Wednesday, May 15, 2013

பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா (Day of Rest)

பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா 
O Jesus, I have promised
Tune : Day of Rest

SATB

 Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.

2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.

3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி 
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.

4. ”பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்”,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
“இதோ, பின்செல்வேன்,” என்று
பிரதிக்னை பண்ணினேன்.

5. ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்.

Post Comment

No comments:

Post a Comment