Saturday, October 19, 2013

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Tune : Northrop)

பாமாலை 72 – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
(While Shepherds watched their flocks)
Tune : Northrop

புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16 - ம் தூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் "Psalter' என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன.

இப்பாடல்கள் கரடுமுரடான அமைப்பாக இருந்ததால் , அவற்றைப் பாடுவது கடினமாக இருந்தது . எனவே , சங்கீதங்களை நவீன முறையில் மாற்றியமைத்து , எளிதில் பாடும்படி அமைக்க , 1696 - ம் ஆண்டு , இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களான நாகூம் டேட்டும்  (Nahum Tate) (1652-1715), நிக்கோலஸ் பிராடியும் (Nicholas Brady) முயற்சி எடுத்தனர் .  

கடும் எதிர்ப்புகள் மத்தியில் , வில்லியம் அரசனின் ஆதரவுடன் , இப்புதிய அமைப்பு சங்கீதங்கள் இங்கிலாந்து திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1700ம் ஆண்டு, சங்கீதங்களின் மற்றொரு துணைத் தொகுப்பையும் வெளியிட்டனர்.  இத்தொகுப்பில், சங்கீதங்களைத் தவிர, 16 பாடல்களையும் அறிமுகம் செய்தனர் .  1782ம் ஆண்டுவரை Church of England’ அங்கீகரித்திருந்த ஒரே கிறிஸ்துபிறப்பின் கீதமாக (Christmas Carol) இப்பாடல் இருந்தது. Nahum Tate ’ராக்காலம் பெத்லேம்’ பாடலுக்கான வரிகளை எழுதினார். 16ம் நூற்றாண்டின் William H Monk என்பவர் இயற்றிய ”Winchester Old” எனும் ராகத்தில் இப்பாடல், Ancient & Modern புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் வெளியிடப்பட்டது.

வேதாகமத்தில் வரும் "தேவ தாதர்கள் மேய்ப்பர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் சம்பவத்தை", எளிய நடையில் கிறிஸ்மஸ் கீதமாக இப்பாடலில் எழுதினார் நாகூம் டேட். இந்த கிறிஸ்மஸ் பாடல், பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்மஸ் தரும் உண்மையான மகிழ்ச்சியை சுட்டிக் காட்டும் பாடலாக விளங்குகிறது .


தகவல்கள் பகிர்வு நன்றி: திரு. மன்னா செல்வகுமார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.    அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன், ‘திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்’.

3.    ”தாவீதின் வம்சம் ஊரிலும்,
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்”.

4.    ”இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்”.

5.    என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதரோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.    ”மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்”.



While shepherds watched their flocks by night,
All seated on the ground,
The angel of the Lord came down,
And glory shone around,

Fear not! said he, for mighty dread
Had seized their troubled mind.
“Glad tidings of great joy I bring
To you and all mankind”.

“To you, in David’s town, this day
Is born of David’s line
A Savior, who is Christ the Lord,
And this shall be the sign”.

The heavenly Babe you there shall find
To human view displayed,
All meanly wrapped in swathing bands,
And in a manger laid.

Thus spake the seraph and forthwith
Appeared a shining throng
Of angels praising God on high,
Who thus addressed their song:

All glory be to God on high,
And to the Earth be peace;
Good will henceforth from Heav’n to men
Begin and never cease!

Post Comment

No comments:

Post a Comment