Friday, August 25, 2023

கீர்த்தனை 371 - இறைவனின் பணியில் இன்றைய உலகில்

Rev. Dr. Gnanavaram

Rev. Dr. Thomas Thangaraj


இறைவனின் பணியில்
இன்றைய உலகில்
இறைமக்கள் நாமே
இணைந்திடுவோமே 
 
1. வறுமையின் பிடியில் வாழ்ந்திடும் மனிதர்
வளம் பெற உழைப்போம் வழிகாட்டிடுவோம்
பொறுமையின் வழியில் பிறர்துயர் களைந்தே
புதியதோர் வாழ்வு புலர்ந்திட முனைவோம்
 
2. சமயங்கள் பலவாய் இருந்திடும் உலகில்
சாந்தமாய்ப் பிறரை ஏற்றுமே வாழ்வோம்
இமயமாய் பிரிவினை எழுந்திடும் வேளை
ஏசுவின் பெயரில் இணைந்திட முயல்வோம்
 
3.  சாதியின் கொடுமை ஒழிந்திட உழைப்போம்
சமத்துவ நெறியில் இணைந்துமே வாழ்வோம்
பாதி மனிதராய் ஒடுக்கப்பட்டோரின்
பாடுகள் நீங்க போராடிடுவோம்

 












































































































































Post Comment

Wednesday, August 2, 2023

வேதத்தை நேசி (Cling to the Bible)

வேதத்தை நேசி 
Cling to the Bible
SS 263

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


*******************************************************



1. வேதத்தை நேசி அது பெலன் தரும்
விலையுள்ள அது புனிதமாம்
தூங்கும் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும்
மரித்தோர் ஜீவன் பெறல் நிச்சயம்

வேதத்தை நேசி வேதத்தை நேசி 
        வேதத்தை நேசி மீட்பர் தாங்குவார்

2. வேதத்தை நேசி விலைபெற்ற செல்வம்
மானிடர்க்கு நித்ய ஜீவன் தரும்
உலகோர் அளவிட இயலாது
ஆத்மா அருள் பெற வேதம் நேசி

3. கால்களுக்குத் தீபம் பாதைக்கு ஒளி
விழும் வாலிபர்க்கு அது வழி
கெட்டுப்போன மாந்தர்க்கு நம்பிக்கையாம்
முதியவர் தாங்கும் கோல் வேதமே

4. வேதத்தை நேசி அது உன் மகிழ்ச்சி
வேதம் ஆத்மாவைப் பெலப்படுத்தும்
ஆவியில் தேறவும் சாவை வெல்லவும்
சத்திய வேதம் வழி காட்டிடும்

Post Comment

பாமாலை 176 - சீர் ஆவியால் (Byzantium)

பாமாலை 176 - சீர் ஆவியால் 
Tune : Byzantium


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

***************************************************************

*************************************************************


1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.

2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.

3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.

4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.




Post Comment

Tuesday, August 1, 2023

கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்

 கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்



இறையடி தினம் வரும் அடியவராய்
மறை பயில்வது தரும் நிறை மகிழ்வே
இறையியல் அறிவதில் துணிபவராய்
குறையற செயல்படல் இறை பணியே

1. அன்புடன் அறிவும் அமைந்திருந்தால்
ஆண்டவர் பணியதில் வளர்ந்திடலாம்
துன்புறும் நேரமும் துதியிருந்தால்
தூயனின் சேவையில் துணிந்திடலாம்

2. உணர்வுடன் உண்மையும் இணைந்திருந்தால்
உண்மையில் உணர்வுகள் உயர்வடையும்
உணர்ந்துமே மனுவெலாம் ஒருங்கிணைந்தால்
உலகினில் ஓரிறை அரசமையும்

3. சொல்லுடன் செயலும் சேர்ந்திருந்தால்
சொல்லிடும் செய்தியில் மெருகமையும்
வல்லவர் இயேசுவின் வழிநடந்தால்
வல்லமை வாழ்வெல்லாம் வந்தமையும்
***********************************************************



Post Comment