Wednesday, January 5, 2022

பாமாலை 291 - நான் எங்கே ஓடுவேன்?

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


 
1. நான் எங்கே ஓடுவேன்,
மா பாதகனானேன்;
தீட்பெங்கும் என்னை மூடும்,
ஆர் ஆதரிக்கக் கூடும்?
என் திகில் லோகத்தார்கள்
அனைவரும் நீக்கார்கள்.
 
2. அன்புள்ள, இயேசுவே,
வா என்று சொன்னீரே,
என் மனதும்மைப் பற்றும்;
என் கிலேசமும் இக்கட்டும்
தணிய, தயவாகத்
திடன் அளிப்பீராக.
 
3. என் பாவத்தால் உண்டாம்
விசாரத்தோ டெல்லாம்,
நான் எனக்காய் மடிந்த
உம்மண்டையே பணிந்த
ஜெபத் தியானமாக
வந்தேன், ரட்சிப்பீராக.
 
4. சிந்துண்ட உம்முட
இரத்தத்தால் எல்லா
அழுக்கும் என்னில் நீங்கும்;
என் நோயில் என்னைத் தாங்கும்;
கடலின் ஆழமட்டும்
என் பாவங்கள் விழட்டும்.
 
5. என் ஆறுதல் நீரே,
உம்மால் மீட்பாயிற்றே;
என் தீட்பெல்லாம் மறைய,
நீர் அதை உம்முடைய
குழியிலே அடைத்தீர்,
அங்கே அதைப் புதைத்தீர்.
 
6. என் குற்றம் பெரிது,
ஆனாலும் உமது
இரத்தமும் பலியும்
பலிப்பதால் கழியும்;
உம்மண்டை வந்து சேரும்
எல்லாரின் நெஞ்சும் தேறும்.
 
7. ஆ, ஸ்வாமீ, உம்முட
இரத்தம் சருவ
உலகையும் ரட்சித்து,
பேய் வாய்க்கும் தப்புவித்து,
எக்கேட்டையுந் தடுக்கும்
பலத்தைப் பெற்றிருக்கும்
 
8. இப்போதும் உம்மையே
நான் சார்ந்தேன், இயேசுவே,
துக்கித்தும்மண்டை வந்தேன்,
உம்மால் மன்னிப்பைக் கண்டேன்
நான் நரகத்தைக் காணேன்
நான் ஜீவனுக்குள்ளானேன்.
 
9. இனி நான் உம்மிலே
பிரிதலின்றியே
நிலைத்து வளர்ந்தேற,
அவயவமாய்த் தேற,
நீர் என்னை சாவுமட்டும்
நல்லாவியால் நடத்தும்.


Post Comment

No comments:

Post a Comment