Thursday, February 19, 2015

பாமாலை 41 - வியாதியஸ்தர் மாலையில்

பாமாலை 41 – வியாதியஸ்தர் மாலையில்
(At even ere the sun was set)

’சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்’. மாற்கு 1:32

Rev. Canon Henry Twells
லண்டன் மாநகரின் பெரும் கல்விச்சாலை ஒன்றின் தலைமை ஆசிரியராயிருந்த கனோன் ட்வெல்ஸ் (Rev. Canon Henry Twells) என்பவர் ஒருநாள் பள்ளி மாணவருக்குப் பரீட்சை நடத்திக்கொண்டிருந்தார்.  மாணவர்கள் வரிசையாக ஆசனங்களில் அமர்ந்து அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் ஒருமுறை அறையைச்சுற்றி மேற்பார்வை இட்டபின், தமது ஆசனத்தில் அமர்ந்தார்.  தலைமையாசிரியராக இருந்தபடியால் அவருக்கு எப்போதும் அதிக வேலையிருந்தது.  ஆனால் இப்போது பரீட்சை அறையில் வேறு வேலை செய்ய இயலாமையால், பல நிறக் கண்ணாடிகள் பதித்திருந்த ஒரு ஜன்னல் வழியாக வெளியிலிருந்த இயற்கைக் காட்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.  மாலைநேரம் நெருங்கும்போது, சூரிய ஒளியையும், செவ்வானத்தில் மேகங்களில் காணப்பட்ட பலவித வர்ணங்களையும் கண்டுகளித்தார்.  சூரியன் அஸ்தமிக்கும் நேரம் சமீபித்தபோது, அன்று காலையில் அவர் வேதத்தில் வாசித்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.  இதைப் போலொத்த ஒரு மாலை வேளையில் (மாற்கு 1:32) வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்டு குணமாக்கப்பட்டதை நினைத்தார்.

     இதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் தமது நண்பரான ஸர். ஹென்றி பேக்கர் சில தினங்களுக்குமுன் அவரிடத்தில் செய்த ஒரு வேண்டுகோள் ஞாபகத்துக்கு வந்தது.  ஆங்கிலச் சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் அப்போது புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.  இதைப் புதுப்பிக்கும் குழுவில் ஸர் ஹென்றி பேக்கரும் ஒருவர். இவர் தமது நண்பரான கனோன் ட்வெல்ஸை சில பாடல்கள் எழுதித்தரும்படி கேட்டிருந்தார்.  இவ்வேண்டுகோள் ஞாபகத்துக்கு வரவே, அவர் மாலை வேளையில் வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்ட சம்பவத்தை வைத்து, ‘வியாதியஸ்தர் மாலையில்’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  இப்பாடலுக்கு சங்கீத நிபுணரான ஜியார்ஜ் ஜோசப் அமைத்த, ‘Angelus’ என்னும் ராகம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

     ஆங்கிலத்தில் இப்பாடலின் முதல் வரியான, ‘At even ere the sun was set’ என்பதைக் குறித்து பிற்காலத்தில் அபிப்பிராய பேதங்கள் உண்டாயின. ‘ere the sun was set’ என்பது, ‘சூரியன் அஸ்தமிக்குமுன்’ எனப்பொருள்படும்.  ஆனால் வேதப்பகுதி (மாற்கு 1:32, லூக்கா 4:40) ‘சூரியன் அஸ்தமித்தபோது’ என்றிருக்கிறது. இச்சம்பவம் ஓய்வுநாள் மாலையில் நடந்தது.  ஓய்வுநாள் மாலையில் சூரியன் அஸ்தமித்தபின்னரே யூதர் வேலை செய்வார்கள்.  ஆகையால் சில பாட்டுப்புத்தகங்களில், ‘When the sun was set’ எனத் திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்மொழிபெயர்ப்பில், ‘மாலையில்’ என்றிருக்கிறது.

     இப்பாடலை எழுதிய கனோன் ஹென்றி ட்வெல்ஸ் என்பவர் 1825ம் ஆண்டு பிறந்தார். சிறந்த கல்லூரிப் பயிற்சிக்குப் பின், அவர் 1856 முதல் பதினான்கு ஆண்டுகள் லண்டன் மாநகரிலுள்ள புகழ்பெற்ற, ‘கோடோல்பின் ஹாமர்ஸ்மித்’ உயர்நிலைப்பள்ளியின் (Godolphin School, Hammersmith, London) தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.  அச்சமயத்தில்தான், 1868ல் இப்பாடலை எழுதினார்.  அவர் வேறு அநேக பாடல்கள் எழுதியபோதிலும், இந்த ஒரே பாடல் வாயிலாகவே நினைவுகூரப்படுகிறார்.  பின்னர் பீட்டர்பரோ பேராலயத்தின் பிரதமகுருவாகச் (Honorary Canon of Peterborough Cathedral) சிலகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  அவர் 1900ம் ஆண்டு தமது 77ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.

2.            பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்

3.            விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.

4.            உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே.

5.            மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6.            , கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.

7.            உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.

Post Comment

Tuesday, February 17, 2015

பாமாலை 40 - மெய் ஜோதியாம் நல்

பாமாலை 40 – மெய்ஜோதியாம் நல் மீட்பரே
(Sun of my soul, Thou Saviour dear)

நமதாண்டவர் உயிர்த்தெழுந்தபின், இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் கிராமத்துக்குச் செல்லும்போது, இயேசுவும் அவர்களுடனே கூடச் சேர்ந்து நடந்து போனார்.  கிராமத்தைச் சமீபித்தபோது, அவர்கள், ‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று’ (லூக்கா 24:29) என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்பாடல் எழுதப்பட்டது.  தனிமையாகச் செல்லும் ஒரு பிரயாணி, சூரியன் அஸ்தமித்தபின், இருளில் செல்லும்போது, கடவுள்பேரில் நம்பிக்கைவைத்து, தனக்குத் தேவையான பாதுகாப்பையும், ஒளியையும் அவரே அளிப்பார் என்னும் விசுவாசத்தில் செல்லுவதை இப்பாடல் குறிக்கிறது. மெய்ஜோதியான நம் மீட்பர் நம்மோடு தங்கினால், பயத்தை உண்டுபண்ணும் இரவு போன்ற நிலைமைகள் நமக்கு இல்லை என்பது, இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

John Keble
(Source Credits : Wikipedia)
இப்பாடலை எழுதிய ஜான் கெபிள் போதகர் (John Keble) ஆங்கிலச் சபையைச் சேர்ந்தவர்.  இவர் இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷயர் (Gloucestershire) மாகாணத்தில், பேர்பீல்டு என்னுமிடத்தில் 1792ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தார்.  அவரது தந்தையும் ஓர் ஆங்கிலச் சபையில் குருவாகப் பணியாற்றி வந்தவர்.  இளவயதில் அவரது தந்தையே அவருக்குக் கல்வி கற்பித்தார்.  பதினைந்தாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் (Corpus Christi College, Oxford) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆங்கிலம், லத்தீன் மொழிகளில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.  தமது பதினெட்டாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு ஓரியல் கல்லூரியில் முதல் மாணவனாக (Fellow of Oriel College) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சிறந்த கவித்திறமையுள்ளவராதலால், அவர் பத்து ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.  1815ல் குருத்துவப் பட்டம் பெற்று, தன் ஆயுள் முழுவதும் வின்செஸ்டர் (Winchester) நகருக்கருகிலிலுள்ள ஹர்ஸ்லி (Hursley) என்னும் ஒரு சிறிய கிராமச் சபையில் போதகராகப் பணியாற்றினார்.

அவர் கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே சிறந்த கவிஞராக விளங்கினார். போதகரானபின் குருத்துவப் பணியுடன், பல கட்டுரைகள், கிறிஸ்தவக் கவிகள், அருளுரைகள் முதலியன எழுதிவந்தார்.  அவரது மிகச்சிறந்த கிறிஸ்தவப் பணி, அவர் இயற்றிய ஒரு பாட்டுப்புத்தகமாகும்.  அவர் புகழை விரும்பாதவராதலால், தமது பெயரால் அந்தப் புத்தகத்தை அச்சிடாமல், “கிறிஸ்தவ ஆண்டு” (Christian Year) என்னும் தலைப்புடன் வெளியிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குள், இப்புத்தகத்தின் மூன்று லட்சம் பிரதிகள் விலையாகின.  ‘மெய் ஜோதியாம் நல் மீட்பரே’ என்னும் பாடலும் முதல்முறையாக இப்புத்தகத்தில்தான் வெளியானது.  இப்பாடலுக்கு உபயோகப்படும் ராகம், அவர் ஊழியம் செய்த கிராமத்தின் ஞாபகார்த்தமாக “Hursley” என்றழைக்கப்படுகிறது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை,

‘நாம் நித்திரை செய்து விழித்தோம்’ – பாமாலை 32
‘ஏதேனில் ஆதிமணம்’ – பாமாலை 216

‘கிறிஸ்தவ ஆண்டு” என்னும் இப்புத்தகத்தை விற்றதில் கிடைத்த வருமானத்தை ஆலயங்கள் கட்டுவதற்கும், ஹர்ஸ்லி ஊரிலுள்ள ஆலயத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தினார்.

ஜான்கெபிள் போதகர் 1866ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி போர்ன்மத் என்னும் ஊரில் காலமானார்.  மூன்று ஆண்டுகளுக்குப்பின், அவர் ஞாபகார்த்தமாக ஆக்ஸ்ஃபோர்டு நகரில் கெபிள் கல்லூரி (Keble College, Oxford) நிறுவப்பட்டது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    மெய்ஜோதியாம் நல் மீட்பரே
நீர் தங்கினால் ராவில்லையே
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2.    என்றைக்கும் மீட்பர் மார்பிலே
நான் சாய்வது பேரின்பமே
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3.    என்னோடு தங்கும் பகலில்
சுகியேன் நீர் இராவிடில்
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4.    இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல், வல்ல மீட்பரே
உம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே

5.    வியாதியஸ்தர், வறியோர்
ஆதரவற்ற சிறியோர்
புலம்புவோர் அல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்

6.    பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.

Sun of my Soul

Post Comment

Monday, February 16, 2015

பாமாலை 39 - முடிந்ததே இந்நாளும் (St. Anatolius)

பாமாலை 39 - முடிந்ததே இந்நாளும் 
The day is past and over
Tune : St. Anatolius


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. முடிந்ததே இந்நாளும்
உம்மையே துதிப்போம்
எத்தோஷம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.


2. முடிந்ததே உற்சாகம்;
உள்ளம் உயர்த்துவோம்
எப்பாவம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
ராவை ஒளியாய் மாற்றிடும்
நீர் ராவில் உம்மைக் காத்திடும்


3. முடிந்ததே எம் வேலை
களிப்பாய்ப் பாடுவோம்
எச்சேதமின்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.


4. காப்பீர் எம் ஆத்துமாவை
எம் பாதை நேரிடும்
எம்மோசம் சேதம் யாவும்
உமக்குத் தோன்றிடும்
மாந்தரின் நேசா, கேட்டிடும்
எத்தீங்குமின்றிக் காத்திடும்.

Post Comment

Thursday, February 12, 2015

பாமாலை 38 - நீர் தந்த நாளும் (St. Clement)

பாமாலை 38 - நீர் தந்த நாளும் 
The day Thou gavest Lord is ended
Tune : St. Clement

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
கர்த்தாவே ராவும் வந்ததே
பகலில் உம்மைப் போற்றினோம்
துதித்து இளைப்பாறுவோம்.

2.    பகலோன் ஜோதி தோன்றவே
உம் சபை ஓய்வில்லாமலே
பூவெங்கும் பகல் ராவிலும்
தூங்காமல் உம்மைப் போற்றிடும்

3.    நாற்றிசையும் பூகோளத்தில்
ஓர் நாளின் அதிகாலையில்
துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
ஓர் நேரம் ஓய்வில்லாததே

4.    கீழ்கோளத்தோர் இளைப்பாற
மேல்கோளத்தோர் எழும்பிட
உம் துதி சதா நேரமும்
பல் கோடி நாவால் எழும்பும்.

5.    ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
மாறாமல் ஆட்சி செய்குவீர்;
உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்
சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.

Post Comment

Wednesday, February 11, 2015

பாமாலை 37 - ஞான நாதா வானம் (Ar Hyd Y Nos)

பாமாலை 37 - ஞான நாதா வானம் 
God that madest earth and heaven
Tune : Ar Hyd Y Nos


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. ஞான நாதா, வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை,
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.

2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.

3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர் போன்று,
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடென்றும்.

Post Comment

Tuesday, February 10, 2015

பாமாலை 35 - எங்கள் ஊக்க வேண்டல் (Cairnbrook)

பாமாலை 35 - எங்கள் ஊக்க வேண்டல் 
(Holy Father in Thy mercy)
Tune : Cairnbrook

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
தூய தந்தையே
தூரம் தங்கும் எங்கள் நேசர்
காருமே.

2.    மீட்பரே உம் பிரசன்னத்தால்
பாதை காட்டுவீர்
தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
சோர்வில் நீர்.

3.    துன்பம் தோன்றித் துணையின்றி
மோசம் நேர்கையில்
அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
சோகத்தில்!

4.    மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
பலம் திடனாய்
அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
நாளுமாய்.

5.    தூய ஆவி போதனையால்
தூய்மையாக்குவீர்
போரில் வெற்றிபெற அருள்
ஈகுவீர்

6.    பிதா மைந்தன் தூய ஆவி
விலகாதேயும்
அருள் அன்பு மீட்பு காவல்
ஈந்திடும்.

Post Comment

பாமாலை 3 - உன்னதம் ஆழம் எங்கேயும் (Tune- Gerontius)

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
 
2.    பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!
 
3.    முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்
 
4.    மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்
 
5.    மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே
 
6.    கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்
 
7.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Monday, February 9, 2015

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில்

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில்


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.

Post Comment

பாமாலை 33 - இந்நாள் வரைக்கும் கர்த்தரே (Canon)

பாமாலை 33 - இந்நாள் வரைக்கும் கர்த்தரே 
Glory to Thee my God this night
Tune : Canon

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்.

2.    ராஜாக்களுக்கு ராஜாவே,
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3.    கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4.    நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5.    நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே,

6.    பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே.

7.    அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே.

Post Comment

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து (Melcombe)

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து 
New every morning is the Love
Tune : Melcombe


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

2.    தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.

3.    அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.

4.    நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.

5.    ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.

Post Comment

Sunday, February 8, 2015

பாமாலை 30 - கிருபையின் சூரியா

பாமாலை 30 - கிருபையின் சூரியா

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கிருபையின் சூரியா
நித்திய வெளிச்சமான
நீர், பகல் உதிக்கிற
இப்போதெங்கள் மேல் உண்டான
ராவிருள் அனைத்தையும்
நீக்கவும்.

2.    ஆதித் தாய் தகப்பனின்
பாவத்தாலே லோகமெங்கும்
மூடின மந்தாரத்தின்
விக்கினங்களுக்கிரங்கும்
ஆ, ஒளி விசுவீரே
இயேசுவே.

3.    உமதன்புட பனி
மிகவும் வறட்சியான
நெஞ்சின்மேல் பெய்தருளி,
உமது விளைச்சலான
அடியார் எல்லாரையும்
ஆற்றவும்.

4.    உம்முடைய நேசத்தின்
இன்பமாம் அனலைக் காட்டி
எங்கள் கெட்ட மனதின்
துர்க்குணத்தை அத்தால் மாற்றி,
அதைப் புதிதாகவும்
சிஷ்டியும்.

5.    இயேசுவே, நான் பாவத்தின்
அவசுத்தத்தை வெறுத்து,
உம்முடைய நீதியின்
வெள்ளை அங்கியை உடுத்து,
அதை இன்றும் என்றைக்கும்
காக்கவும்.

6.    நீர் வெளிப்படும் அன்றே
நாங்கள் மா சந்தோஷத்தோடே
மண் படுக்கைகளிலே
நின்றெழுந்திருந்தும்மோடே
சேர்ந்தும்மோடே என்றைக்கும்
தங்கவும்.

7.    அழுகையின் பள்ளத்தை
தாண்டி பரம கதிக்கு
போக நீரே எங்களை
கூட்டிக்கொள்ளும்; அவ்வழிக்கு
நீரே எங்கள் ஜோதியும்
ஆகவும்.















 

Post Comment

Saturday, February 7, 2015

பாமாலை 29 - இராப்பகலும் ஆள்வோராம் (Melcombe)

பாமாலை 29 - இராப்பகலும் ஆள்வோராம் 
Arise, arise my soul
Tune : Melcombe

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இராப்பகலும் ஆள்வோராம்
பராபரனைப் போற்றிடு
முன் செல்வாய் இந்த நாளினில்
உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.

2.    இராவின் இன்பம் அவரே
பகலில் இன்பம் சேவையே!
திருவடியில் மகிழ்வும்
திருப்தியும் ராப்பகலும்

3.    நடப்பது யாதெனினும்
படைப்பாய் அவர் பாதத்தில்
அவரைப் பற்றி பக்தியாய்
ஆன்மமே முழு மனதாய்.

4.    பூலோகம் எங்கும் காண்பாயோ
மேலான நண்பர் இவர்போல்!
கருத்துடன் நடத்திடும்
பரன் இவரைப் பின்செல்வாய்.

5.    ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார்
பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்
சஞ்சலம் சோர்வு நீக்குவார்
தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்

6.    கருவி நீ, கரம் அவர்
சருவம் அவர் திட்டமே;
உன் சுய சித்தம் ஓய்த்திடு
முன்செல் இந்நாள் அவரோடு.















 

Post Comment

பாமாலை 201 - நாதா உம் வார்த்தை (Hesperus)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

 

1.    நாதா உம் வார்த்தை கூறவே
என்னோடு பேசியருளும்
கெட்டோரை நானும் தேடவே
நீர் என்னைத் தேடிப் பிடியும்

2.    வழி விட்டலைவோருக்கு
நான் காட்ட என்னை நடத்தும்
மன்னாவைப் பசியுள்ளோர்க்கு
நான் ஊட்ட என்னைப் போஷியும்

3.    மா துன்ப சாகரத்தினில்
அழுந்துவோரைத் தாங்கவும்
கன்மலையான உம்மினில்
நான் ஊன்றி நிற்கச் செய்திடும்

4.    அநேக நெஞ்சின் ஆழத்தை
என் வார்த்தை ஊடுருவவும்
சிறந்த உந்தன் சத்யத்தை
எனக்குப் போதித்தருளும்

5.    நான் இளைத்தோரைத் தேற்றவும்
சமயோசிதமாகவே
சுகிர்த வாக்குரைக்கவும்
என்னையும் தேற்றும் கர்த்தரே

6.    நான் நேசம் பொங்கும் நெஞ்சினால்
உம் அன்பும் மாண்பும் போற்றவே
உம் பரிபூரணத்தினால்
என் உள்ளத்தை நிரப்புமே

7.    உம் மகிமை சந்தோஷத்தில்
நான் பங்கடையும் வரைக்கும்
உம் சித்தம் காலம் இடத்தில்
நீர் என்னை ஆட்கொண்டருளும்
*********************************************************************

Post Comment

பாமாலை 26 - நல் மீட்பரே (St. Matthias)

பாமாலை 26 – நல் மீட்பரே இந்நேரத்தில்
(Sweet savior bless us where we go)
St. Matthias


Frederick W. Faber (1814–1863)
இந்தப் பாடலை எழுதிய ஃப்ரெட்ரிக் வில்லியம் (Frederick William Faber) 1814ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் அப்பல்கலைக்கழகத்தின் கீழியங்கும் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்தார். பின்னர் 1839ல் ஆண்டவரின் அழைப்பை ஏற்று ஆயர் பட்டம் பெற்று Rector of Eltonஆகப் பணிபுரியத் துவங்கினார்.  மூன்று வருடங்கள் பின்னர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் தம்மை இணைத்துக்கொண்டார். தனது ஆயர் பணிக்காலத்தில் அநேக பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதிய ஃப்ரெட்ரிக், தனது பாடல்களை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டார்.  ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை பாடல் புத்தகத்தில் இவர் பாடல்கள் பரவலாக இடம்பெற்றன.  Fountain of love, Thyself true God, How shalt thou bear the Cross, I come to Thee, once more, O God, Joy joy the Mother comes, My soul what hast thou done for God? ஆகிய பாடல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


Post Comment

Wednesday, February 4, 2015

பாமாலை 407 - விண் வாசஸ்தலமாம் (The Blessed Home)

பாமாலை 407 - விண் வாசஸ்தலமாம் 
There is a Blessed Home
Tune : The Blessed Home

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே;
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே
விஸ்வாசம் காட்சி ஆம்
நம்பிக்கை சித்திக்கும்
மா ஜோதியால் எல்லாம்
என்றும் பிரகாசிக்கும்.

2.    தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்

3.    தெய்வாட்டுக்குட்டியின்
கை கால், விலாவிலே
ஐங்காயம் நோக்கிடின்
ஒப்பற்ற இன்பமே!
சீர் வெற்றி ஈந்ததால்
அன்போடு சேவிப்போம்!
பேரருள் பெற்றதால்
என்றைக்கும் போற்றுவோம்

4.    துன்புற்ற பக்தரே
விண் வீட்டை நாடுங்கள்
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள்
இத்துன்பம் மாறுமே
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார்.

Post Comment

பாமாலை 406 - மின்னும் வெள்ளங்கி பூண்டு

பாமாலை 406 – மின்னும் வெள்ளங்கி பூண்டு
(Ten thousand times ten thousand)

’அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது’ வெளி 5 : 11

புதிய எருசலேமில் ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து, ஆயிரக்கணக்கான தெய்வதூதரும், பரிசுத்தவான்களும் ஓயாமல் பாடிக்கொண்டிருப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கிறது (வெளி 5).  இக்காட்சியை மனக்கண்களினால் கண்ட மேல்நாட்டு சங்கீத நிபுணர்கள் அதைக்குறித்து மிகச்சிறந்த பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  உலகப்புகழ்பெற்ற, ‘Hallelujah Chorus’ என்னும் பாடலை ஜியார்ஜ் ப்ரெட்ரிக் ஹான்டல் என்னும் சங்கீதநிபுணர் எழுதும்போது ‘மோட்சமண்டலம்’ என் கண்முன்னால் திறந்திருப்பதையும், சகல மகிமையுடன் மகத்துவமுள்ள தேவன் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் காண்பதாக எனக்குத் தோன்றியது’ எனக்கூறியுள்ளார்.  ஹான்டல் எழுதிய இப்பாடல், சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக கிறிஸ்து வீற்றிருக்கும்போது தெய்வதூதர் சூழ நின்று பாடிய பாடலாக எழுதப்பட்டது.

Rev. Henry Alford
ஆங்கிலச்சபை ஆலயங்களில், ஆராதனையின் ஆரம்பத்தில் பாடகர் வெண்ணுடை தரித்து, வாசலிலிருந்து பாடிக்கொண்டு பவனியாக பீடத்தண்டையிலிருக்கும் பாடகர் இருப்பிடத்துக்கு செல்லுவது வழக்கம்.  ஆங்கிலத்திருச்சபையின் தலைமையிடமாகக் கருதப்படுவது, இங்கிலாந்தில் உள்ள கன்டர்பரி நகரம் (City of Canterbury).  இங்குள்ள பேராலயம் (Cathedral) மிகவும் அழகு வாய்ந்தது.  இவ்வாலயத்தில் 1867ம் ஆண்டு, ஹென்றி ஆல்ஃபொர்ட் (Rev. Henry Alford) என்பவர் பிரதம குருவாகப் பணியாற்றினார்.   ஓர் ஓய்வுநாள் காலை ஆராதனை சமயத்தில், சபையார் எழுந்து நிற்க, பாடகர்களும், குருவானவர்களும் பாடிக்கொண்டு பவனியாக செல்லும்போது, பவனியின் பின்னணியில் சென்ற ஆல்ஃப்ரெட் போதகர், அவ்வழகிய பேராலயத்தினுள் வெண்ணுடை தரித்துப் பாடகர் பவனி செல்வதைக் கண்டு பரவசமடைந்து, மோட்ச மண்டலத்தில் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்தைச் சூழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் தெய்வதூதர் பாடகர் குழுவை மனக்கண்களில் கண்டார்.  ஆராதனைக்குப்பின், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறியபடி, ஆயிரக்கணக்கான தெய்வதூதர் சிங்காசனத்தை சூழ்ந்து பாடிக்கொண்டிருப்பதை ஆதாரமாகக்கொண்டு ஒரு பவனி கீதம் (Processional Hymn) எழுத எண்ணங்கொண்டார். 
இதன் விளைவாக கிறிஸ்தவ உலகம் பெற்றது ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார்’ என்னும் மோட்ச மகிமையைக் குறித்த பாடல்.  இதை அவர் ஒரு பவனிகீதமாகவே எழுதினார்.  இப்பாடலுக்கு, ஜான் பாக்கஸ் டைக்ஸ் (John Bacchus Dykes) என்னும் சங்கீத நிபுணர் ஓர் அழகிய ராகத்தை அமைத்து அதற்கு, ‘Alford’ எனப்பெயரிட்டார்.  இதுவே நாம் இப்பாடலுக்கு உபயோகிக்கும் ராகம்.  இப்பாடல் முதன்முதலாகக் கன்டர்பரி பேராலயத்தில்தான் பாடப்பட்டது.

இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபொர்ட் என்பவர் 1810ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் பிறந்தார்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரித்துவக்கல்லூரியில் திறமையுடன் பயின்று, உயர்பட்டங்கள் பெற்றார்.  ஆங்கிலத்திருச்சபையில் பல இடங்களில் திருப்பணியாற்றியபின், 1857 முதல் 1871 வரை கன்டர்பரி பேராலயத்தின் பிரதமகுரு (Dean) ஆகப் பணியாற்றினார்.  இச்சமயத்தில்தான் அவர், ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு’ முதலிய பல பாடல்கள் எழுதினார்.  மேலும், ஐம்பது கிறிஸ்தவ நூல்களும், கிரேக்கமொழியில் புதிய ஏற்பாட்டைக்குறித்த நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.  சிறந்த கவித்திறனும், சங்கீதத்திறனும் ஓவியத்திறனும் பெற்றவர்.  திருமறையின் ஆழ்ந்த கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான பல விளக்க நூல்களும் எழுதினார்.  அவரது கடுமையான உழைப்பின் விளைவாக, 1870ல் அவர் உடல்நிலை மிகக்குன்றி, 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி காலமானார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ‘நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை’ (பாமாலை 180)


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.

2.    முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும்,
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம் பேரின்பமே.

3.    அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும் சேர்ந்திடும்

4.    சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர்
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.
Ten Thousand Times Ten Thousand

Post Comment