Wednesday, March 19, 2014

பாமாலை 337 - உம்மை ராஜா விசுவாச

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

SATB with Descant

Descant only


1. உம்மை ராஜா விசுவாச
பக்தியாய்ப் பணிகிறேன்
தாழ்மையோடும் கண்ணீரோடும்
தேவரீரை அண்டினேன்
நீர் மண்ணான பாண்டமான
என்னை அன்பாய்ப் பாருமேன்.

2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த
அருள் செய்யும், கர்த்தரே;
என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட
மேய்ப்பரான உம்மையே
சேர்வேனாக, நீர் அன்பாக
என்னைப் பாரும், இயேசுவே.

3. தயவோடே நீர் உம்மோடே
ஐக்கியமாம் எல்லாருக்கும்
ஈவதான இன்பமான
அருள் என்மேல் வரவும்;
யாவும் நீரே, தேவரீரே
என்னைப் பார்த்து ரட்சியும்.

4. ஆ, என் ஞானப் பொழுதான
தெய்வ ஆட்டுக்குட்டியே
எனதாவி உம்மைத் தாவி
தேடும், மணவாளனே;
பட்சத்தோடும் தயவோடும்
என்னைப் பாரும், மீட்பரே.

5. ஏங்கலோடும் பணிவோடும்
என்னுடைய ஆத்துமம்,
வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்
சத்தம் கேட்டென் சஞ்சலம்
தீர்ப்பீராக; நீர் அன்பாக
என்னைப் பார்த்தால் பாக்கியம்.

6. உலகத்துப் பொய்ச் சம்பத்து
மாயையும் சிங்காரமும்
ஆன நல்ல செல்வம் அல்ல,
நெஞ்சை அவை வாதிக்கும்;
மெய் வாழ்வான நீர் அன்பான
பார்வை தந்து ரட்சியும்.

Post Comment

4 comments: