Thursday, February 20, 2020

பாமாலை 148 – ஆத்துமாக்கள் மேய்ப்பரே (Sherborne)

பாமாலை 148 – ஆத்துமாக்கள் மேய்ப்பரே
(Bishop of the souls of men)
Tune : Sherborne

Gerard Moultrie (1829–1885)
இப்பாடலை இயற்றியவர் ஜெரார்ட் மோட்ரே (Gerard Moultrie) என்பவர் ஆவார். இவரது காலம் 1829 – 1885.  இங்கிலாந்தின் John Moultrie – Harriet Margaret தம்பதியரின் மகனாகிய இவர் தனது கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். 1855ம் ஆண்டு கடவுளின் அழைப்பை ஏற்று ஜெரார்ட் ஊழியத்திற்கென தன்னை அர்ப்பணித்து பல்வேறு திருச்சபைகளில் பணிபுரிந்தார். தனது வாழ்நாளில் அநேக பாடல்களை எழுதிய ஜெரார்ட் 1885ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

William H. Monk (1823–1889)
இப்பாடலுக்கான Sherborne எனும் இந்த ராகத்தை இயற்றியவர் William H Monk ஆவார்.  இவர் 1823ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் பிறந்தார். லண்டன் கிங் கல்லூரியில் இசை ஆசிரியராக இருந்த இவர் பரி. மத்தியாஸ் ஆலயத்தில் (St. Matthias, Stoke Newington, London) சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு இசை நடத்துனராக தன் ஊழியத்தைச் செய்தார்.  உலகம் முழுதும் ஏறக்குறைய 60 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்த Hymns Ancient and Modern என்ற பாடல் புத்தகத்தின் முதல் பிரதியைத் தொகுத்தவர் இவரே.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.

2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவான்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.

3. கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.

4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.

Post Comment

Sunday, February 2, 2020

பாமாலை 146 - மேய்ப்பரை வெட்ட ஓநாய் (Vulpius)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்
ஆட்டைப் பட்சிக்கவே,
சிதறடிக்கப்பட்ட
மந்தைமேல் பாய்ந்ததே.

2. சவுல் சீஷரைக் கட்ட
மா மூர்க்கமாய்ச் சென்றான்!
விண் ஜோதி க்ஷணம் கண்டு
தரையில் விழுந்தான்.

3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’
என்றே காதுற்றதும்,
‘கர்த்தாவே, யாது செய்வேன்?’
என்றான் நடுங்கியும்.

4. கிறிஸ்துவின் சத்துரு நல்ல
போர்ச்சேவகனானான்
கொல் ஓநாய்போன்றோன் ஆட்டு
குட்டிக்கொப்பாயினான்.

5. நல் மேய்ப்பர் இயேசு சுவாமி,
மந்தையைக் காருமே
அலையும் ஆட்டை உம்பால்
நீர் கொண்டு வாருமே.

Post Comment