Showing posts with label திருமறை வாசகம். Show all posts
Showing posts with label திருமறை வாசகம். Show all posts

Sunday, September 1, 2013

பாமாலை 175 - ஆதியில் இருளை (Moscow)

பாமாலை 175 - ஆதியில் இருளை 
Thou Whose Almighty Word
Tune: Moscow

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி, கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.
 
2.  நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்,
கண்ணற்றோர் காணவும்,
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.
 
3.  சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல் பறந்தே,
பார் இருள் நீக்கியே
பிரகாசிப்பீர்.
 
4.  ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

Post Comment

Sunday, April 21, 2013

பாமாலை 177 - நாதன் வேதம் என்றும் (Ravenshaw)

பாமாலை 177 - நாதன் வேதம் என்றும் 
Lord Thy word Abideth
Tune : Ravenshaw

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
 
2. ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
 
3. புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
 
4. வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
 
5. ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
 
6. நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்.
 

Post Comment