Tuesday, August 28, 2012

பாமாலை 43 - உலகத்தைப் பலமுள்ள

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.  உலகத்தைப் பலமுள்ள
கையால் ஆண்டு, தினமே
என்னைக் காக்கும் உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே,
என்னைத் தெய்வ துதிக்கும்
இந்த நாள் எழுப்பிடும்.

2.  கர்த்தரின் திருநாளான
இந்த நாள் மா இன்பமே
இதில் ஓய்வும் உண்மையான
ஆறுதலும் ஈவீரே;
இதில் ஆவியானவர்
மோட்ச வழி காட்டுவர்.

3.  என் ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே;
தெய்வ தயவைச் சிந்திக்க
என்னைத் தூண்டி ஏவுமே;
என் ஜெபம் புகழ்ச்சியும்
வானமட்டும் ஏறவும்.

4.  தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
உம்முடைய வசனம்
ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
ருசியான அமிர்தம்;
ராப்பகலும் அதை நான்
சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.

5.  எங்கள் ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன் என்கவும்,
மோட்சத்தில் உம்மை நேராக
நாங்கள் பார்க்குமட்டுக்கும்,
ஏகமாய் வணங்குவோம்,
உம்மைப் பாடிப் போற்றுவோம்.

Post Comment

Wednesday, August 15, 2012

பாமாலை 16 - ஆ கர்த்தாவே தாழ்மையாக

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2.  வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3.  என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

Thanks to dear brother Mr. Pon Vijay for his contribution to this post.

Post Comment

Saturday, August 11, 2012

பாமாலை 342 - கர்த்தர் என் பக்கமாகில்

 பாமாலை 342 - கர்த்தர் என் பக்கமாகில்

Unison

Soprano
Ato
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano






















1.  கர்த்தர் என் பக்கமாகில்
எனக்குப் பயம் ஏன்
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்
அப்போதென்மேலே வந்த
பொல்லாவினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு போலே ஆம்.
 
2.  என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே
அதாலே பக்தர் யாரும்
திடன் கொள்வார்களே
நான் ஏழை பலவீனன்
வியாதிப்பட்டோனே
அவரில் சொஸ்தம் ஜீவன்
சமஸ்தமும் உண்டே
 
3.  என் நீதி இயேசுதானே
அவர் இல்லாவிட்டால்
பிதாவுக்குமுன் நானே
மா பாவியானதால்
விழிக்கவும் கூடாதே
என் இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே
என் மீட்பர் அவரே
 
4.  என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது
இவர் இரக்கத்தாலே
என் பாவக் கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்
நான் நியாயத் தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்
வாழ்வெனக்கு வரும்
 
5.  தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே
அப்பாவே என்று சொல்ல
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம் செய்ய
என் ஆவி தேறுதே
 
6.  என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ
கர்த்தர் என் மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே

Post Comment

பாமாலை 271-யாரை நான் புகழுவேன்? (Tune - Barmouth)

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. யாரை நான் புகழுவேன்?
யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
 
2.  யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தை சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
 
3.  எந்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம்  யார்?
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால்.
 
4.  கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்?
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
 
5.  இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.

Post Comment

பாமாலை 270-முள் கிரீடம் பூண்ட (Tune - St. Magnus)

The Head that once was crowned with thorns


SATB

Soprano

Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. முள் கிரீடம் பூண்ட நாதனார்
மா மாட்சி பெற்றாரே
விண் கிரீடம் இப்போ சூடினார்
வென்றோராம் வீரரே.
 
2.  உன்னத ஸ்தானம் விண்ணிலே
இவர்க்கே சொந்தமாம்
மன்னாதி மன்னர் கர்த்தரே
விண் மாட்சி ஜோதியாம்
 
3.  அண்ணலின் நாமம் அன்பையும்
நன்றாய் அறிந்தோராம்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும்
இம்மீட்பர் நாதராம்
 
4.  சிலுவையின் மா நிந்தையும்
பேரருள் பெறுவார்
நிலையாம் நாமம் பூரிப்பும்
அன்னோர் அடைகுவார்
 
5.  நாதர்போல் பாரில் பாடுற்றே
அவரோடாள்வாராம்
தெய்வன்பின் மறை அறிவே
சந்தோஷம் பலனாம்.
 
6.  சிந்தை சாவான சிலுவை
நம் ஜீவன் சுகமாம்
நம் சம்பத்து, நம் நம்பிக்கை
நம் ஓயா தியானமாம்.

Post Comment

பாமாலை 261-எல்லாருக்கும் மா உன்னதர் (Diadem)

பாமாலை 261 – எல்லாருக்கும் மா உன்னதர்
(All hail the power of Jesus name)

‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ என்னும் நாமம் ….. எழுதப்பட்டிருந்தது. வெளி 19:19

இயேசுவின் ‘மகுடாபிஷேகக் கீதம்’ (Coronation Hymn) என்றழைக்கப்படும் இப்பாடல் எழுதப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்தது, லண்டன் மாநகருக்கு இருபது மைல்களுக்குத் தெற்கில் சுண்ணாம்புப் பாறைகளின் உச்சியில் எழுப்பப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான சிலுவையாகும்.  இப்பாறைகள் ஷோர்ஹம் என்னும் ஒரு குக்கிராமத்தில் இருந்தன.  சிலுவைக்கடியில் ஒரு சிறிய ஆலயமுமிருந்தது.  இவ்வாலயத்தில் போதகராக வின்சென்ட் பெரோனே (Vincent Perronet) என்பவர் பல ஆண்டுகளாக உழைத்தார். 
அவரது புதல்வரான எட்வர்ட் பெரோனே (Edward Perronet) சிறுவனாக இருக்கும்போது ஆலயத்தின் முன்நின்று சிலுவையைக் கண்ணுற்று, இயேசுவின் தியாகத்தை உணர்ந்தார்.  இவ்வுணர்ச்சி அவர் ஆயுள் முழுவதும் அவரைத் தன் ஊழியத்தில் ஊக்குவித்ததென அவரே கூறியுள்ளார்.  பல ஆண்டுகளுக்குப் பின் அவர் போதகராயிருக்கும்போது ஆங்கிலக் கவிகள் எழுதலானார்.  அப்போது அவர் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி எழுதிய ஒரு கவியே, ’எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் பெரோனே 1726ம் ஆண்டு இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை, ‘மெதடிஸ்டு சபையின் பிரதம அத்தியட்சர்’ என வேடிக்கையாக அழைக்கப்பட்டார். ஏனெனில் மெதடிஸ்டு சபையை ஏற்படுத்திய வெஸ்லி சகோதரருக்கு அவர் மிகுந்த ஆதரவளித்துவந்தார். பெரோனே 1749ம்ல் ஜான் வெஸ்லியுடன் சுற்றுப்பயணம் ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் சுற்றுப் பிரசங்கியாக உழைத்தார்.  பின்னர், ஆங்கிலத் திருச்சபையைத் தாக்கி உபந்நியாசங்கள் செய்ததாலும், அதைத் தாக்கி ஒரு புத்தகம் எழுதியதாலும், வெஸ்லி சகோதரர்களுடன் அவருக்கிருந்த நட்பு 1771ல் அற்றுப்போயிற்று. அதன்பின், ஹண்டிங்டன் சீமாட்டி (The Countess of Huntingdon) அவரைத் தன் வீட்டுக் குருவாக (Chaplain) வைத்துக்கொண்டார்.  ஆனால் அவர் திரும்பவும் ஆங்கிலச் சபையைத் தாக்கிக்கொண்டேயிருந்ததால், சீமாட்டியின் ஆதரவும் அவருக்கு இல்லாமல் போயிற்று  ஆதலால் அவர் பல சபைகளில் மாறி மாறி ஊழியம் செய்து, இறுதியில் கந்தர்புரியிலுள்ள (Canterbury) ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) போதகராக அமர்ந்தார்.

James Ellor
(Music : Diadem Tune)
எட்வர்ட் பெரோனே ஒரு சிறந்த கவிஞர்.  அவர் ஆங்கிலக் கவிகளடங்கிய மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு கவியே ‘எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகும். இது முதல் முதலாக 1779ல் ‘Gospel Magazine’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில், ‘Miles Lane’ என்னும் ராகத்துடன் வெளியிடப்பட்டது.  இந்த ராகத்தையே நாம் தற்போது இப்பாடலுக்கு உபயோகிக்கிறோம்.  இந்த ராகத்திற்கு இரட்சணியசேனையார் ஓர் அழகிய பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர்.  இப்பாடலுக்கு, ‘Diadem’, ‘Coronation’ என்னும் வேறு இரு ராகங்களும் உண்டு.


எட்வர்ட் பெரோனே 1792ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ம் தேதி, தமது 66வது வயதில் காலமானார்.  அவர் ஆங்கிலத் திருச்சபையைப் பலமாகத் தாக்கியிருந்தபோதிலும், கந்தர்புரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1.  எல்லாருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க, இயேசுவே.

2.  விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3.  பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4.  நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5.  விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Post Comment

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி (BRYN CALFARIA)

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்
 
2.    இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்
 
3.    மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே
 
4.    உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Post Comment

பாமாலை 174 - பிதா சுதன் ஆவியே (St. Edmund)

பாமாலை 174 - பிதா சுதன் ஆவியே 
(Tune : St. Edmund)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.  பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2.  உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.

3.  மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்

Post Comment