Tuesday, December 17, 2013

பாமாலை 61 - பக்தரே வாரும் (Adeste Fideles)

பாமாலை 61 – பக்தரே வாரும்
O Come all Ye faithful
(Tune: Adeste Fideles)

John Francis Wade
முந்நூறு ஆண்டுகளுக்கு பழமையான பாடல் என்ற சிறப்புடைய ’பக்தரே வாரும்’ என்ற பாமாலை லத்தீன் மொழியில் Adeste Fideles என்று துவங்கும் பல்லவியுடன் எழுதப்பட்டது.  இதனை மூல மொழியான லத்தீன் மொழியில் எழுதியவர் ஜான் ஃப்ரான்ஸிஸ் (John Francis Wade, 1711-1786) என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர் ஒருவரேயல்லாமல், ஜான் ரீடிங் (John Reading, 1645-1692) மற்றும் போர்த்துகீய நான்காம் ஜான் மன்னர் (King John IV of Portugal, 1604-1656) ஆகியோரின் பங்களிப்பும் இப்பாடலை உருவாக்கியதில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.  இருப்பினும் இப்பாடலின் பல்வேறு பழமையான இசைக்குறிப்புகளில் ஜான் ஃப்ரான்ஸிஸ் அவர்களின் கையொப்பம் காணப்படுவதால்.  இவரே இப்பாடலை எழுதி இசைக்குறிப்பும் தந்தவர் எனக்கருதப்படுகிறது. நான்கு பல்லவியுடன் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இப்பாடல், பின்னர் பல்வேறு பாடலாசிரியர்களின் கைவண்ணத்தில் எட்டு பல்லவியுடன் நெடியதோர் பாடலாக உருவெடுத்து, உலகின் பல்வேறு மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.

The Original Manuscript (Adeste Fideles)


O Come All Ye Faithful” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பை, பிரிட்டனைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஃப்ரெட்ரிக் ஒக்கேலே (Rev. Frederick Oakley) என்பவர் 1841ம் ஆண்டு எழுதினார்.  

Unison with Descant
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant







































1.            பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
2.    தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர்
வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
3.    மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
‘விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!”
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
4.    இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும்
உண்டாகவும்
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை. ஆமேன்

Post Comment

No comments:

Post a Comment