Thursday, February 17, 2022

பாமாலை 332 - இயேசு பாவி நேசர்தாம்

பாமாலை 332 -  இயேசு பாவி நேசர்தாம்
Jesus nimmt die Sunder an
Bavarian 100 - 7.8.7.8.7.7

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  இயேசு பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்,
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

2.  நாம் மகா அபாத்திரர்,
அவர் கிருபை புரிந்தோர்,
ரட்சிப்போம் என்றாண்டவர்
சத்தியமிட்டே மொழிந்தோர்
அவர் கிருபாசனம்;
இயேசு பாவி நேசர்தாம்.

3.  மந்தையில் காணாதது
மேய்ப்பன் கையினால் திரும்பும்;
பாவத்தில் விழுந்தது
அவர் கையினால் எழும்பும்;
கெட்டுப்போக மாட்டோம் நாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

4.  அழும் பாவிகளையே
தம்மண்டைக் கழைக்கிறாரே,
வரும் பாவியைத் தாமே
தெய்வ பிள்ளையாக்குவாரே;
அதை நம்பி வரலாம்.
இயேசு பாவி நேசர்தாம்.

5.  துக்கப்பட்டென் பாவத்தை
அறிவிக்க இங்கே வந்தேன்;
மீட்பரே, நீர் கிருபை
செய்யும் அப்போ மீட்பைக் கண்டேன்,
போயிற்றென் வியாகுலம்;
இயேசு பாவி நேசர்தாம்.

6.  பாவம் சிவப்பாகிலும்
பஞ்சைப் போலாம்; எக்கறையும்
அவர் ரத்தம் கழுவும்;
நீதியின் வெள்ளங்கியையும்
தாறார், அது நிச்சயம்;
இயேசு பாவி நேசர்தாம்.

7.  மனச்சாட்சி குத்தினால்
பாவம் தீர்ந்ததென்று சொல்வார்.
மோசே குற்றம் சாட்டினால்
அவர் பிணை நின்றுகொள்வார்.
நீங்கிற்றாக்கினை எல்லாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

8.  இயேசு பாவி நேசர்தாம்,
அவர் என்னையும் நேசித்தார்;
நானும் வந்து சேரலாம்,
எனக்கும் மன்னிப்பளித்தார்;
சாவு ஆதாயமுமாம்,
இயேசு பாவி நேசர்தாம்.

Post Comment

No comments:

Post a Comment