Wednesday, January 26, 2022

பாமாலை 319 - உன் நெஞ்சிலே உண்டான (Cruger)

பாமாலை 319 - உன் நெஞ்சிலே உண்டான 
Tune : Cruger

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  உன் நெஞ்சிலே உண்டான 
விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி;
விண்மண்ணை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவர்.

2.  ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி, மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம், ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு.

3.  ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர்;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ, அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர்.

4.  பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும்;
நீர் செய்வது இசையும்,
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
மொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.

5.  இக்கட்டுகளினாலே
கலங்கினோனே, நீ
திடன் கொள், கர்த்தராலே
இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும்,
சற்றே பொறுத்திரு;
நீ பூரிப்பாய்க் கொண்டாடும்
நாள் வரப்போகுது.

6.  உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனி விசாரத்துக்கு
இடங்கொடாதிரு;
நீ ஆளும் தெய்வமல்ல,
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி.

7.  நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார்;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார்.

8.  அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசீர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து, இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய்.

9.  கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும்;
ஆ, எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்,
அப்போ பிழைக்கிறோம்.















 

Post Comment

No comments:

Post a Comment