Friday, September 20, 2019

பாமாலை 136 - வாஞ்சைப்பட்ட இயேசுவே (Ascension)

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே
(Hail the Day that sees Him Rise)

Charles Wesley
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Charles Wesley எழுதிய இந்தப் “Hail the Day that sees Him Rise” எனும் இப்பாடல் பல்வேறு காலகட்டங்களில் பல பாடலாசிரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் முதன்முதலில் 1739ம் ஆண்டு “Hymns and Sacred Poems” எனும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. ’கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் இப்பாடலை வெஸ்லி எழுதினார். வெஸ்லி எழுதிய மூலப்பாடலில் மொத்தம் பத்து பல்லவிகள் இடம்பெற்றன.  1852ம் ஆண்டு பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னரும் ‘அல்லேலூயா’ இணைக்கப்பட்டது.  பின்னர் ‘Ancient and Modern” பாமாலைப் புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் பாடலில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.

பல்வேறு ராகங்களில் இப்பாடல் பாடப்பட்டாலும், ‘Ascension” எனும் இந்த ராகமே மிகப் பிரபலமான ராகமாக விளங்குகிறது. இந்த ராகத்தை W.H. Monk (1823-89) 1861ம் ஆண்டு இயற்றினார்.

சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison 
Unison with Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant









































1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Post Comment

Wednesday, September 18, 2019

பாமாலை 132 - வைகறை இருக்கையில் (St. George (Elvey))

பாமாலை 132 – வைகறை இருக்கையில்

Sir George Job Elvey
இப்பாடலுக்கான St. George (Elvey) எனும் ராகத்தை இயற்றியவர் Sir George Job Elvey எனும் ஆங்கிலேய இசையறிஞர் ஆவார். ஜார்ஜ் 1816 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கேன்டர்பரியில் பிறந்தார், பல தலைமுறைகளாக, அவரது குடும்பம் கதீட்ரல் நகரத்தின் இசை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. சிறு வயதிலேயே, கேன்டர்பரி கதீட்ரலின் பாடகர் குழுவில் அவர் அனுமதிக்கப்பட்டார், 1830 ஆம் ஆண்டில், ஜார்ஜின் சகோதரர் ஸ்டீபன், New College, Oxford ன் ஆர்கனிஸ்ட் ஆக நியமிக்கப்பட்ட பின்னர், ஜார்ஜ் அவருடன் வசிக்கச் சென்றார், மேலும் அவரது சகோதரரின் வழிகாட்டுதலின் கீழ் தனது இசைக் கல்வியை முடித்தார். பதினேழு வயதிற்குள்ளாகவே ஜார்ஜ் ஆர்கன் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்று Christ Churchன் தற்காலிக ஆர்கனிஸ்ட்டாகப் பணிபுரியத் துவங்கினார்.  1834 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த “Bow Down Thine ear, Lord’ என்ற பாடலுக்காக இவருக்கு Gresham Gold Medal வழங்கப்பட்டது.

1856-1860க்கு இடைப்பட்ட காலத்தில் St. George’s Chapel’ல் நடந்த பல்வேறு சிறப்பு ஆராதனைகளுக்கென George’ன் மிகச்சிறந்த படைப்புகள் உருவாகி பாடல் வடிவம் பெற்றன. 'The Souls of the Righteous' மற்றும் 'Blessed are the Dead' ஆகிய கீதங்கள் Prince Consortன் Funeral ஆராதனைகளுக்கென இயற்றப்பட்டவை. மேலும் ஜார்ஜ், Prince of Walesன் திருமணத்திற்கென 1863ம் ஆண்டு ‘Sing Unto God’ என்ற பாடலுக்கு இசையமைத்தார்.

ஜார்ஜ் ஆலய ஆராதனைக்கென்று ஏராளமான பாடல்களுக்கான இசையை இயற்றினார். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கீதங்களைத் தவிர, 'Cantate Domino,'  'Deus misereatur', போன்ற புகழ்பெற்ற கீதங்களுக்கான இசையையும் எழுதியது மட்டுமல்லாமல், பியானோ மற்றும் வயலினுக்கான இசைக்குறிப்புகள், 15 Part பாடல்களையும் இயற்றியுள்ளார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
’எந்தன் நாதர் எங்கேயோ?
அவர் தேகம் இல்லையே!
கொண்டுபோனவர் யாரோ?’
என்று ஏங்கி நின்றாளே.

2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு ’மரியாள்’ என்றார்
துக்கம் கொண்ட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழ்வாரே.

Post Comment

Sunday, September 8, 2019

பாமாலை 130 - பண்டிகைநாள்! மகிழ் கொண்டாடுவோம்

Unison

Soprano

Alto

Alto with Soprano
Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. பண்டிகைநாள்! மகிழ்கொண்டாடுவோம்,
வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்.
பண்டிகைநாள்! மகிழ் கொண்டாடுவோம்,

2. அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர்விடும் நல் வசந்தம்.

3. பூலோகெங்கும் நறுமலர் மணம்,
மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம்.

4. முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்
களிப்பாய், கர்த்தர் ஜெயித்தார் என்னும்.

5. சாத்தான் தொலைந்ததால் விண்மன், ஜலம்
கீர்த்தனம் பாடிக் களிகூர்ந்திடும்.

6. குருசில் தொங்கினோர் நம் கடவுள்;
சிருஷ்டி நாம், தொழுவோம் வாருங்கள்.

7. அநாதி நித்திய தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு ரட்சித்தார்.

8. நரரை மீட்க நரனாய் வந்தார்;
நரகம், சாவு, பேயையும் வென்றார்.

9. பிதா, சுதன், சுத்தாவிக்கென்றென்றும்
துதி புகழ் கனமும் ஏறிடும்.

Post Comment

Saturday, September 7, 2019

பாமாலை 129 - நல்ல ஜெயம் போர் செய்தின்றே

பாமாலை 129 – நல்ல ஜெயம்! போர் செய்தின்றே
(Triumph, Triumph es kommt mit Pracht)


Prätorius, Benjamin
இப்பாடலை எழுதிய ப்ரத்தோர்யஸ் பெஞ்சமின் (Prätorius, Benjamin) 1636ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி, ஜெர்மனியில் உள்ள Obergreisslau என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் போதகர் Andreas Prätorius என்பவர்.  ஜெர்மனியின் Leipzig நகரத்தில் தனது இறையியல் படிப்பை முடித்த பெஞ்சமின், 1661ம் ஆண்டு அரசவைக் கவியாக நியமிக்கப்பட்டார். தமது ஆயர் பணியினூடே, ஜெர்மன் மொழியில் இவர் எழுதிய பல்வேறு பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றன. பெஞ்சமின் 1659ம் ஆண்டு “"Jauchzender Lebanon" எனும் பாடல் தொகுப்பையும், 1664ம் ஆண்டு “"Spielende Myrtenaue" எனும் பாடல் தொகுப்பையும் வெளியிட்டார். இவர் மரித்த சரியான தேதி தெரியவில்லை எனும்போதிலும், 1674ம் ஆண்டு இவர் மறுமைக்குட்பட்டதாக வரலாற்று ஆய்வர்கள் கருதுகின்றனர். இவரைக் குறித்த மேலதிக விபரங்கள் பதிவுசெய்யப்படவில்லை.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே
கெலிப்பாய் ராஜா வாராரே:
அவரைச் சேர்ந்தோர் யாவரும்
இந்த ஜெயத்தைப் பாடவும்;

நல்ல ஜெயம்! நல்ல ஜெயம்!
முடிவில்லா பூரிப்புமாய்:
அல்லேலூயா!

2. மீட்பர் அடைந்த வெற்றிக்கு
எச்சிஷ்டியும் களிக்குது;
சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்
சாபம் அத்தால் நிவிர்த்தியாம்.

3. கர்த்தர் மரித்த நாளிலே
இருண்ட சூரியன் இன்றே
அவர் உயிர்த்த வெற்றிக்கு
பிரகாசமாய் விளங்குது.

4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்
இருந்தோர் வல்ல சிங்கமாய்
வாரார், பகைஞரினது
பத்திரக் காவல் விருதா.

5. பாவ விஷத்தின் தோஷமும்
அத்தால் இருந்த தீமையும்
ரட்சகராலே நீங்கிற்று;
மகிமை தேடப்பட்டது.

6. உத்தவாதமாயிற்று;
சபிக்கப்பட்ட ஆவிக்கு
நம்மில் பலமில்லாதேபோம்,
சாவுக்கினிப் பயந்திரோம்.

7. மேட்டிமையான சாத்தானே
தள்ளுண்டு போய் விழுந்ததால்,
அவன் அரண்கள் யாவுக்கும்
நிர்மூலமாகுதல் வரும்.

8. சீஷரின் ஆத்துமங்களை
நீர்தேற்றி, சமாதானத்தை
தந்ததுபோல, இயேசுவே,
நீர் எங்களுக்கும் தாரீரே.

9. நாங்கள் உடந்தையாய் உம்மால்
ஜெயித்து, மோட்ச வாசலால்
உட்பிரவேசித் தென்றைக்கும்
உம்முட அன்பைப் பாடவும்.

Post Comment