Saturday, August 25, 2018

Little beam of rosy Light (சின்ன ஒளிக்கதிர் யார்)

சின்ன ஒளிக்கதிர் யார்
(Little beam of rosy light)

ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் 8500க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர்.  கிராஸ்பி எழுதி, ஜாஸ் நாப் (Mrs. Jos F Knapp) இசையமைத்த அற்புதமான பல பாடல்களுள் ‘சின்ன ஒளிக்கதிர் யார்’ பாடலும் ஒன்றாகும். 1980’களில் நம் தமிழ் திருச்சபைகளின் ஞாயிறு பள்ளிகளில் பாடப்பட்டு வந்த இப்பாடல் இப்போது வெகு அரிதாகவே பாடப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். மிகவும் பொருள் நிறைந்த அற்புதமான இப்பாடலை அறியாதோர்க்கு கொண்டு சேர்ப்பதே இப்பதிவின் நோக்கமாகும்.  திருச்சபைகளின் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள்  மிக எளிமையான ராகத்தில் அமையப்பெற்ற அழகிய இப்பாடலை பிள்ளைகளுக்கு கொண்டு சேருங்கள்.

ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் ஃபானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார். 

ஃபானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

ஃபானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம். ’சின்ன ஒளிக்கதிர் யார்’ பாடலை அவர் எழுதியதன் பின்னணி குறித்த விபரங்கள் தெரியவில்லை. ஃபானி கிராஸ்பி அம்மையார் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பிப் பற்றிகொண்டேன் (S.S. 873)


பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. சின்ன ஒளிக்கதிர் யார்
உனக்கொளி கொடுத்தார்? – எங்கள் பிதா
தங்க நிறக்குருவி
எங்கு பாடக் கற்றாய் நீ? – பிதாவிடம்
எங்கள் பிதா தேவனே
எல்லாம் தந்தார் அன்பரே.

2. சின்ன இன்பப் பூவே யார்
உனக்கழகு தந்தார்? – எங்கள் பிதா
மலை நாட்டு ஓடையே
ஓடச் செய்ததார் சொல்லேன்? – எங்கள் பிதா

3. இன்ப முகப் பாலகா
பூரிப்புனக் கேதையா? – பிதா தந்தார்
பட்சி போல் எக்களிப்பாய்
எங்கு பாடப் படித்தாய்? - பிதாவிடம்








































Sheet Music in English Credits - Hymnary.Org


1. Little beam of rosy light,
Who has made you shine so bright?
" Tis our Father."
Little bird with golden wing,
Who has taught you how to sing?
" Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

2. Little blossom, sweet and rare,
Who has made you bloom so fair?
"Tis our Father."
Little streamlet in the dell,
Who has made you, can you tell?
"Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

3. Little child, with face so bright,
Who has made your heart so light ?
"Tis our Father."
Who has taught you how to sing
Like the merry bird of spring?
"Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

Post Comment

Thursday, August 16, 2018

Have Thine own way (உம் சித்தம் தேவா)

உம் சித்தம் தேவா
(Have Thine own way Lord)

‘ஆண்டவரே எந்நிலையிலும் எப்படியாகிலும் எங்கள் வாழ்வில் உம் சித்தம் மட்டுமே நிறைவேறச் செய்திடும்’

ஒரு வயதான மூதாட்டியார் ஓர் இரவு ஜெபக்கூட்டத்தில் ஏறெடுத்த இந்த எளிமையான ஜெபமே, உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, இந்தப் பிரபல அர்ப்பணப் பாடல் எழுதப்பட மூலகாரணமாயிற்று.  அன்று முதல் இந்நாள்வரை தனி நபர்கள் தங்கள் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்து, கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்பட இப்பாடல் உற்சாகப்படுத்தி வருகிறது.

Adelaide-A.-Pollard
இப்பாடலின் ஆசிரியர் சகோதரி அடிலெய்ட் பொல்லார்ட் (Adelaide A. Pollard) (1862-1934) அமெரிக்காவின் லோவா (Lowa) மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர்.  தனது படிப்பை முடித்தவுடன் ஒரு பெண்கள் பள்ளியில் அவர் ஆசிரியையாகப் பணிபுரியத் துவங்கினார்.  கூடவே பல்வேறு இடங்களுக்குச் சென்று வேதாகம ஆராய்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கினார்.

ஆப்பிரிக்காவிற்கு ஓர் மிஷினெரியாகச் சென்று ஊழியம் செய்யவேண்டும் என்ற ஆத்தும தாகம் அவருக்கு மிகுந்திருந்தது.  இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக அவர் பணம் திரட்டும் பணியில் இருந்தபோது அவர் நினைத்த அளவு பணம் திரட்டமுடியாத காரணத்தால் மிகுந்த மனவேதனைக்குட்பட்டார். அப்படி ஒரு நாள் வேதனையின் மத்தியில் இரவு ஜெபக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது, முழங்காற்படியிட்டு "It really doesn't matter what you do with us, Lord -- just have your way with our lives . . .." என்ற முதல் பத்தியில் உள்ள ஜெபத்தை ஏறெடுத்து, வீட்டிற்குத் திரும்பியவுடன் ஒரு காகிதத்தை எடுத்து நாம் இன்று பாடும் “Have Thine own way Lord” பாடலை எழுதி முடித்தார்.  பொல்லார்ட், இப்பாடலை எழுதும்போது, எரேமியா 18ம் அதிகாரத்தில் உள்ள நான்காம் வசனமாகிய ”தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்” என்பதன் அடிப்படையில் சரணங்களை அமைத்தார்.

‘ஒரு சிறந்த பரிசுத்தப் பெண்மணி’ என்று பெயர்பெற்ற அடிலெய்டு அடிசன் பொல்லார்டு துறவறத்தை மேற்கொண்டவர்.  அவர் அயோவாவின் ப்ளூம்பீல்ட் என்ற இடத்தில் 27.11.1862 அன்று பிறந்தார்.  தனது பெற்றோரால் சாராள் என்று பெயரிடப்பட்டார்.  ஆனால், அப்பெயரை விரும்பாததால், பிற்காலத்தில் அடிலெய்டு என்ற பெயரைத் தனக்கெனத் தெரிந்துகொண்டார்.  பொல்லார்டு தன் வாழ்நாள் முழுவதும் பல பாடல்களை இயற்றினார்.  ஆயினும் தனக்கெனப் பேரும் புகழும் விரும்பாத இவர், இப்பாமாலைகளில் தன் பெயரை A.A.P எனச் சுருக்கமாகக் கையெழுத்திட்டார்.  எனவே இப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை விபரம் உலகிற்குத் தெரிய வாய்ப்பில்லை.  இவரது பாடல்களில், இப்பாடல் ஒன்றே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


George Coles Stebbins
1902ம் ஆண்டில் அடிலெய்ட் இப்பாடலை எழுதிமுடித்த ஐந்து வருடங்கள் கழித்து, ஜார்ஜ் ஸ்டெப்பின்ஸ் (George Stebbins) இப்பாடலுக்கு ”Adelaide” என்ற ராகத்தை எழுதினார்.  அவரது பாடல் தொகுப்பான ‘Northfield Hymns” என்ற பாடல் புத்தகத்தில் 1907ம் ஆண்டு முதன்முறையாக இப்பாடல் அறிமுகமானது.  ’தூய்மை பெற நாடு” போன்ற பல பாமாலைகளுக்கும் இசையமைத்த பெருமை ஸ்டெப்பின்ஸையே சேரும்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. உம் சித்தம் தேவா என் பாக்கியம்
குயவன் நீர்தாமே களிமண் நானே
உம் சித்தம் போலே ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே  பூரணமாய்

2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாழ்ந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்

3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
நோக்குமே எந்தன் காயங்களை
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்

4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவை என்னில் நான் காட்டவும்
என்னை உம் ஆவியால் நிரப்பும்!

நன்றி: ”131 பாடல் பிறந்த கதை”

Post Comment

Sunday, August 12, 2018

கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே,

”கிறிஸ்தவப் பாமாலைகளுடன் கீர்த்தனைகளையும் பதிவேற்றுங்கள்” என்று பலரிடமிருந்து தொடர்ச்சியாக வந்த அன்பு வேண்டுகோளைத் தொடர்ந்து கீர்த்தனைகளைப் பற்றியும் பதிவிடலாம் என்று எண்ணினேன்.

எங்கள் ஆலயத்தில் நாங்கள் பாடும் கீர்த்தனைகளை சிலவற்றைப் பதிவு செய்து YouTube பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளேன்.

துவக்கத்தில், ஆலயத்தில் ஆராதனையின்போது பாடப்படும் பாடல்களை என் அலைபேசியில் பதிவு செய்து வந்தேன். அப்பாடல்களின் ஒலித்தரம் ஒழுங்கற்று இருந்த காரணத்தால் இப்போது Audio Mixer'ல் இருந்து பதிவு செய்து அப்பாடல்களைத் தரவேற்றுகிறேன்.  இப்படிப் பதிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளைக் கேட்க விரும்புவோர் இந்தத் ⇉ தளத்தில் அவற்றைக் கேட்கலாம்.  இதுவரை 94 கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் தரவேற்றம் செய்ய ஆண்டவர் கிருபை செய்தார்.  Audio Mixer'ல் இருந்து நல்ல ஒலித்தரத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட கீர்த்தனைகளின் முன்னால் "HQ" என்று Prefix செய்துள்ளேன்.

ஆண்டவரின் அடியார்கள் ஜெபித்து, உபவாசித்து, தங்கள் வாழ்வனுபவங்களில் இருந்து இயற்றிய பொருள் நிறைந்த பாமாலைகள் மற்றும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் சிறப்புகளை அறிய ஆவல் கொண்டிருக்கும் நம் சகோதரருடன் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிருங்கள். பொருளற்ற வார்த்தைகள், இரைச்சலான இசையுடன் கூடிய பாடல்களின்பால் ஈர்க்கப்பட்டுள்ள, நம் ஆலயங்களின் இளம் தலைமுறையினர்க்கும், அடுத்த சந்ததியர்க்கும் இந்த பொக்கிஷங்களைக் கொண்டு சேர்ப்பது நம் கடமை. இந்த வலைத்தளத்தைத் தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்போருடன் பகிர்ந்து, தங்கள் ஆதரவைத் தொடர்ந்து நல்குங்கள் !
  

இப்பக்கத்தை மேலும் மெருகூட்ட, பொருள் நிறைந்ததாக்க, இன்னும் அநேகர்க்குப் பயனுள்ளதாக்கத், தங்களின் மேலான கருத்துகள் / ஆலோசனைகளை எதிர்நோக்குகிறேன்.

கர்த்தர் ஒருவருக்கே எல்லா மகிமையும் !
***********************************************

கிறிஸ்தவக் கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

’திருச்சபை’ / ‘தேவார்ச்சனை’ எனும் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இக்கீர்த்தனையை எழுதியவர் திரு. ஜி.சே.வேதநாயகம் என்று நம் கீர்த்தனை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனந்தபைரவி ராகத்தில், ஆதிதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடல் நம் ஆலயங்களில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. 

இப்பதிவில் நாங்கள் பாடியிருக்கும் ராகம்தான் இதன் மூல ராகமா அல்லது பின்னர் உருவாக்கப்பட்ட வேறேதும் ராகமா என்பது குறித்தத் தகவல் இல்லை. இங்கே இப்பாடல் பாடப்பட்டுள்ள ராகத்தை எங்கள் ஆலயத்தின் பாடகர் குழு தலைவர், ஒரு இசைப்பேழையில் கேட்டு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இப்பாடலுக்கான இசையை நாங்கள் பாடியவண்ணமே எழுதி கீழே கொடுத்துள்ளேன்.

’திருச்சபை’ ‘ஆலயம்’ ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய ஞாயிறு ஆராதனைகளில் தியானிக்கவும், ஆலயப் பிரதிஷ்டை போன்ற சமயங்களில் பாடவும், இக்கீர்த்தனை உகந்தது.




ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி
ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில்

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்

1.    பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்‌ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே

2.    பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி

3.    தனித்தியானத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோடர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலங்கு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார் சுதன் சிந்தையில் வளர்ந்தென்றும் அன்பதில் ஒன்றவே திரு

Post Comment

Friday, August 10, 2018

பாமாலை 180 - நீ குரூசில் மாண்ட

பாமாலை 180 - நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
(In token that thou shalt not fear)


Henry Alford
இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபோர்ட் 1810ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், 1833ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஆம்ப்ட்டன் (Ampton) என்ற கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் ஆயராகத் தம் ஊழிய வாழ்வைத் துவக்கினார்.  ஏறக்குறைய 38 ஆண்டுகள் தம் ஊழியத்தைத் தொடர்ந்த இவர், தம் ஊழியக்காலத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியது மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளிலிருந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பணியையும் ஆர்வத்துடன் செய்தார்.  அப்படி இவர் தொகுத்த பாடல்களின் பட்டியல் நெடியது. “In token that thou shalt not fear’ எனும் இப்பாடலை அவர் எச்சூழலில் எழுதினார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இப்பாடல் வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவர் எழுதிய St.Stephen எனும் ராகத்தில் அமையப்பெற்றுள்ளது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கை பண்ணவும்
அஞ்சாவண்ணம், உன்நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்

2.  கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காதபடிக்கும்
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்

3.  நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும் படிக்கும்

4.  நீ கிறிஸ்து சென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல் சிலுவை
சகித்தீடேறவும்

5.  கிறிஸ்துவின் அடையாளத்தை
சபைமுன்னே பெற்றாய்
நீ அவர் குருசைச் சுமந்தால்
பொற்கீரிடம் பூணுவாய்

1.         In token that thou shalt not fear
Christ crucified to own,
We print the cross upon thee here,
And stamp thee His alone.

2.         In token that thou shalt not blush
To glory in His Name,
We blazon here upon thy front
His glory and His shame.

3.         In token that thou shalt not flinch
Christ's quarrel to maintain,
But 'neath His banner manfully
Firm at thy post remain.

4.         In token that thou too shalt tread
The path He travell'd by,
Endure the cross, despise the shame,
And sit thee down on high;

5.         Thus outwardly and visibly
We seal thee for His own:
And may the brow that wears His cross

Hereafter share His crown.

Since I could not find a Choir' version of the hymn ”In token that thou shalt not fear” in YouTube, I've posted below the hymn "In Christ There is no East or West" which has been sung in the same tune, "St. Stephen".

Tune : St. Stephen (Hymn : In Christ There is no East or West)

Post Comment