Sunday, April 10, 2022

பாமாலை 341 - ஒன்றே தேவை என்றுரைத்தீர் (Bavarian 43)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


Page 2

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர்
ஸ்வாமி, அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக் கழைத்தீர்,
மாய்கையை அரோசிப்பேன்;
நான் உலகை எத்தனை தழுவினாலும்,
பலதிலே மெத்த உழன்றறுத்தாலும்
அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்
அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.

2. இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால், கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்
அகப்படப் பண்ணுவர், அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.

3. இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே;
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்தால், மனத்தில் பூரித்தாளே.

4. நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே, என் இயேசுவே,
அன்புக் கொண்டேன்; நீர் என்னோடே
ஐக்யமாகும், ஜீவனே
பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே,
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.

5. இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்குது.
உம்மோடே நான் ஐக்கியமாம் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதுக்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
சரியாம் தித்திப்பை ருசித்து மிரேன்.

6. ஆகையாலே நான் தெரிந்து,
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும், இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
என் கால்களை மோட்ச வழியிலே காரும்:
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே
இருக்குவும்; மற்றது குப்பை யாமே.

Post Comment