கீதப் பண்டிதரான லவ்வல் மேசன் (Lowell Mason) இதற்கு ஓர் அழகிய ராகத்தை அமைத்துள்ளார்.

Lowell Mason
இப்பாடலை எழுதிய அன்னா லூயிசா அம்மையார் 1836ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்டாபர்டுஷயர் (Kiddermore, Stafford­shire) என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது தந்தையான ராபர்ட் வாக்கர் (Robert Walker) என்பவர் ஒரு பொறியாளராக வேலைபார்த்தவர்.  அவரது மூன்று பெண் மக்களில் ‘அன்னா லூயிசா’தான் கடைசி பிள்ளை.  அன்னா லூயிசா பதினெட்டு வயதாயிருக்கையில், வாக்கர் குடும்பம் கனடா நாட்டில் குடியேறினர்.  அங்கு மூன்று சகோதரிகளும் சேர்ந்து பெண்களுக்கான ஒரு சிறிய பள்ளி ஆரம்பித்தனர்.  சில காலத்துக்குப்பின், இரு மூத்த சகோதரிகளும் இறந்துபோனதால், பள்ளியை மூடவேண்டியதாயிற்று.  1863’ல் அன்னா லூயிசா இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து, அங்கு ஒரு மாணவிகள் இல்லத்தில் மேற்பார்வையாளராகவும், புத்தக மதிப்புரை எழுதுபவராகவும் பணியாற்றினார்.  1883’ல் அவர் ஹாரி காக்ஹில் (Harry Coghill) என்னும் ஒரு செல்வந்தரை மணந்து, ஹேஸ்டிங்க்ஸ் நகரில் வசிக்கலானர்.

அன்னா காக்ஹில் அம்மையார் 1907’ம் ஆண்டு தமது 71வது வயதில் பாத் நகரில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    கர்த்தரின் வேலை செய்வீர்
விடியற் காலத்தில்
வைகறை சுகமான
நல்ல நேரத்தில்
சூரியன் வானில் ஏறி
கிரணம் வீசவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

2.    கர்த்தரின் வேலை செய்வீர்
மா உஷ்ண வேளையும்
வெயிலும் எரித்தாலும்
ஒளியாதிரும்
ஊழியம் செய்து வாரும்
இடைவிடாமலும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

3.    கர்த்தரின் வேலை செய்வீர்
பொழுது போகுமே
சிவந்த வானம் பாரும்
ஒளி நீங்குமே
சந்திய காலமாகி
இருள் உண்டாகவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்
*******************************************************

1.         Work, for the night is coming,
Work thro' the morning hours;
Work while the dew is sparkling,
Work 'mid springing flow'rs.
Work when the day grows brighter,
Under the glowing sun;
Work, for the night is coming,
When man's work is done.

2.         Work for the night is coming,
Work thro' the sunny noon;
Fill brightest hours with labor--
Rest comes sure and soon.
Give every flying minute
Something to keep in store;
Work, for the night is coming,
When man works no more.

3.         Work for the night is coming,
Under the sunset skies:
While their bright tints are glowing,
Work, for daylight flies.
Work till the last beam fadeth,
Fadeth to shine no more;
Work, while the night is dark'ning,
When man's work is o'er.




Post Comment

Tuesday, June 20, 2017

பாமாலை 100 - இயேசு பட்ட மா பலத்த

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.

2.    பாதம் வாழ்த்தி
என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக
நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.

3.    மாளுகையில்
மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட
திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.

Post Comment

Monday, June 12, 2017

பாமாலை 234 - ஒழிந்ததே இப்பூவினில்

பாமாலை 234 – ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம்
(In Christ there is no East or West)

’கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்’. லூக் 13 : 29

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உலக ரட்சகராகப் பிதாவினாலே அனுப்பப்பட்டார். உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அவர் ரட்சகர் என்பதைத் திருமறையில் பல இடங்களில் காண்கிறோம் (மாற் 16:15, யோவா 1:20, 3:17, 8:12, 12:47).  ஆயினும், ஆதித்திருச்சபையில் ரட்சிப்பு யூதருக்கு மட்டுமே உரியது என்னும் அபிப்பிராயம் பரவ ஆரம்பித்தது; ஏனெனில் அப்போஸ்தலர் எல்லாரும் யூதராகவே இருந்தனர்.  ஆனால் புறஜாதியாரும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.  விருத்தசேதனம் இல்லாத புறஜாதியாரைத் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என சிலர் விவாதித்தனர் (அப் 15:1). பவுலோ, நற்செய்தி எல்லா ஜனத்துக்கும் உரியது என வற்புறுத்தினர்.  இதைக்குறித்துத் தீர்மானிக்க, கி.பி. 49ல் எருசலேம் நகரில் ஓர் ஆலோசனைச் சங்கம் கூடிற்று.  இதில் ‘மிகுந்த தர்க்கம்’ உண்டானது (அப் 15:7).  இறுதியில், விருத்தசேதனமும், மோசேயின் நியாயப்பிரமாணமும் இரட்சிப்புக்கு அவசியமானதல்ல என்றும், சகல ஜாதியாரும் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  அதன்பின்பு நற்செய்தி தீவிரமாகப் பரவ ஆரம்பித்து, உலகம் எங்கும் திருச்சபை வியாபித்திருக்கிறது.  ஆண்டவரும் அவரது உபதேசத்தில், உலகத்தின் நாலா திசைகளிலிருந்தும் ஜனங்கள் வந்து தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் (மத் 8:11, லூக் 13:29). பவுல் அப்போஸ்தலன் இதைத் தமது நிருபங்களில் விரிவாக எடுத்துரைத்துள்ளார் (ரோமர் 10:12, கலாத் 3:18, கொலோ 3:11).

1908ம் ஆண்டு லண்டன் மாநகரில் மாபெரும் பொருட்காட்சி (Exhibition) ஒன்று நடத்தப்பட்டது.  இது உலகத்தின் நாலாபாகங்களிலும் நடந்துவரும் மிஷனரி ஊழியத்தின் சாதனைகளைக் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.  இதில் உலகத்தின் பற்பல பாகங்களிலிருந்து வந்த மிஷன் ஊழியர்கள் பங்கெடுத்தனர்.  இப்பொருட்காட்சியைத் திறந்துவைத்தவர் அக்காலத்தில் ஆங்கில அரசாங்கத்தின் வர்த்தக இலாகாவின் (Board of Trade) அதிபராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர்.  பொருட்காட்சியின் முடிவில், ‘இருளும் ஒளியும்” (“Darkness and Light”) என்னும் பெயர்கொண்ட ஒரு காட்சி (Pageant) நடைபெற்றது.  இதில் பாடல்களும், சொற்பொழிவுகளும், நடிப்புகளும் இடம்பெற்றன. இதை அமைத்தவர் ஜான் ஆக்ஸன்ஹம் (John Oxenham) என்னும் எழுத்தாளர்.  பாடல்களை அமைத்தவர் ஹாமிஷ் மாக்கன் என்பவர்.  காட்சியைத் தயாரிக்கும்போது ஒரு பாடல் குறைவுபட்டதால், அதற்கேற்ற ஒரு பாடல் எழுதித் தரும்படி மாக்கன் தனது நண்பரான ஆக்ஸன் ஹமிடம் (John Oxenham) கேட்கவே, அவர் மிக விரைவில், ‘ஒழிந்ததே இப்பூவினில்’ என்னும் பாடலை எழுதிக்கொடுத்தார்.  அதற்கேற்ற ஓர் ராகத்தில் முதல்முதலாக இப்பாடல் அவ்விழாவில் பாடப்பட்டது.  விழாவிற்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருந்ததால், அது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

John Oxenham
இப்பாடலை எழுதிய ஜான் ஆக்ஸன் ஹம் என்பவர் 1852ம் ஆண்டு, நவம்பர் மாதம் 12ம் தேதி இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிறந்தார்.  அவரது உண்மையான பெயர், வில்லியம் ஆர்தர் டங்கர்லே (William Arthur Dunkerley) என்பது.  சிறுவனாக இருக்கும்போது அவர் படித்த, ‘Westward Ho’ என்னும் கதைப்புத்தகத்திலிருந்த ஒரு பெயரைத்தான் பெயராக வைத்துக்கொண்டார் (Pen Name).  அவர் மான்செஸ்டர் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.  அவரது தந்தை இங்கிலாந்திலும், பிரான்ஸ் நாட்டிலும் உணவுப்பொருள் வியாபாரம் நடத்தி வந்தார். பிரான்ஸ் நாட்டிலுள்ள வியாபாரப் பகுதியைக் கவனிப்பதற்காக ஆக்ஸன்ஹம் அனுப்பப்பட்டார்.  1877ல் அவர் அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணம் செய்து, இரண்டு ஆண்டுகளுக்குப்பின் லண்டன் நகருக்குத் திரும்பினார்.  இங்கு ஒரு புத்தகப் பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும், வேலை ஆரம்பித்து, 1913வரை இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்பு ஈமிங் நகருக்குச் சென்று கிறிஸ்தவப் புத்தகங்களும் செய்யுள்களும் எழுதலானார். மொத்தத்தில் அவர் 62 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஜான் ஆக்ஸன்ஹம் 1941ம் ஆண்டு, ஜனவரி மாதம் 24ம் தேதி தமது 89ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்;
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்,
சபை ஒன்றே ஒன்றாம்.

2.    மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே,
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே.

3.    வாரும், கைகோரும், சபையில்
எம்மனுமக்களே;
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே

4.    சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில்;
சபை ஒன்றே ஒன்றாம்.

Post Comment

Thursday, June 8, 2017

பாமாலை 99 - இயேசு உமதைந்து காயம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசு உமதைந்து காயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக

2.    லோகம் தன் சந்தோஷமான
நகர வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான் இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்
அப்போ மோசங்கள் கலையும்

3.    எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்கநுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்

4.    நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும் இயேசுவே
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக

5.    இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக் கொள்வீராக.

Post Comment