Showing posts with label திருச்சபைப் பண்டிகைகள். Show all posts
Showing posts with label திருச்சபைப் பண்டிகைகள். Show all posts

Tuesday, May 27, 2025

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் (Truro)

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின்
Tune : Truro

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*************

1.            மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2.    விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3.    கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4.    ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5.    விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.

Post Comment

Thursday, April 4, 2024

பாமாலை 122 - அல்லேலூயா ஆ மாந்தரே (Arrangement-2)

 பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே

(Alleluya! O Sons and Daugh­ters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE

‘அல்லேலூயா! ஆ மாந்தரே’ எனும் இப்பாடல், கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே இப்பாடல் பாடப்படுகிறது. இப்பாடலை எழுதியவர் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த Jean Tisserand எனும் ஃப்ரெஞ்சு நாட்டின் துறவி என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.


John Mason Neale

ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர். அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர். ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார். திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது. அவர் ஒரு சிறந்த கல்விமான். ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார். திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார். அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*********************

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!





Post Comment

Tuesday, May 2, 2023

பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை (Luther)

பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை 
Tune : Luther

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்.

2.    என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக் கெனதுண்மையாம்
துதியுண்டாவதாக
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்.

3.    இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக் காரும்
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க, ஆமேன்.

Post Comment

Monday, April 10, 2023

பாமாலை 93 - சிலுவைக் கொடி முன்செல்ல (Winchester New)

பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல
(The royal banners forward go)
Tune : Winchester New


இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.  
எழுதியவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. 1851ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது.  நம் தமிழ் திருச்சபைகளில் ’இஸ்திரீயின் வித்தவர்க்கு’ (பாமாலை 91), ஓசன்னா பாலர் பாடும்’ (பாமாலை 92), ‘தயாள இயேசு தேவரீர்” (பாமாலை 94), ஆகிய மூன்று பாமாலைகளும் குருத்தோலை ஞாயிறன்று பரவலாகப் பாடப்படும் நிலையில், ‘சிலுவைக்கொடி முன்செல்ல’ எனும் இப்பாடல், மிக அரிதாகவே பாடப்படுகிறது.

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2.    மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3.    முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4.    வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.

5.    உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.


Post Comment

Sunday, April 9, 2023

பாமாலை 103 - என் அருள் நாதா (Hamburg)

பாமாலை 103 - என் அருள் நாதா 
When I survey the wondrous Cross
Tune : Hamburg

‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. கலாத்தியர் 6 : 14


இப்பாடலின் இரண்டாவது வரியாகிய, ‘சிலுவைக் காட்சி பார்க்கையில்’ என்பதில், ‘பார்க்கையில்’ என்பது ஆங்கிலத்தில், Survey என்றிருக்கிறது.  இப்பதம் நிலத்தை அளப்பதைக் குறிக்கும்.  நிலத்தை அளப்பவன், நிலத்தின் இருப்பிடம், வடிவம், பரப்பு, எல்கைகள் முதலியவற்றைத் தன் கண்களினாலும், அளக்கும் கருவிகளினாலும் தன் மனதில் திட்டவட்டமாகக் கணிக்கவேண்டும்.  இதையே இப்பாடலை எழுதியவர் தன் மனதில் எண்ணியிருக்கலாம்.  கிறிஸ்தவர்களாகிய நாம், அருள்நாதர் உயிர்துறந்த கல்வாரிச் சிலுவைக் காட்சியை இவ்விதமாகவே ஆராயவேண்டும்.
சிலுவைக் காட்சியை நாம் நுட்பமாக ஆராயும்போது, நமது வாழ்க்கையிலுள்ள குறைகள் தென்படும்.  நமது சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்ட இடமிராது.  மேலும், சிலுவைக்காட்சி வேதனை கொடுக்கும் ஒரு சின்னமாகத் தோற்றமளிக்கும்.  ஆண்டவரின் முகத்தில் முள்முடியினால் வடிந்த இரத்தம் பாய்ந்தோடுவதையும், கைகளிலும், கால்களிலும், ஆணிகளினால் பாய்ந்த இரத்தத்தையும் காண்கிறோம்.  கல்வாரிச் சிலுவை, ‘பேரன்பும், துன்பும் கலந்தே பாய்ந்தோடும்’ காட்சியையும் அளிக்கிறது.  நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில், அவர் நம்மை நேசித்தார்.  


ஆகவே, இச்சிலுவைக் காட்சியின்முன் நாம் தலைகுனிந்து, நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய ஏவப்படுகிறோம்.  சராசரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாய் இருந்தாலும், அவை ஆண்டவரின் அன்புக்கு ஈடாகமாட்டா.
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் (Isaac Watts) 1674ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, இங்கிலாந்தில் Southampton நகரில், ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.  அவரது தந்தை ஓர் ஆசிரியர்.  Southampton நகரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் குருவானவர், ஐசக் வாட்சுக்கு லத்தீன், கிரேக்க, எபிரேய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.  


1690ல் அவர் சுய ஆளுகைச் சபையைச் சேர்ந்த ஒரு வேதசாஸ்திரப் பயிற்சி நிலையத்தில் பயின்று, 1697ல் தமது இருபத்துநான்காவது வயதில், லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகைச் சபையின் போதகராகத் திருப்பணியாற்ற ஆரம்பித்தார்.  சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவரது உடல் நலம் குன்றியதால், திருப்பணியை விட்டு, 1714 முதல், ஹெர்போர்டுஷயரிலிருந்த தமது நண்பர், ஸர் தாமஸ் அபினியுடன் (Sir Thoma Abney) நிரந்தரமாகத் தங்கியிருக்கவேண்டிவந்தது.


அவர் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, அக்காலத்திலிருந்த கிறிஸ்தவப் பாட்டுப் புத்தகங்களில் காணப்பட்ட பாடல்களில் அதிருப்தியடைந்து, தாமே பல பாடல்கள் எழுதினார்.  இரண்டு ஆண்டுகளாக அவர் எழுதிய பாடல்களை, ‘ஆவிக்குரிய பாடல்களும், ஞானப்பாட்டுகளும்’ (Hymns and Spiritual songs) என்னும் பெயருடன் வெளியிட்டார்.  ‘என் அருள்நாதா இயேசுவே’ என்னும் இப்பாடல் கலாத்தியர் 6:14ம் வசனத்தின்பேரில், 1707ம் ஆண்டு எழுதப்பட்டது.  பிரபல ஆங்கிலக்கவிஞரான மேத்யூ அர்னால்டு, இப்பாடலைப் பார்த்து, ‘ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட பாடல்களில் மிகச்சிறந்த பாடல்’ எனப் போற்றியுள்ளார்.  தனது மரணப் படுக்கையிலும் இதையே கடைசியாகப் பாடி மகிழ்ந்தார்.  


இப்பாடலுக்கு புகள்பெற்ற அமெரிக்க இசை வல்லுநரான லோவல் மேசன் "ஹாம்பர்க்" என்ற  ராகத்தை அமைத்தார். எபிரேய தேவாலையத்தில் பாடும் பாடல் ராகத்தின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது. லோவன் மேசன் "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவர்.
🎤🎷🎺🎻🎸🎶🎵🎼🎧🎧🎤

............

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை, தலை, காலிலும், இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

Post Comment

Friday, January 13, 2023

பாமாலை 144 - கொந்தளிக்கும் லோக (St. Andrew)

பாமாலை 144 - கொந்தளிக்கும் லோக 
Jesus calls us o'er the tumult
Tune : St. Andrew


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1. கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’

2. பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே.

3. மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்

4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்,
யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்.

5. மீட்பரே, உம் சத்தம் கேட்டு,
கீழ்ப்படிய அருளும்;
முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்.


Post Comment

Sunday, December 4, 2022

பாமாலை 58 - இரக்கமுள்ள மீட்பரே (Alstone)

பாமாலை 58 - இரக்கமுள்ள மீட்பரே 
Tune : Alstone

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    இரக்கமுள்ள மீட்பரே
நீர் பிறந்த மா நாளிலே
ஏகமாய்க் கூடியே நாங்கள்
ஏற்றும் துதியை ஏற்பீரே

2.    பெத்தலை நகர் தனிலே
சுத்த மா கன்னிமரியின்
புத்திரனாய் வந்துதித்த
அத்தனே மெத்த ஸ்தோத்திரம்

3.    ஆதித் திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்

4.    பாவம் சாபம் யாவும் போக்க
பாவிகளைப் பரம் சேர்க்க
ஆவலுடன் மண்ணில் வந்த
அற்புத பாலா ஸ்தோத்திரம்

5.    உன்னதருக்கே மகிமை
உலகினில் சமாதானம்
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டானதும்மால் ஸ்தோத்திரம்

6.    பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே
தங்கும் நெஞ்சத்தில் ஸ்தோத்திரம்
****************************

Post Comment

Sunday, October 13, 2019

பாமாலை 141 - தெய்வன்புக்காக உன்னத

பாமாலை 141 – தெய்வன்புக்காக உன்னத
(Allein Gott in der Höh sei Ehr)


"Allein Gott in der Höh sei Ehr" (Alone to God in the Highest be glory) எனும் இப்பாடல் ஆரம்பகால லுத்தரன் பாடலாகும், நிக்கோலஸ் டெசியஸ் (Nikolaus Decius) எனும் ஜெர்மானியத் துறவி இப்பாடலை எழுதி அமைத்தார்.  ஜெர்மனியின் Leipzig நகரில் தன் பட்டப்படிப்பை முடித்த இவரது காலம் 16ம் நூற்றாண்டாகும்.  ஜெர்மனியின் Brunswick நகரின் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், 1535ம் ஆண்டு அங்குள்ள St. Nicholas தேவாலயத்தின் ஆயராகப் பொறுப்பேற்று தம் ஊழியத்தைத் தொடர்ந்தார்.  தம் வாழ்நாளீல் நிக்கோலஸ் அநேக பாடல்களை எழுதியிருப்பினும் “Allein Gott in der Höh sei Ehr” எனும் இப்பாடல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் நம் திருச்சபைகளில் பாடப்பட்டு வருகிறது.

Catherine Winkworth
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (All glory be to God on high).  இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.

இப்பாடலுக்கான கேத்தரின் அம்மையாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நான்கு பல்லவிகளுடன் இவ்வாறாக அமைந்திருக்கிறது.

1. All glory be to God on high,
Who hath our race befriended!
To us no harm shall now come nigh,
The strife at last is ended;
God showeth His goodwill to men,
And peace shall reign on earth again;
O thank Him for His goodness!

2. We praise, we worship Thee, we trust
And give Thee thanks forever,
O father, that Thy rule is just
And wise, and changes never;
Thy boundless grace o’er all things reigns,
Thou dost whate’er Thy will ordains;
’Tis well Thou art our Ruler!

3. O Jesus Christ, our God and Lord,
Begotten of the Father,
O Thou who hast our peace restored,
And the lost sheep dost gather,
Thou Lamb of God, enthroned on high
Behold our need and hear our cry;
Have mercy on us, Jesus!

4. O Holy Spirit, precious Gift,
Thou Comforter unfailing,
Do Thou our troubled souls uplift,
Against the foe prevailing;
Avert our woes and calm our dread:
For us the Savior’s blood was shed;

Do Thou in faith sustain us!
*********************************

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.    தெய்வன்புக்காக உன்னத
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
என் பாவக்கேட்டை நீக்கின
அருள் மகா திரட்சி;
மெய்ச் சமாதானம், என்றைக்கும்
மானிடர்மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.

2.    மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே,
துதியோடும்மைக் கும்பிட
பணிகிறோம், கர்த்தாவே,
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவும் செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.

3.    ஆ, இயேசு, தெய்வ மைந்தனே;
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே,
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் சத்தம் கேட்டெல்லா
சபைக்கும் நீர் இரங்கும்.

4.    மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவீ நீர் அன்பாக
இறங்கி, கிறிஸ்து தம்முட
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாதே காத்து, துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.

Post Comment

Tuesday, October 1, 2019

பாமாலை 133 - ஆ இயேசுவே புவியிலே

பாமாலை 133 – ஆ இயேசுவே புவியிலே
(Zeuch uns nach dir so laufen wir)


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக,
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.

2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.

3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்,
நீர் மோசத்தை அகற்றும்.

4. இவ்வுலகம்
ஆகா தலம்,
இழும், அடியார் தேடும்
தலம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.

5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்,
நீரே இம்மானுவேலும்;
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.

Post Comment

Friday, September 20, 2019

பாமாலை 136 - வாஞ்சைப்பட்ட இயேசுவே (Ascension)

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே
(Hail the Day that sees Him Rise)

Charles Wesley
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Charles Wesley எழுதிய இந்தப் “Hail the Day that sees Him Rise” எனும் இப்பாடல் பல்வேறு காலகட்டங்களில் பல பாடலாசிரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் முதன்முதலில் 1739ம் ஆண்டு “Hymns and Sacred Poems” எனும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. ’கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் இப்பாடலை வெஸ்லி எழுதினார். வெஸ்லி எழுதிய மூலப்பாடலில் மொத்தம் பத்து பல்லவிகள் இடம்பெற்றன.  1852ம் ஆண்டு பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னரும் ‘அல்லேலூயா’ இணைக்கப்பட்டது.  பின்னர் ‘Ancient and Modern” பாமாலைப் புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் பாடலில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.

பல்வேறு ராகங்களில் இப்பாடல் பாடப்பட்டாலும், ‘Ascension” எனும் இந்த ராகமே மிகப் பிரபலமான ராகமாக விளங்குகிறது. இந்த ராகத்தை W.H. Monk (1823-89) 1861ம் ஆண்டு இயற்றினார்.

சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison 
Unison with Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant









































1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Post Comment

Tuesday, July 23, 2019

பாமாலை 122 - அல்லேலூயா ஆ மாந்தரே

பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே
(Alleluya! O Sons and Daugh­ters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE

அல்லேலூயா! ஆ மாந்தரே’ எனும் இப்பாடல், கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே இப்பாடல் பாடப்படுகிறது.  இப்பாடலை எழுதியவர் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த Jean Tisserand எனும் ஃப்ரெஞ்சு நாட்டின் துறவி என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.

John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!

Post Comment