Sunday, April 26, 2020

பாமாலை 204 - எழும்பெழும்பு நவமாக

பாமாலை 204 – எழும்பெழும்பு நவமாக
(Wach auf, du Geist der ersten Zeugen)
Words: Carl Heinrich von Bogatzky
Meter : 9, 10, 9, 10, 10, 10
Bavarian 40


Karl Heinrich von Bogatzky

‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 204ம் பாடலான ‘எழும்பெழும்பு நவமாக” எனும் இப்பாடல், ‘திருச்சபை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘Wach auf, du Geist der ersten Zeugen’ எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தை எழுதியவர் கார்ல் போகஸ்கி (Carl Heinrich von Bogatzky). இவரது காலம் 1690-1774. தன் வாலிப வயதில் சட்டம் மற்றும் வேதாகமக் கல்வியைப் பயின்ற கார்ல், உடல்நிலை நலிவுற்று வேதாகமக் கல்வியை நிறைவு செய்ய முடியாத காரணத்தால், திருச்சபையில் போதகராக பணிபுரியும் வாய்ப்பை இழந்தார். இதனால் சுயாதீனத் திருச்சபைகளில் தமது அருளுரைகளை வழங்கத் துவங்கிய கார்ல், சிலகாலம் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்தார்.  இங்கே தங்கியிருந்த காலத்தில், கார்ல் பல்வேறு வேதாகமத் தெளிவுரைகளை எழுதி பதிப்பிக்கத் துவங்கினார்.  1718ம் ஆண்டு பாடல்களும் எழுதத் துவங்கிய இவர், தம் வாழ்நாளில் 411 பாடல்களை எழுதியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1. எழும்பெழும்பு நவமாக,
பூர்வீக சாட்சிகளின் ஆவியே;
அநேகர் சாமக்காரராக
மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே,
பேயை எதித்தெஜ் ஜாதியாரையும்
அழைத்து சுவிசேஷம் கூறவும்.

2. , உமதக்கினி எரிந்து,
எத்தேசமும் பரம்பச் செய்யுமேன்.
கர்த்தாவே, கிருபை புரிந்து,
நல் வேலையாட்களை அனுப்புமேன்.
இதோ, உமதறுப்பு, கர்த்தரே,
விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே.

3. உமது மைந்தனே தெளிவாக
இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே.
அத்தாலே எங்கும் தாழ்மையாக
உமது பிள்ளைகள் உம்மிடமே
சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும்
மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும்.

4. உமது மைந்தனே கற்பித்த
இவ்விண்ணப்பத்தைத் தள்ளப் போவீரோ,
உம்முட ஆவி போதிப்பித்த
மன்றாட்டும்மாலே கேட்கப்படாதோ,
ஏன், நாங்கள் செய்யும் இந்த ஜெபமே
உமது ஆவியால் உண்டானதே.

5. அநேக சாட்சிகளைத் தந்து,
நற்செய்தி எங்கும் கூறப் பண்ணுமேன்
சகாயராய் விரைந்து வந்து,
பிசாசின் ராஜியத்தைத் தாக்குமேன்.
நீர் மகிமைப்பட, எத்தேசமும்
உமது ராஜியம் பரம்பவும்.

6. உமது சுவிசேஷம் ஓடி,
பரம்பி எங்கும் ஒளி வீசவே
புறமதஸ்தர் கோடாகோடி
அத்தாலே தீவிரித்தும்மிடமே
வரக்கடாட்சித் திஸ்ரவேலையும்
உமது மந்தையில் சேர்ந்தருளும்.

7. நமதிருதயத்துக் கேற்ற
நல் மேய்ப்பரை அனுப்புவோம் என்றீர்.
உமது வாக்கை நிறைவேற்ற
மகா உட்கருத்தாயிருக்கிறீர்.
எங்கள் மன்றாட்டு நிறைவேறிப்போம்.
என்றையமின்றி ஆமேன் என்கிறோம்.



Post Comment

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தம்பி, add "ச" to the first word, second line of the Sceond Stanza of the Lyrics. It should be "எத்தேசமும்".
    Thanks Thampi.

    ReplyDelete
    Replies
    1. Thank you for pointing out the error Annan. Corrected.

      Delete