Monday, March 4, 2013

பாமாலை 115 - கூர் ஆணி தேகம் (St. Margaret)

பாமாலை 115 - கூர் ஆணி தேகம் 
Tune : St. Margaret


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.

2.    தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.

3.    எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.

4.    நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை.

5.    உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.

6.    ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.

Post Comment

No comments:

Post a Comment